Wednesday, May 29, 2019

சிகப்பரிசி


இன்று கேரள மக்களால் அதிகளவில் உண்ணப்படும் சிகப்பரிசியின் (ப்ரவுண் ரைஸ், மட்டை அரிசி) பிறப்பிடம் தமிழகத்தில் குறிப்பாக மதுரை யில் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

1982 ல் இங்கிலாந்து ஹெல்த் யுனிவர்சிட்டி இந்தியாவில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் அதிக வாழ்நாளை கொண்ட மக்கள் வாழும் இடம் எது? எப்படி?

இரண்டு வருட ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட மாவட்டம் "மதுரை". மதுரை மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது கணக்கிடப்பட்டது. என்ன காரணம்?

அங்கு விளைவிக்கப்பட்ட சிகப்பரிசி எனும் அரிசி வகைதான் காரணம். அதையே உட்கொண்டதுதான் காரணம் என்பதை ஆய்வின் முடிவில் அறிந்தனர்.

சிகப்பரிசி. உரம் தேவையில்லை. இயற்கையாக இருக்கும் ஒருவகை ஆண்டி ஆக்சிடண்ட் காரணமாக பூச்சிகள் நெருங்குவதில்லை. எனவே பூச்சி மருந்து அவசியமில்லை. தண்ணீர் மற்றவைகளை விட குறைந்த அளவு போதுமானது. விளைச்சல் சாதாரண அரிசியை விட நான்கு மடங்கு அதிகம்.

"மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று,
யானை கட்டி போரடித்த அழகான தென்மதுரை"

என இலக்கியம் பேசுகிறது இந்த அரிசியை பற்றி. யானை மெதித்து நெல் எடுக்கும் அளவுக்கு விளைச்சல் அதிகமாம்.

கவளம் என்றால் (யானைக்கு தரப்படும் ஒரு வாய் உருண்டை உணவு 1 கவளம் ஆகும். ஒரு ஃபுட்பால் அளவு). ஒருவேளைக்கு யானை 8 முதல் 12 கவளம் தரப்படும். ஆனால் மதுரையில் சிகப்பரிசியில் செய்த 4 கவளம் யானைக்கு போதுமானதாம்.

நார்சத்து மிக அதிகம், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது, செம்மண்ணில் விளைந்த ஒரு பொக்கிஷம். எனவே தான் இன்றும் மதுரையில் 90 வயதுக்கு மேல் வீட்டுக்கு ஒரு பாட்டி ஐம்புலன்களும் நன்கு செயல்பட உழைத்து கொண்டிருக்கும். வயதளவில் மட்டும் வயதானவர்களை இன்றும் மதுரையில் காணலாம். அவர்களுக்கு சுகர் என்றால் என்னவென்றே தெரியாது. இரத்தக்கொதிப்பா அப்டினா என்பார்கள். தைராய்ட் னா சாப்பிடும் தயிரா என்பார்கள். குறைந்தது 6 முதல் 12, 15 பிள்ளைகள் பெற்றிருப்பார்கள். பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடும் வழக்கம் கிடையாது. மருத்துவமனை இன்று வரை செல்லாதவர்கள் அவர்கள்.

ஆனால் இந்தநிலை எப்படி ஏன் மாறியது.?
உரம், பூச்சி மருந்தை அதிகளவில் தன் நாடுகளில் தயாரித்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் இங்கிலாந்து, லண்டன், அமெரிக்கா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் இச்சிகப்பரிசியினால் தன் பொருட்களுக்கு அவசியம் குறைவதால், மக்களை வெள்ளை அரிசியின் மோகத்தை தூண்டி சிகப்பரிசியை சரித்திரத்தில் மறைத்தனர்.

நம் பாரம்பரியத்தை மறந்து நாமும் இன்று மருத்துவமனை கதியாய் இருக்கிறோம். தாய் வீட்டில் பிறந்ததால் முன்பு அடிக்கடி பிறந்த வீடுகளுக்கு சென்று அங்கு விளைந்ததை பெருமைக்காக வாங்கி வந்த பரம்பரை. இன்று மருத்துவமனை யில் பிறந்ததால் அடிக்கடி பிறந்த வீடான மருத்துவமனை சென்று அங்கிருந்து மருந்துகளை வாங்கி வந்து உட்கொள்ளும் அவலம் இந்த பரம்பரையில் மாறிவிட்டது நம் அவலநிலை.

சிகப்பரிசி இன்றும் கிடைக்கிறது. விலை 80ரூபாய் வரை. மீண்டும் இதையெல்லாம் அதிகளவு விளைவிக்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்காது. காரணம் வெளிநாட்டு உரம், பூச்சி மருந்து இறக்குமதியில் அரசுக்கும் கமிஷன் பெருமளவில் செல்கிறது.

