தூதுவளை ஓர் வகைக் கொடியாகும். தூதுவளையின் மறுபெயர் "கூதளம்" என்பதாகும். சிறு முட்கள் காணப்படும். இதன் வேரும் இலையும் கைப்பு, கார்ப்பு சுவையுடையது. தூதுவளையை சமைத்துச் சாப்பிட கபத்தால் உண்டாகும் காதுமந்தம், காதெழுச்சி, காசம், நமைச்சல், அக்னி மாந்தம், தேக உட்குத்தல், விந்து நட்டம் ஆகியவை நீங்கும். தூதுவளைப் பூவை நெய்யில வதக்கி தயிருடன் சாப்பிட விந்து கட்டும், அறிவு விருத்தியாகும். தூதுவளை இலையைத் துவையல் செய்து சாப்பிட மாந்தம், தாது நஷ்டம், இளைப்பு இவைகள் போகும். தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது. புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம். சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.
Subscribe to:
Post Comments (Atom)
உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள்
உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள். ================================= February 7, 2019 (ப.ப) இன்றைக...

உழவர் சந்தை
-
ஆடு வாங்குவதற்கு மூன்று மாதத்திற்கு முன்பு ஆடு வாங்குவதற்கு மூன்று மாதத்திற்கு முன்பு இந்த வகையான தீவனதில் எதாவது மூன்று கண்டிப்பா...
-
மூலிகை படங்களும்,பெயர்களும்.. மூலிகைகளை பற்றி சில விஷயங்கள் நாம் அனைவருமே ஏதோ ஒரு நோயினால் அவதிபடுகிறோம். சின்ன தலைவலி வந்தாலே தாங்கம...
-
சித்தகத்தி அல்லது கருஞ்செம்பை: இது ஒரு மூலிகைச் செடி. இது ஒரு குறுமர வகை ஆகும். இதன் பூக்களும்,இலைகளும் மருத்துவக் குணம் கொண்டவை....
No comments:
Post a Comment