#ஆதொண்டை...
அதண்டம், ஆதண்டை, பாப்பாருகாய், காத்தோடி கொடி என்ற வழக்குபெயர்களாலும் Ceylon caper என்ற English பெயராலும் Capparis horrida என்ற தாவரவியல் பெயராலும் அடையாளபடும் இது கொடிவகையை சார்ந்தது.
ஆதியிலிருந்தது ஆடிமாதத்தில் சாப்பிடும் கட்டாய உணவுகளில் முதன்மையானது ஆதொண்டை. இலைகளை ரசம்(Soup), துவையல், கீரையாகவும் காய்களை துவையல், வற்றல், ஊறுகாய் என அனைத்து வகைகளாகவும் பயன்படுத்தலாம். இதில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால் எலும்பு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்யும். துவர்ப்பு கலந்த கசப்போடு இருக்கும் இதை மருந்தாக பயன்படுத்தும் போது பசியைதூண்டி செரிமான பிரச்சினைகளை தீர்க்கும் மூச்சு பிரச்சினைகளுக்கும் நல்ல பலனைதரும்.
மழை, ஈரப்பதம் காரணமாக ஆடிமாதத்தில் நோய்தொற்று அதிகமாக இருக்கும் இந்த காலத்தில் நோய் எதிர்ப்பு தன்மையுள்ள உணவுகளை பரிந்துரைத்தார்கள் முன்னோர்கள். அதனாலேயே வேம்பு, மஞ்சள், ஆதொண்டை போன்றவை கட்டாய உணவாக்கப்பட்டது. ஆடி பிறப்பு, ஆடி அமாவாசைக்கு கண்டிப்பாக பயன்படுத்தும் வழக்கம் பல சமுகங்களில் இன்றளவும் இருக்கிறது.
தஷ்ணாமூர்த்திக்கும், கடகராசிக்கும் பரிகார பூவாக இதன் பூவை பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது.
வானியல் காரணம் இந்த தாவரம் சூரியன் தஷ்ண(தெற்க்கு) அயணத்தில் நகர ஆரம்பிக்கும் காலத்தில் அதாவது ஆடி முதல்நாளிலிருந்து ஆரம்பிக்கும் இந்த காலத்தில் அதிகமாக பூக்கும். இதே காலத்தில்தான் ஜோதிடப்படி சூரியன் கடக ராசியில் குடியிருப்பார் யோசித்தால் விசயம் இவ்வளதான் அதிகம் கிடைக்கும் காலத்தில் பயன்படுத்துவது.
இதன் பழங்கள் குரங்குகளுக்கு அதிகம் பிடிக்கும். காய்கலிருந்து எடுக்கும் பசை நெசவுத்தொழிலிலும் சாராயம் காய்ச்சவும் பயன்பட்டிருக்கிறது...
No comments:
Post a Comment