மனிதனின் ஆயுள் பொதுவாக 120. ஒவ்வொருவரும் 40வருடங்கள் என 40x3=120. மூன்று தலைமுறை கண்டவர்கள் நம் முன்னோர்கள். 120 வருடங்கள் நம் பாட்டனும் பூட்டனும் வாழ்ந்திருக்கிறார்கள். வாழந்தது போதும் என தானாகவே "வடக்கிருந்து"(தனக்காக ஒரு சமாதி கட்டி வடக்கு நோக்கி அதில் அமர்ந்து இறைசிந்தனையில் மூச்சை அடக்கி உயிர் துறத்தல்) உயிர்விட்டவர்கள் ஏராளம். அவர்களே இன்று நம் குலதெய்வங்களாக பலரால் வணங்கப்படுகிறது. ஆய்வு செய்து பாருங்கள் பேச்சியம்மா, ஆண்டியப்பன், பெரியகருப்பன், அங்கம்மா, இப்படிப்பட்ட குலதெய்வங்கள் சாஸ்த்திரத்தில் இலக்கியங்களில் இல்லை. பிறகு எப்படி குல தெய்வங்கள் ஆனார்கள்? நம் குலத்தை சிறப்பாக வழிநடத்திய வாழவைத்த முன்னோர்கள் அவர்கள்.

பாரம்பரியம் அறிவோம்!
புராதான உணவுகளை உண்போம்!
வாழ்வதற்காக உண்!
உண்பதற்காக வாழாதே!
உங்கள் பிள்ளைகளுக்கு ஏ பி சி டி யை விட நம் பாரம்பரியத்தை முதலில் அறியச்செய்யுங்கள்.
சரித்திரங்களை விதையுங்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வேலுநாச்சியாரை உங்கள் பிள்ளைகளுக்கு பள்ளி அஸைன்மென்ட் காக மட்டும் சொல்லிக் கொடுக்காதீர்கள். "மகனே/மகளே, அவர்களெல்லாம் சில தலைமுறைகளுக்கு முந்தையவர்கள் தான். அவர்கள் வாழ்ந்த அதே ஊர்களில் தான் நாமும் இருக்கிறோம். அவர்களுக்கு இருந்த அதே வீரமும், திறமையும் நமக்குள்ளும் இருக்கிறது மறவாதே! " அவர்கள் உண்ட உணவு இதுதான், வாழ்க்கைமுறை இதுதான் என இயற்கையையும், தன்னம்பிக்கையையும், வீரத்தையும் பிள்ளைகள் மனதில் விதையுங்கள். நிச்சயம் பழைமை திரும்பும். மனிதன் 120 வருடங்கள் மீண்டும் ஆரோக்கியத்துடன் வாழ்வான்.

Tuesday, May 28, 2019

தோல் நோய்களைக் குணமாக்க நுணா..எனும் மஞ்சணத்தி எனும் மஞ்சள் நீராட்டி...

எல்லா வித நிலங்களிலும் வளரக் கூடிய சிறு மரம்..மா இலை போன்றும், எதிரடுக்கில் அமைந்த இலைகளையும், நாற்கோண சிறு கிளைகளையும் சிறிய வெண்னிற மலர்களையும் முடிச்சுமுடிச்சாக்காய்களையும் கருப்பு நிறப் பழங்களையும்உடைய மரம்..

 சுமார் 15 அடிஉயரம் வரை வளரும். மரத்தின் உடபுறம் மஞ்சள் வண்ணமாயிருக்கும். அதனால் மஞ்சணத்தி என்றழைக்கப்பட்டது. பட்டைகள் தடிப்பாக இருக்கும். விதைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

தோல் நோய்களைக் குணமாக்கும்..
வெப்பம் தணிக்கும்..வீக்கம் கரைக்கும்..மாந்தம், கல்லீரல், மண்ணீரல் கோளாறுகளைத் தீர்க்கும். பசியைத் தூண்டும்.

 இதன் இலை நடுவிலிறுக்கின்ற ஈர்க்குகளை எடுத்து அதனுடன் துளசி, கரிசிலாங்கண்ணி, மிளகு, சுக்கு முதலியவற்றைச் சேர்த்துக் கியாழமிட்டுவடித்துக் குழந்தைகளின் வயது கேற்றபடி கால் அரை சங்கு அளவாக விட்டுக் கொண்டு வர மாந்த பேதி நிற்கும்.

 இதன் இலையை அரைத்துப் புண் சிரங்கு, ரணம் இவற்றிற்கு வைத்துக் கட்ட ஆறும். இதன் இலையை இடுத்துப் பிழிந்து எடுத்துச் சாற்றை இடுப்பு வலிக்குப் பூச நீங்கும்.

நுணா இலைச்சாறு ஒரு பங்கும், உந்தாமணி, நொச்சி, பொடுதலை ஆகிய மூன்றின் சாறும் ஒருபங்கு கலந்து 3,4 வேளை கொடுத்து வரச் சகல மாந்தமும் தீரும்.

