“கோழி அம்மை.”
இது கோழிகளை எல்லாப் பருவத்திலும் தாக்கக்கூடிய ஒரு நச்சுயிரி நோயாகம். தொண்டை, மூக்கு, தாடைச் சதை, அலகின் ஓரங்கள், வாய், கால்கள் ஆகிய இடங்களில் கொப்புளங்கள் தோன்றிய பிறகு புண்ணாக மாறிப் பின் உலர்ந்து உதிரும். நோயுற்ற கோழிகளை மற்ற கோழிகளிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும்.
வெளிப்பூச்சுக்கான மருந்து.
பூண்டு 10 பல், மஞ்சள் தூள் 10 கிராம், துளசி இலை 50 கிராம், கற்பூரம் 5 கிராம், வேப்பிலை 50 கிராம், சின்ன சீரகம் 20கிராம் ஆகியவற்றை நன்கு அரைத்து விளக்கெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெயைச் சம அளவில் எடுத்து சூடுகாட்டிப் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசவேண்டும்.
வாய்வழியாக
5 எண்ணிக்கை மிளகை இடித்துப் பின், சின்ன சீரகம் 10 கிராம், பூண்டு 5 பல், மஞ்சள் 5 கிராம், 10 வேப்பிலை, 10 துளசி இலைகள் கலந்து அரைத்து இக்கலவையை திவனம் அல்லது அரிசி குருனையில் கலந்து கொடுக்கவும்.
No comments:
Post a Comment