Wednesday, July 25, 2018

“கொழிஞ்சி “

 "கொழிஞ்சி " 



நவீன விவசாயத்தால் நாம் இழந்த அற்பதமான உரச் செடி இந்த "கொழிஞ்சி " இந்த செடி வயலில் இருந்தால் வயலுக்கு உரம் ஏதும் தேவையில்லை, இயற்கை அழித்த மிகப் பெரிய கொடை , இன்று தஞ்சை பகுதியில் கோடை நெல் சாகுபடியால், இந்த பயிர் இனம் அழிந்து விட்டது,காரணம் முன்பெல்லாம் ' கோடை யில், எள், கடலை', உளுந்து, பயறு வகைகளை மட்டும் பயிர் செய்து வந்தனர், அதனுடன் இயற்கையாக இந்த கொழிஞ்சி பயிர் முளைத்து வரும், அது தான் கொழிஞ்சி செடி வளரும் சீசன் மேலும் அதை கால்நடைகள் உண்டு மீண்டும் எருவாக அதன் விதை மீண்டும் வயலுக்கு வரும் இது தொடர்த்து நடைபெற்றது, ஆனால்நாளடைவில் முப்போகம் நெல் சாகுபடியால் இந்த செடியினத்தை அழித்து விட்டோம் அதிக தன்னீரில் இந்த பயிரினம் அழிந்து விடும், இச் செடி நல்ல ஒரு இயற்கை உரம்... இப்போது உள்ள மின் தட்டுப்பாடு, நிலத்தடி நீர் தட்டுபாடு, நியாமற்ற விலை ஆள்பற்றாக்க குறை , ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கோடையில் நெல் சாகுபடியை தவிர்த்து பணப் பயர்களான உளுந்து, கடலை, பயறு வகை களைசாகுபடி செய்தால் நல்ல லாபமும் கிடைக்கும், இந்த கொழிஞ்சி இனத்தை மீட்டு அடுத்து வரும் குருவை , சம்பா சகு படிக்கு தேவையன கொழிஞ்சி நம் வயலில் இயற்கையாக முளைக்க வழி செய்யலாம் ' மேலும் உரச் செலவை குறைக்கலாம்'. இயற்கையோடு இனைந்து இச் செடியை மீட்போம்.......

No comments:

Post a Comment

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள்

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள். =================================  February 7, 2019 (ப.ப) இன்றைக...

உழவர் சந்தை