நுணாத்தளிர், இலை, பழுப்பு சமன் சேர்த்து 35 கிராம் காட்டுச் சீரகத்துடன்ஒரு தேங்காய் அளவு அரைத்து, ஒரு லிட்டர் நல்லெண்ணையில் மெழுகு பதமுறக் காய்ச்சி எண்ணெயைப் பிரித்து பக்குவப் படுத்தவும். கல்கத்தை சுண்டையளவு காலை, மாலை பாலுடன் கலந்து கொடுக்க வயிற்றுக் கோளாறு தீரும்.

எண்ணெயை வெண்மேகத்தில் தடவ சில மாதங்களில் குணமாகும்.
நுணாக்காயையும், உப்பையும் சமன் அரைத்து அடை தட்டி உலர வைத்துப் புடமிட்டு அரைத்துப் பற்பொடியாக நாளும் பல் துலக்கி வந்தால் பற்கள் தூய்மையாகும் , பல் வலி,பல்லரணை, வீக்கம், குரிதிக் கசிவு ஆகிய நோய்கள் தீரும். சிறந்த பற்பொடியாகும்..

ஒரு கிலோ நுணாப் பட்டையை இடித்து நான்கு படி நீரில் போட்டு அரைப்படியாகச் சுண்டக் காய்ச்சவும். இத்துடன் அரைப்படி எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும். இந்தக் கலவையில் ஒரு லிட்டர் எள் நெய் சேர்த்துச் சுண்டக் காயச்சி வடித்துவைக்கவும்.

 இந்தத் தைலத்தை வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசி, தலைக்கும் தேய்த்து அரைமணி நேரம் சென்று குளித்து வரவும். உடலில் தோன்றும் கழலைக் கட்டிகள், அரையாப்பு கட்டிகள் மேகப்புண் ஆகியன குணமாகும். முறைசுரம், பித்தகுன்மம், படை நோய்களும் குணமாகும்.

நல்லன விளைக..

நலமெலாம் பெருகுக.

Tuesday, May 21, 2019

ஒரே ஒரு  அவாரம் பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ்!! மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்!!

எவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னிச்சையாக செழுப்பாக வளரக்கூடியது. ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.

எண்ணற்ற பருத்துவ குணங்களை கொண்ட ஆவாரம் பூ- வின் மருத்துவகுணங்கள் தெரிந்தால் நீங்கள் தான் பாக்கியசாலி. வறண்ட தரிசு நிலங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்ந்து பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் அழகை பார்க்கும்போது கவிதை எழுதத்தெரியாத நபர்களுக்கே கவிதை வந்து கொட்டும்.

பொதுவாக ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நோய்களை குணப்படுத்தும் என கூறுவார்கள். ஆனால் இந்த ஆவாரைப்பஞ்சாங்கத்தை தினம் ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய், உடல் சோர்வு, அடங்காத தாகம், தூக்கம் இன்மை உடல் இளைத்தல் இவை அனைத்திற்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

குழந்தையின்மை பிரச்னை உள்ள பெ‌ண்க‌ள் கருப்பட்டியுடன் ஆவாரம் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம். ‌விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.

உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும். மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து அதை தண்ணீரில் போட்டு காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.

தோல் அரிப்பு ஏற்பட்டால் ஆவாரம் பூவினை அரைத்து வெந்நீர் கலந்து அதை உடம்பில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சிலருக்கு உடலில் கற்றாழை நாற்றம் வீசும். அவர்கள் ஆவரம் பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வீசும் கற்றாழை நாற்றம் நீங்கும்.

ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து அரைது இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.

Saturday, May 18, 2019

மண்ணை  வளமான மண்ணாக ஆக்க திரு. சுந்தரராம அய்யர்

சொனன் கருத்துக்கள் சிலவற்றை பார்க்கலாம்
பொதுவாக நம்முடைய மண் வளமான மண்ணாக இருப்பதற்கு நுண்ணுயிரிகளின் செயல்பாடு 10 சதம் இருக்க வேண்டும்.
ஆனால் இப்பொழுது இரசாயன உரம், மருந்துகளை பயன்படுத்தி  நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து 3 சதவீதம்தான் இருக்கிறது .

மீதம் உள்ள 7 சதவீத நுண்ணுயிர்களை நம்முடைய மண்ணில் உற்பத்தி செய்யனும் அப்பொழுதுதான் நம்முடைய மண் வளமானதாக இருக்கும்

அவற்றின் எண்ணிக்கையை  அதிகரிக்க நாம முதலில் செய்யவேண்டியது பலவகை விதைகளை விதைத்து பூ எடுக்கும் சமையம் அல்லது 60 நாட்களில் மடக்கி உழவு செய்தல் வேண்டும்.

