Monday, July 16, 2018

#நந்தியாவட்டம் பூ சாகுபடி செய்த வில்லியம் சேசு வின் அனுபவம்

#நந்தியாவட்டம் பூ சாகுபடி செய்த வில்லியம் சேசு வின் அனுபவம்







வில்லியம் சேசு என்பவர் 
முன்பு பந்தலில் அவரை, புடலை பாகல், பீர்க்கு சாகுபடி செய்து வந்தார். தற்பொழுது சேலத்திற்கு தன்னுடைய மாமா வீட்டுக்கு சென்றுள்ளார்.

அவர் மாமா வீட்டுக்கு அருகில் நந்தியாவட்டம் பூ சாகுபடி செய்து பந்தலில் கட்டிவிட்டுள்ளதை பார்த்து விவரத்தை தெரிந்து கொண்டு ஏன் திண்டுக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய்யக்கூடாது சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுக்கவேண்டும் என்று முடிவு செய்தார்.

அதன் பிறகு மேட்டுப்பாளையம் சென்று நந்தியாவட்டம் பூ பதியத்தை வாங்கி வந்து தன்னுடைய வயலில் ஒரு ஏக்கர் நிலத்தில் நந்தியாவட்டம் பூ சாகுபடி செய்துள்ளார்.

ஒரு பதியத்தின் விலை 13ரூபாய் செலவு 2 ரூபாய் வரும் ஆக மொத்தம் ஒரு பதியத்தின் விலை 15 ரூபாய் செலவு செய்து 300 பதியன்கள் நடவு செய்துள்ளார்.

நடவு செய்வது ஒரு அடி ஆழம் ஒரு அடி அகலம் ஒரு அடி உயரம் உள்ள குழி எடுத்து அதில் பதியத்தை வைத்து நடவு செய்துள்ளார்.

செடிக்கு செடி இடைவெளி 8 அடியும் வரிசைக்கு வரிசை 10 அடியும் இடைவெளி விடவேண்டும் 
சொட்டுநீர் பைப் அமைத்துள்ளார் 18 mm பைபில் 16 mm பை கேட்வால் அமைத்து தண்ணீர் விட்டு வருகிறார்

 மருந்து அடிப்பது இல்லை ஆனால் உரம் மாதத்திற்கு ஒரு முறை எந்த உரம் வேண்டுமானாலும் போடலாம் உயிர் உரங்கள் எருவில் கலந்து வைக்கலாம், டிஏபி, பொட்டாஷ் கலந்து வைக்கலாம் .

இவை மரப்பயிர் போல் அதிகமாக வளரும் நாம வளர விடாம 6.5 அடி மற்றும் 8 அடிக்கு மேல் வளர விடாமல் ஒடித்து விடனும் அப்பொழுது பக்க கிளைகள் அதிகமாக தோன்றும் தண்ணீர் அதிகம் இருந்து பாய்ச்சினாலும், மழை இருந்தாலும் செடி வேகமாக வளரும் தன்மை கொண்டது
.
இவை காற்று அடித்தால் ஒடிந்து விடும் அவற்றின் கிளைகளை சனல் கொண்டு பந்தலில் கட்டி விட வேண்டும். தண்ணீர் பாயும் பொழுது ஹூமிக்காஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து விட்டு வருகிறேன் நன்றாக உள்ளது.

செடி நடவு செய்து 3 முதல் 4 மாதத்தில் பூ வர ஆரம்பிக்கும் ஒரு செடியில் 100 கிராம் வரை இப்பொழுது பூ வருகிறது பூ எடுக்கும் பொழுது பச்சை காம்புகளுடன் ஒடித்து எடுக்க வேண்டும்

அப்படி ஒடித்து எடுக்கும் பொழுது பால் வரும் அந்த பால் கையில் ஒட்டிக்கொண்டால் ஒரு சிலருக்கு சேராது சேரவில்லை என்றால் கையில் புண் வந்துவிடும் ஆகையால் பூ எடுக்கும் பொழுது கையில் கையுரை அணிந்து கொள்ளலாம்

அதிகமான விவசாயிகள் பயிர் செய்தால் இங்கேயே வியாபாரிகள் எடுத்து செல்வார்கள் இப்பொழுது விற்பனைக்கு ஒரு கிலோ பையாக போட்டு திண்டுக்கலிருந்து சேலத்திற்கும் அதன்பிறகு ஒசூருக்கு கொண்டு சென்று அடுத்த நாள்தான் விற்பனையாகும்.

மேலும் தொடர்புக்கு 

No comments:

Post a Comment

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள்

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள். =================================  February 7, 2019 (ப.ப) இன்றைக...

உழவர் சந்தை