கத்தரி சாகுபடியில் சாறுஉறிஞ்சும் பூச்சியை கட்டுப்படுத்தும் முறை
கத்தரியில் பெருமாபாலும் இலைப்பேன், தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, அஸ்வினி முதலிய பூச்சிகள் செடிகளில்; உள்ள சாற்றை உறிஞ்சுவதால் இவற்றை சாறுஉறிஞ்சும் பூச்சிகள் என அழைக்கப்படுகிறது.
இந்த பூச்சிகள் செடிகளில் உள்ள சாற்றை உறிஞ்சுவது மட்டும் அல்லாமல் மற்ற செடிகளிலும் உறிஞ்சிய சாற்றை உமிழ்ந்து விடுவதால் வைரஸ் நோயையும் பரப்புகிறது. பிறகு. செடிகள் இளமஞ்சள் நிறமடைந்து காய்ந்து உதிர்ந்து விடும்.
இயற்கை முறையில் சாறுஉறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த
வரிசைப் பயிராக உளுந்து, தட்டப்பயறு, துவரை முதலிய பயறுவகை பயிர்களை வாய்காலில் நடவு செய்து சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
அல்லது
சாறுஉறிஞ்சும் பூச்சி, நோய் தாக்கிய செடிகளை வயலில் இருந்து அகற்றி விடவேண்டும்.
மஞ்சள் நிறப்பொறி அல்லது ஊதா நிறப்பொறி ஒரு ஏக்கருக்கு பத்து இடங்களில் வைத்து கட்டுப்படுத்தலாம்.
அல்லது
தாவர இலைச்சாறு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
அசிபேட் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் அவற்றுடன் அசிட்டமா பிரைடு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
மேலும் தொடர்புக்கு
முகநூலில் பார்க்க – rsgaseed
யூடியூப்பில் பார்க்க rsgaseed kannivadi
வலைதளம் – rsga.co.in, l3fpedia.com
No comments:
Post a Comment