பலவகை விதைகள்

தானியப்பயிர்வகைகளில் -  ஏதாவது  4
பயறுவகை பயிர்களில்  - 4
எண்ணெய் வித்து பயிர்கள் - 4
தழைச்சத்து தரக்கூடய பயிர்கள் - 4
மணப்பயிர்கள்  - 4  எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 30  கிலோ விற்கு மேல்  விதைக்கவேண்டும்.

தானியப்பயிர்வகைகளில்- கம்பு 5 கிலோ,   சோளம் - 3 கிலோ, மக்காச்சோளம் - 3 கிலோ, ராகி 1கிலோ

பயிர்வகை  – கொள்ளு – 3 கிலோ, தட்டப்பயறு 3 கிலோ

எண்ணெய் வித்து – ஆமணக்கு  3 கிலோ, எள் - 1 கிலோ

தழைச்சத்து – சணப்பு – 4 கிலோ, தக்கபூண்டு – 4 கிலோ

மணப்பயிர் -   கடுகு  1 கிலோ

மேலே உள்ள பயிர்களை தேர்ந்தெடுத்து
 விதைக்கவேண்டும்.

இவற்றை ஏன் நாம விதைக்க வேண்டும்?

 இவை நம்பகுதியில்  ஈசியாக கிடைக்கக் கூடியவை. இந்த பயிர்கள் அனைத்தும் களைச் செடிக்கு மேல் வளரக் கூடிய பயிர்கள் என்பதால் இவற்றை நாம தேர்வு செய்து விதைக்கலாம்

விதைத்த 60 நாட்களில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.  இவ்வாறு செய்தால் கோரை, அருகு கூட வராது மண் வளமானதாக இருக்கும்.  தழைச்சத்து அதிகரிக்கும்

30 கிலோவிற்கு 3000 ஆயிரம் செலவு ஆகும்

ஆனால் இதில் கிடைப்பது  20 டன் தழைச்சத்து

 கிடைக்கும்
 ஒரு டன் 1000ரூபாய் என்றால் கூட நமக்கு 20 ஆயிரம் கிடைக்கும்

ஆகவே விவசாயிகளே இந்த மழையை பயன்படுத்தி  மண்ணை வளப்படுத்துவோம்

நன்றி
சுந்தரராம அய்யர் - 9842724778




Tuesday, May 14, 2019

#சோற்றுக்கற்றாழையின்_மருத்துவக்_குணங்கள்.

1.  கற்றாழை ஜெல்லை சுத்தமான நீரில் கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை நீண்ட நால் நிலைக்கும்,

2.   சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிம்.

3.   கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால்தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.

4.    இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் பளிங்கு போல் ஜொலிக்கும்.

5.     கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய்எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்குசெழித்து வளரும்,

6.  காலை வெறும் வயிற்றில் சிறு துண்டுகள் தினம்சாப்பிட்டு வர உடலில் சத்து கூடும்; உடல் பெருக்காமலே பலகீனம் மறையும்.
தாதுவிருத்தி ஏற்படும்.பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள்கூட இதை சாப்பிட்டுவந்தால் நாளடைவில் நல்ல முன்னேற்றம் பெறலாம்;

7.     சோற்றுக்கற்றாழை+வெள்ளைப்பூண்டு+பனங்கற்கண்டு+எள் எண்ணெய் ஆகியவற்றை கலந்து [தோராயமானஅளவுகளில்] காய்ச்சி வடித்து எண்ணெய் குடல்; வயிறுதொடர்பான எல்லா நோய்களையும் குணப்படுத்தும் .

8.    வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல்உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதிவெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டைவைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்கவேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்தநிறமும் மறைந்து விடும்.

10.     இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்துவந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பலநன்மைகளும் கிடைக்கும்.

11.    . சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில்நெருப்பை மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும்.இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின்நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக்கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாதவெடிப்புகளும் குணமாகும்.

12.   சோற்றுக் கற்றாழையில் செய்த தைலத்தை தலைக்குத்தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடும், எரிச்சலும் குறைந்துஉடல் குளிர்ச்சியடையும், உடலில் எந்தப் பிரச்சினையும்இல்லாதவர்கள் இந்த எண்ணெய்யை தினமும் தலைக்குத்தடவி வரலாம்.

13.  வாரம் இருமுறை இந்த எண்ணெய்யை உடலுக்குத்தேய்த்து குளிப்பதால் உடலுக்கு குளிர்ச்சியைஏற்படுவதோடு, உடல் வனப்பும் ஏற்படும். இந்த சோற்றுக்கற்றாழைத் தைலம் அல்லது எண்ணெய் நாம் வீட்டிலேயேதயாரிக்கலாம்.

14.    செரிமான சக்தியை அதிகரிக்கும். பசியை உண்டாக்கும்.

