Thursday, August 2, 2018

மாடுகள் சினை பிடிக்கவில்லையா..?? இதை முயற்சி செய்யுங்கள்

மாடுகள் சினை பிடிக்கவில்லையா..?? இதை முயற்சி செய்யுங்கள்



மாடு வளர்ப்பு, குறிப்பாக நாட்டு மாடுகள் வளர்ப்பு இப்போது பரவலாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நாட்டு மாடுகள் வளர்ப்போர் தங்கள் மாடுகளுக்கு இயற்கை சார்ந்த பராமரிப்பு முறைகளை பின்பற்றுவதிலே ஆர்வமாய் உள்ளனர். மாடு வளர்ப்பவர்களுக்கு தேவைப்படும் இயற்கை வைத்திய முறைகளின் தொகுப்பு இதோ….

#1. பருவத்திற்கு வராத மாடுகளுக்குக்கான வைத்தியம்

தொடர்ந்து ஒரு மாத காலம் காலை வேளையில் வெறும் வயிற்றில் சோற்றுக்கற்றாழை மடல் ஒன்றை கொடுத்து வரவேண்டும்.

கால்நடைகளிற்கு சோற்றுக்கற்றாழையை எடுத்துக் கொள்ளும் போது அதன் தோலை நீக்கி அதன் உள்பகுதியை (நொங்கை) நான்கைந்து முறை பச்சை தண்ணீரில் அலசி கொடுத்து வர வேண்டும்.

சினை மாடு sinai pidikaatha maadugal

#2. பல வருடம் பருவத்திற்கு வராத மாடுகளுக்குக்கான வைத்தியம்

நல்ல நசியத்திற்கு (பருவத்திற்கு/Heatக்கு) வந்த இரு தினங்கள் கழித்து கால்நடை மருத்துவரை வரழைத்து அதன் கர்ப்பபையை சுத்தம் செய்து மற்றும் சில மாடுகளின் கர்ப்பபையினுள் உள்ள கட்டிகளை அகற்றிவிட்டு அதற்கு அடுத்த நாள் முதல் அதிகாலை வெறும் வயிற்றில் ஒருவாரம் கைபிடியளவு சீரகத்தை கரும்பு சர்க்கரையுடன் கலந்து கொடுக்க வேண்டும்.

இரண்டாவது வாரம் தோல் நீக்கிய நன்கு அலசிய சோற்றுக்கற்றாழை மடலை தினமும் வெரும் வயிற்றில் கொடுக்க வேண்டும்.

மூன்றாவது வாரம் தினமும் வெறும் வயிற்றில் இரு கையிடி அளவு பிரண்டை அல்லது முருங்கை இலை தொடர்ந்து ஏழு நாட்கள் கொடுத்து வர வேண்டும்” இது தஞ்சை பகுதி இயற்கை வழி கால்நடை மருத்துவர் திரு.புண்ணியமூர்த்தி ஐயா அவர்களின் குறிப்பு.

மொத்தம் 21 நாட்கள் இந்த வைத்தியம் முடிந்தவுடன் வரும் அடுத்த பருவத்தில் கட்டாயமாக பூச்சிக்காளையுடன் ( Stud bull ) இனச்சேர்க்கை செய்யவும். இப்படி செய்தால் பல வருடம் பருவத்திற்கு வராத மாடும் கட்டாயம் சினை பிடிக்கும்.

Maadu valarppu

#3. சினை பிடிக்காத மாடுகளுக்கு

ஆனை நெருஞ்சியை அல்லது நாட்டு மருதாணி இலை வெறும் வயிற்றில் இரண்டு முதல் மூன்று வாரங்களிற்கு அளித்து வந்தால் கட்டாயமாக சினை பிடிக்கும்.

தொகுப்பு : கு.மகேஷ்குமார் (திருப்பூர்), இயற்கை விவசாயி, வெட்டுக்கு செல்லும் காங்கேய இன மாடுகளை கடந்த நான்காண்டுகளாக காடையூர் கொங்கு கோசாலை குழுவினருடன் இணைந்து காங்கேய மாடுகளை மீட்டு விவசாயிக்கு அதே விலையில் வளர்ப்புக்கு தந்து வருகிறார்கள். கொங்க கோசாலை குழுவினரின் முயற்சியில் இனிதே துவக்கம் கண்டு சிறப்பாக செயலாற்றி வரும் பிரத்யேகமான காங்கேய இன மாட்டுச் சந்தை “பழையகோட்டை மாட்டுத்தாவணி” ஆகும்.

No comments:

Post a Comment

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள்

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள். =================================  February 7, 2019 (ப.ப) இன்றைக...

உழவர் சந்தை