Wednesday, July 18, 2018

இயற்கை விவசாயத்தில் நோய்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை...

நோய்களை இயற்கை முறையில் 
கட்டுப்படுத்தும் முறை...















உளுந்து, தட்டைபயறு, பாசிப்பயறு சாகுபடி செய்வதால் சாம்பல் நோய்  தாக்கும் அவற்றை கட்டுப்படுத்த 

ஒரு ஏக்கருக்கு 10 கிலோ யூக்கலிப்டஸ் இலையில் சாறு எடுத்து அவற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேலையில் தெளிக்க வேண்டும்.

கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் மறுபடியும் அடுத்த வாரம் ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் யூக்கலிப்டஸ் இலைச்சாறு எடுத்து அவற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேலையில் தெளிக்க வேண்டும்.

வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த
அடி உழவு போடும் போது ஒரு ஏக்கருக்கு டிரைக்கோடெர்மா விரிடி 2 கிலோவை 100 கிலோ தொழு எருவில் கலந்து வயலில் தூவி விட வேண்டும்.
 அவற்றுடன் 75 கிலோ வேப்பம் புண்ணாக்கு அடி உழவில் போட்டு வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.

வாடல் நோய் கருகல் நோய், இலைப் புள்ளி நோய் போன்ற நோயை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு சூடோமோனஸ் 2 கிலோவை 100 கிலோ தொழு எருவில் கலந்து வயலில் தூவி விட வேண்டும்

 அல்லது சூடோமோனஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் என்ற அளவில் கலந்து செடிக்கு அருகில் ஊற்றி விடலாம் அல்லது தெளிக்கலாம். 

சாறுறிஞ்சும் பூச்சி மற்றும் புழுக்களை கட்டுப்படுத்த
மஞ்சள் அட்டை நிறப்பொறி ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் வைத்து பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.

 இனக்கவர்ச்சி பொறி ஒரு ஏக்கருக்கு ஒன்று வைத்து ஆண் அந்து பூச்சிகளை கவர்ந்து கட்டுப்படுத்தலாம்

No comments:

Post a Comment

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள்

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள். =================================  February 7, 2019 (ப.ப) இன்றைக...

உழவர் சந்தை