15.  இதும‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் பெரும் ஏப்பம், பசியின்மை, குன்மம், தண்டு வலி, வயிற்றுப் பொருமல், அடிவயிறுவீக்கம், மலச்சிக்கல், நரம்புச் சூடு தணியும்.

16)  இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின்     தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான். இதன்சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்  சர்மநோய்களையும் குணப்படுத்துகிறது.

17) முகத்திலுள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகள்உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும், சிறிதுகற்றாழைச் சாற்றைத் தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். இதன் சாற்றை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து  காலையில்வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவுபெறும்.

18)   தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.

19) நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பிசத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் ௧ற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

20.  ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள்காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறைபயன்படுத்தலாம்.

21.  கேசப் பராமரிப்பில் தலைக்கு கருப்பிடவும்  கேசத்தின்வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை  நீக்குகிறது. தோல் இறுக்கத்திற்கு  சுகமளிக்கும் மருந்தாகிறது.     சோற்றுக் கற்றாழை  சோற்றை  எடுத்து  எண்ணெயிலிட்டுக் காய்ச்சித்தலைமுழுகி  வர மயிர் வளர்வதுடன் நல்ல தூக்கமும் உண்டாகும்.

நூறாண்டு சென்றதொரு நுண் பூவரசம் வேர்
நூறாண்டு குட்டைத் தொலைக்குங்காண்-வீறிப்
பழுத்த இலை, விதை, பூ, பட்டை இவை கண்டால்
புழுத்த புண் விரேசனமும் போம்..

பெற்றோர்தந்த ரோகங்கள் பிழையால் பெற்ற பாழ் நோய்கள்
பற்றியதொழுநோய் புண்புரைகள் படர்தாமரை கரப்பான்
முற்றும்பற்றாதோடி வடும் பூவரசென்னும் மூலிகையால்
சற்றே பிள்ளை பேற்றுக்கும் தாழ்பாளாகும் பூவரசே..

குட்டும், கடி, சூலை கொல்லும், விடபாகம்
துட்ட மகோதரமும், சோபையொடு-கிட்டிமெய்யில்
தாவு கரப்பான் கிரந்திதன் மேகம் போக்கிடும்
பூவரசன் காய் பட்டை பூ..

கும்பமுனி...

புவிக்கரசனாகிய பூவரசன் காய கல்ப மரமாகும்.வேம்பு போல நூற்றாண்டு கால மரம். மருந்துக்கு மிகவும் ஏற்றது.

100 ஆண்டுகள் சென்ற மரத்தின் காய், பூ, பட்டை ஆகியவற்றைச் சமனளவு பொடித்துக் காலை, மாலை 1 தேக்கரண்டி நீண்ட நாள் சாப்பிட்டுவரத் தோல் வியாதிகள் அனைத்தும் தீரும்..

 பூவரசங்காய்களை உடைத்தால் மஞ்சள் நிறமான ஒரு திரவம் கசியும். இதனைத் தைலமாக்கி எடுத்து அடிபட்ட காயங்கள், விஷக்கடிகள், சரும நோய்களான படர்தாமரை, செதில்படை, சிரங்கு இவைகளுக்குத் தடவி வர எளிதில் குணம் கிடைக்கும்.

உடம்பில் என்ன பூச்சி கடித்ததென்று தெரியாத காணாக்கடிகளுக்கு பூவரசு மரப்பட்டை 210 கிராம் எடுத்து இடித்து ஒரு சட்டியிலிட்டு, 1400 மி.லி. நீர் விட்டுக் காய்ச்சி மூன்றில் ஒன்றாக வற்றியபின் வடிகட்டி, தினமும் இரண்டு வேளை அருந்தி வந்தால் காணாக் கடி விஷம், பாண்டு, சோகை, பெருவயிறு முதலிய நோய்கள் குணமாகும்.

பூவரசு பட்டையை எடுத்து பாலில் அவித்து உலர்த்தி அதனுடன் சம அளவு பரங்கிப் பட்டை சேர்த்து நன்கு இடித்து சூரணம் செய்து கொள்ள வேண்டும். இதனைஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேவையான அளவு பசு வெண்ணெயில் காலை,மாலை இரண்டு வேளை உண்டு வந்தால் நாட்பட்ட தொழு நோய்க்கு நன்மை பயக்கும். இதை உட்கொள்ளும் போது உணவில் உப்பை நீக்க வேண்டும்.

பூவரசங்காயிலிருந்து முறைப்படி எடுக்கப்படும் எண்ணெய் பெருவயிறு, வயிற்றுப்புண் இவைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

பூவரசம் பட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை தேவையான அளவு உள்ளுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய் குணமாகும்.

நூறு வருடமான பூவரச மரத்தின் வேரை நன்கு உலர்த்திப் பொடி செய்து முறைப்படி உண்டு வந்தால் தொழுநோய் குணமாகும்.

