அப்பக்கோவை.
இது கொடி வகையை சேர்ந்ததாக இருந்தாலும் இதன் இலைகள் கீரைகளைப்போல சமைத்து சாப்பிடப்படுகிறது. அப்பக்கோவை அரிதான செடி என்பதால் இதற்கு அரியகோவை என்ற வேறுபெயரும் உண்டு. இக்கீரை ஈரப்பசையுள்ள இடங்களில் செழித்து வளரும்; வேலிகளில் படர்ந்து காணப்படும். இக்கீரையை வீட்டிலும் வளர்க்கலாம். இதன் இலைகளை கசக்கினால் ஒருவித வாசனை வரும். இதன் பூக்கள் சிறிய அளவில் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
அப்பக்கோவை இலையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி,சி ஆகியவை உள்ளன. கோவை இலைக்கு என்னென்ன மருத்துவக் குணங்கள் உள்ளனவோ அனைத்தும் அப்பக்கோவை இலைக்கும் உண்டு. சிறுவர்களுக்கு வரும் சளி, இருமல் ஆகியவற்றை அகற்றும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு. குழந்தைகளுக்கு சளி, இருமல் இருந்தால் அப்பக்கோவை கீரையின் சாற்றை பாலில் கலந்து சங்கில் ஊற்றினால் பலன் கிடைக்கும். இதுதவிர இயற்கை மருத்துவத்தில் இன்னும் வேறுபல பிரச்னைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment