கொடிவகைக் காய்கறி பயிர்களில் அதிக விளைச்சல் பெற!!!
கொடிவகைக் காய்கறி பயிரில் பெண் பூக்கள் அதிகம் பூக்க செய்ய வேண்டியவை
பொதுவாக கொடிவகைக் காய்கறி பயிரில் ஆண் பூக்கள், பெண் பூக்கள் தனித்தனியாக பூக்கும்.
செடிகளில் ஆண் பூவை காட்டிலும் பெண் பூ அதிகமா இருந்தால் தான் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைக்கும். எனவே எல்ல கொடி வகை பயிர்களுக்கும் எத்திரல் என்னும் வளர்ச்சி ஊக்கியை 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற அளவில் செடிகளில் 4 இலைகள் தோன்றும் தருணத்தில் இருந்து ஒரு வார இடைவெளியில் நான்கு முறை தெளிக்க வேண்டும்.
இந்த வளர்ச்சி ஊக்கி கெளிப்பதால் பெண் பூக்கள் அதிகம் பூக்கும்.பூக்கள் அதிகரித்தவுடன் மூன்றுநாட்கள் புளிக்க வைத்த தயிர் 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி அவற்றுடன் மில்லி 5 கிராம் பெருங்காயத்தை ஊறவைத்து எடுத்த கரைசலை சேர்த்து காலை அல்லது மாலை நேரத்தில் தெளித்து வந்தால் பூக்கள் கொட்டாது காய் அதிகமாக எடுக்கும்
No comments:
Post a Comment