வெண்குஷ்ட நோயால் உதட்டில் ஏற்பட்ட வெண்புள்ளிகளைப் போக்க பூவரசின் முதிர்ந்த பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றினை வாயிலிட்டு அடிக்கடி கொப்பளிக்க வேண்டும். இது போல் பல தினங்கள் கொப்பளித்து வரவேண்டும். அந்தச் சாற்றை விழுங்கி விட்டால் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்.

இதன் பழுப்பு இலையை உலர்த்திக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து போட சொறிசிரங்கு, கரப்பான்,ஊரல், அரிப்பு குணப்படும்.

பூவரசன் மரம் இலைகளை அரைத்து வதக்கிக் கட்ட வீக்கம் குறையும்.அனைத்து வகை தோல் நோய்களுக்கும் அருமருந்தாகும்.

மருத்துவக்குணம் நிறைந்த பூவரசு மரம் மிக எளிதாக வளரக்கூடியது. அதன் கிளைகளை வெட்டி நட்டாலே தளிர் விட்டு வளரும்.பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று..

Monday, May 13, 2019


சமைத்து சாப்பிட்டால் தான் உயிர் வாழமுடியும் என்ற சிந்தனை ஒவ்வொருவர் மனதில் உள்ளது. நாம் எரிவாய்வு(கேஷ்), மண்ணெண்னெய்க்கு அடிமையானாதால் வெளிநாட்டு வியாபாரிகள் நம்மை கட்டுப்படுத்துகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் நாம் வேறு ஏதாவது பொருளை அந்நாட்டிற்க்கு கொடுக்க வேண்டும். ஒருவேளை நாம் ஏற்றுமதி செய்வதற்க்கு பொருள் இல்லை என்றால் என்னாகும். நம் நாடு அவர்கள் கட்டுப்பாட்டில் சென்று விடும். அவர்கள் சொல்வது தான் நடக்கும். நீங்கள் என்ன போராட்டம்
செய்தாலும் ஒன்றும் செய்ய இயலாது. செவிடன் காதில் சங்கு ஊதுன கதை தான். அவன் என்னென்ன முடியுமோ அதையெல்லாம் இங்கிருந்து எடுத்து சென்று விடுவான். அதை தடுக்க வேறெதெனும் வழி இருக்க என்று அலசுவோம்.

ஒரு கிராமத்திற்க்கோ அல்லது வசிக்கும் பகுதியில் குறிப்பிட்ட மக்களுக்கோ ஒதுக்குபுறமான இடத்தில் தேவையான பொது கழிவறையை ஏற்படுத்தி பயோ கேஸ்(Bio Gas) உற்பத்தி செய்வதால் குறிபிட்ட அளவு கேஸ் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். விவசாய மக்கள் மாடு வளர்ப்பதால் அதில் வரும் சானம் கொண்டு கேஸ் தயாரிக்கலாம். சூரிய ஒலி, காற்றாடி, கடல் அலையை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்தால் கேஸ் இறக்குமதியை குறைத்துக்கொள்ளலாம். டிராக்டர் கொண்டு உழுவதால் மண்ணெண்ணெய் தேவைபடுகிறது, பாரம்பரியமாக மாடு பூட்டி ஏர் உழுவதால் பல நபர்களுக்கு வேலையும் ஏற்படுத்தலாம், மண்ணெண்ணெய் தேவையும் குறைகிறது.

சமைத்து சாப்பிடுவதற்க்கு மண்ணெண்ணெய், கேஸ் தேவைபடுகிறது. சமைக்காமல் சாப்பிட்டால் அதாவது சில பாரம்பரிய இயற்கை உணவுமுறையை கையாண்டால் கேஸ் இறக்குமதி அவசியமில்லை அல்லது குறைத்துக்கொள்ளலாம். இயற்கை உணவுமுறைகளை கொஞ்சம் கற்று நம் மக்களை பாதுகாப்போம்.

புளியை தண்ணீரில் கரைத்து வெல்லம் அல்லது இனிப்பு கலந்து மற்றும் காரத்தன்மைக்கு சுக்குபொடி ஒரு சிட்டிகை கலந்து பானம் தயாரித்து சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும். புளி தமிழ்நாட்டில் எளிதாக கிடைக்க கூடிய ஒரு உணவு. அதை சாப்பிடக்கூடாது என்று வாதம் செய்வார்கள் பலர். முட்டாள்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
புளியை சாப்பிடக்கூடாதுன்னு சொல்லி ஆரஞ்சு பழம், எழுமிச்சைப்பழம், சாத்துக்கொடி போன்ற என்னெற்ற உணவு முறைகளை சொல்வார்கள். இதிலும் புளிப்பு தானே இருக்கிறது.
புளியம்பழத்தில் கொஞ்சமாகத்தான் சக்தி இருக்கிறது, ஆரஞ்சு பழத்தில் நிறைய சக்தி இருக்கிறது என்று பொய்யுரைப்பார்கள். இந்த பொய்யை நிருபிக்க புது பல்கலை கழங்களையை (University) நிறுவி அதிலிருந்து எடுத்துரைப்பார்கள். அப்படி நம்பவில்லை என்றால் பாரம்பரிய அல்லது பெருமைப்படக்கூடிய பல்கலைகழங்களை மிரட்டி கருத்துகளை புகுத்தி எடுத்துரைப்பார்கள். நாமும் நம்பிக்கொண்டோம்.

இங்கிருக்கும் புளியை சரியில்லை என்றும் புளி விழையாத அல்லது இல்லாத இடத்தில் நிறைய சத்துக்கள் இருக்கிறது என்றும் சொல்லி வியாபாரம் செய்வார்கள். வியாபாரத்தந்திரம் இது. அரிசியை சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வரும் என்றும் கோதுமை சாப்பிட்டால் நல்லதுன்னு சொல்கிற மருத்துவர் உலகம் தானே இது. ஏமாற்றிப்பிழைக்க கற்றுக்கொண்டார்கள், நாமும் நம்பிவிட்டோம்.

எந்த ஒரு சுவையும் அதிகமாக இருந்தால் திகட்டிவிடும். அது பகலா இருந்தாலும் இரவாக இருந்தாலும். எட்டிக்கசப்பு மரணத்தை கொடுக்கிறது. அதே போலத்தான் வாசனையும். சுவையை நேரத்திற்க்கும் தங்கள் உடலிற்க்கும் தகுந்தார் போல குறைத்தும் கூட்டியும் பயண்படுத்துங்கள். அவ்வளவு தான் உணவு. சுவையும் வாசனையும் அதிகமாக இருந்தால் திகட்டி விடும். முக்கியமாக இரவு நேரத்தில் சுவையும் வாசனையும் அதிகம் இருக்க கூடாது. சூரியன் மறைந்த பின் உணவுகள் எடுப்பது தவிற்க்க வேண்டும். மாலை நேரத்தில் கடுக்காய் சாப்பிட சொல்வார்கள், கடுக்காய் கொடுத்துட்டான் என்றால் என்னை ஏமாற்றி விட்டான் என்று பொருள், மாலை நேரத்தில் உணவுகளை சாப்பிடாமல் உங்கள் வயிற்றை ஏமாற்ற வேண்டும். பல வியாதி வர முக்கியமான காரணம் இரவு உணவு எடுப்பதே.

புளியை கண்டு நாம் இப்பொழுது அஞ்சுகிறோம் ஏனென்றால் வியாதி வந்தால் மருத்துவர் சொல்வது புளியை சேர்க்காதிர்கள் என்று. அவர்கள் மட்டுமா! ஆன்மீக சாமியார்கள் பலர் புளியை சாப்பிட்டால் உடலுக்கு நல்லதல்ல என்று பரப்புரை செய்கின்றனர். புளித்த உணவு என்றால் கெட்டுப்போன உணவு. புளித்த உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று சொன்னால் பரவாயில்லை, புளியை சாப்பிடக்கூடாதுன்னு சொல்றது தான் துரோகம்.

அரிசிக்கு பதில் அவலை பயன்படுத்தலாம்.

தேங்காய் மற்றும் வெல்லம் அல்லது பனவெல்லம் கலந்து சாப்பிடலாம். கூடவே வாழைப்பழத்தை கொஞ்சம் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

அவலை(Rice Flakes) ஊறவைத்து தேங்காய், வெல்லம், வாழைப்பழம் கலந்து சாப்பிடலாம். அதே ஊறவைத்த அவலுடன் காரம், பச்சை வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இழை கலந்து சாப்பிடலாம்.

கறந்த மாட்டுப்பாலுடன் வீட்டிலிருக்கும் புளியுடனோ அல்லது மரத்திலிருந்து பறித்து ஓடுடன் பாதியாக உடைத்து பாலில் கலந்து வைத்துவிட்டால் தயிராக மாறிவிடும். பாலை கொதிக்க வைக்க தேவையில்லை. இந்த மாறி மாடு மேய்கிறவர்கள் செய்வார்கள்.

மாட்டுப்பாலுக்கு பதில் நிலக்கடலை( வேர்கடலை ), பாசிப்பயாறு, அரிசி போன்ற தானியங்களிலிருந்து பால் தயாரிக்கலாம். நிலக்கடலை, பாசிப்பயாறு எட்டு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து, புது தண்ணீர் சேர்த்து ஒரு மூன்று நிமிடம் வேகவைத்து சூடு ஆறிய பின் அரைத்து, தேவையான தண்ணீர் சேர்த்து, பாலை வடித்து சாப்பிடலாம். மிகவும் சத்தான பால். அரிசியை வேகவைத்து சூடு ஆறிய பின்பு தண்ணீர் ஊற்றி ஆறு முதல் எட்டு மணி நேரம் வைக்கவும். பின்பு அரைத்து பாலை வடிகட்டி பருகலாம். இது போன்று செய்யும் பொழுது தண்ணீர் வறட்சியை சமாளிக்க முடியும். தாங்கள் மாட்டுப்பால், மாட்டுபாலால் டீ, காபி தினமும் அருந்திகொண்டிருந்தால், தானிய வகை பாலை குடித்து பழகுவதால் இந்நாட்டிற்க்கு நிச்சயமாக வறட்சியை போக்க உதவமுடியும். செய்து சாப்பிட்டு பாருங்கள். உயிர் போயிடுமா என்ன?

நிலக்கடலை(GroundNut), கொண்டைக்கடலை, பாசிப்பயாறு, கம்பு, கொள்ளு போன்ற தானியங்களை ஊறவைத்து முளைக்கட்டி சாப்பிடலாம்.

இளம் வென்பூசனியை வெல்லம் சேர்த்து சாப்பிடலாம். தேங்காய் பாலும் வெல்லமும் கலந்து சாப்பிடலாம்.

தேங்காய் சட்னி, புளி, தக்காளி, புதினா, வெங்காயம் சட்னி, புளி ரசம், மாங்காய் சட்னி, நிலக்கடலை சட்னி, இளம்புளி சட்னி போன்ற உணவுகளை சமைக்காமல் சாப்பிடலாம்.

மாங்காய், நெல்லிக்காய், எழுமிச்சை, புளி, நார்த்தங்காய், விதையில்லாத இளம் முருங்கைக்காய் ஊர்காய் செய்து சாப்பிடலாம். காட்டு நெல்லியை வத்தல் செய்து தேவைபடும்பொழுது ஊறவைத்து சாப்பிடலாம்.

கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய் போன்ற உணவுகளை சாப்பிடலாம். தக்காளி, சின்ன வெங்காயம், கொத்தமில்லி, கருவேப்பிலை, உப்பு மற்றும் மிளகு கலந்து சாப்பிடலாம்.

சமைக்காமல் ஒரு வேலை உணவாவது எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டிற்க்கு மிகவும் நல்லது. இல்லையென்றால் இங்கிருக்கும் வளங்கள் சுரண்டப்படும். பின்பு வாழமுடியாத பாலைவனமாக உருவெடுக்கலாம். யாரையும் எதிர்த்து போராட தெவையில்லை, முதலில் நம்மை எதிர்த்து போராட பழகவேண்டும். நம் மனதை செம்மை ஆக்க வேண்டும். சமைக்காமல் சாப்பிடும் பொழுது முதலில் சக்தி உடலில் சேருகிறது, இரண்டாவது அதிகம் செலவு செய்ய தேவையில்லை அதனால் அதிகமாக உழைக்க அவசியமில்லை. நிம்மதியாக உயிர் வாழலாம். எரிவாய்வு பயன்படுத்தாமல் உண்டு பழக ஆரம்பித்தால் மண்ணென்னை போன்ற எரிவாய்வு இறக்குமதி செய்ய அவசியமில்லை, ஆதலால் வெளிநாட்டு நபர்களால் நம்மை கட்டுபடுத்த இயலாது. நமது வர்த்தகம் சிறப்பாக இருக்கும். இப்பொழுது நம் பணமதிப்பு குறைந்துகொண்டே இருக்கிறது. காரணம் நாம் ஏற்றுமதி செய்யும் பொருளின் மதிப்பு மிகவும் குறைவாகவும், இறக்குமதி செய்யும் மதிப்பு மிக அதிகமாக இருப்பதால், அவர்கள் நேரடியாக நம்மை கட்டுபடுத்துகின்றனர். நாம் செய்யும் எல்லா விசயத்திலும் வெளிநாட்டு நபர்களோ அல்லது நிறுவனமோ முடிவெடுக்கிறார்கள்.இறக்குமதி ஏற்றுமதியில் மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கிறது.

வறட்சி வந்துவிட்டால் இந்நிலத்தில் வாழமுடியாத சூழலை ஏற்படுத்தலாம். அதற்க்கு முன்பாக விளிப்புனர்வுடன் நடப்பது மிகவும் பயந்தரகூடியதாக அமையும். தங்கள் கருத்தும் வரவேற்க்கப்படுகிறது.

மேலே கூறப்பட்ட செய்திகளை/கருத்துகளை ஆழமாக சிந்தித்து தங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
Source: www.ytamizh.com/pathivu/162/

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள்

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள். =================================  February 7, 2019 (ப.ப) இன்றைக...

உழவர் சந்தை