சமைத்து சாப்பிட்டால் தான் உயிர் வாழமுடியும் என்ற சிந்தனை ஒவ்வொருவர் மனதில் உள்ளது. நாம் எரிவாய்வு(கேஷ்), மண்ணெண்னெய்க்கு அடிமையானாதால் வெளிநாட்டு வியாபாரிகள் நம்மை கட்டுப்படுத்துகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் நாம் வேறு ஏதாவது பொருளை அந்நாட்டிற்க்கு கொடுக்க வேண்டும். ஒருவேளை நாம் ஏற்றுமதி செய்வதற்க்கு பொருள் இல்லை என்றால் என்னாகும். நம் நாடு அவர்கள் கட்டுப்பாட்டில் சென்று விடும். அவர்கள் சொல்வது தான் நடக்கும். நீங்கள் என்ன போராட்டம்
செய்தாலும் ஒன்றும் செய்ய இயலாது. செவிடன் காதில் சங்கு ஊதுன கதை தான். அவன் என்னென்ன முடியுமோ அதையெல்லாம் இங்கிருந்து எடுத்து சென்று விடுவான். அதை தடுக்க வேறெதெனும் வழி இருக்க என்று அலசுவோம்.
ஒரு கிராமத்திற்க்கோ அல்லது வசிக்கும் பகுதியில் குறிப்பிட்ட மக்களுக்கோ ஒதுக்குபுறமான இடத்தில் தேவையான பொது கழிவறையை ஏற்படுத்தி பயோ கேஸ்(Bio Gas) உற்பத்தி செய்வதால் குறிபிட்ட அளவு கேஸ் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். விவசாய மக்கள் மாடு வளர்ப்பதால் அதில் வரும் சானம் கொண்டு கேஸ் தயாரிக்கலாம். சூரிய ஒலி, காற்றாடி, கடல் அலையை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்தால் கேஸ் இறக்குமதியை குறைத்துக்கொள்ளலாம். டிராக்டர் கொண்டு உழுவதால் மண்ணெண்ணெய் தேவைபடுகிறது, பாரம்பரியமாக மாடு பூட்டி ஏர் உழுவதால் பல நபர்களுக்கு வேலையும் ஏற்படுத்தலாம், மண்ணெண்ணெய் தேவையும் குறைகிறது.
சமைத்து சாப்பிடுவதற்க்கு மண்ணெண்ணெய், கேஸ் தேவைபடுகிறது. சமைக்காமல் சாப்பிட்டால் அதாவது சில பாரம்பரிய இயற்கை உணவுமுறையை கையாண்டால் கேஸ் இறக்குமதி அவசியமில்லை அல்லது குறைத்துக்கொள்ளலாம். இயற்கை உணவுமுறைகளை கொஞ்சம் கற்று நம் மக்களை பாதுகாப்போம்.
புளியை தண்ணீரில் கரைத்து வெல்லம் அல்லது இனிப்பு கலந்து மற்றும் காரத்தன்மைக்கு சுக்குபொடி ஒரு சிட்டிகை கலந்து பானம் தயாரித்து சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும். புளி தமிழ்நாட்டில் எளிதாக கிடைக்க கூடிய ஒரு உணவு. அதை சாப்பிடக்கூடாது என்று வாதம் செய்வார்கள் பலர். முட்டாள்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
புளியை சாப்பிடக்கூடாதுன்னு சொல்லி ஆரஞ்சு பழம், எழுமிச்சைப்பழம், சாத்துக்கொடி போன்ற என்னெற்ற உணவு முறைகளை சொல்வார்கள். இதிலும் புளிப்பு தானே இருக்கிறது.
புளியம்பழத்தில் கொஞ்சமாகத்தான் சக்தி இருக்கிறது, ஆரஞ்சு பழத்தில் நிறைய சக்தி இருக்கிறது என்று பொய்யுரைப்பார்கள். இந்த பொய்யை நிருபிக்க புது பல்கலை கழங்களையை (University) நிறுவி அதிலிருந்து எடுத்துரைப்பார்கள். அப்படி நம்பவில்லை என்றால் பாரம்பரிய அல்லது பெருமைப்படக்கூடிய பல்கலைகழங்களை மிரட்டி கருத்துகளை புகுத்தி எடுத்துரைப்பார்கள். நாமும் நம்பிக்கொண்டோம்.
இங்கிருக்கும் புளியை சரியில்லை என்றும் புளி விழையாத அல்லது இல்லாத இடத்தில் நிறைய சத்துக்கள் இருக்கிறது என்றும் சொல்லி வியாபாரம் செய்வார்கள். வியாபாரத்தந்திரம் இது. அரிசியை சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வரும் என்றும் கோதுமை சாப்பிட்டால் நல்லதுன்னு சொல்கிற மருத்துவர் உலகம் தானே இது. ஏமாற்றிப்பிழைக்க கற்றுக்கொண்டார்கள், நாமும் நம்பிவிட்டோம்.
எந்த ஒரு சுவையும் அதிகமாக இருந்தால் திகட்டிவிடும். அது பகலா இருந்தாலும் இரவாக இருந்தாலும். எட்டிக்கசப்பு மரணத்தை கொடுக்கிறது. அதே போலத்தான் வாசனையும். சுவையை நேரத்திற்க்கும் தங்கள் உடலிற்க்கும் தகுந்தார் போல குறைத்தும் கூட்டியும் பயண்படுத்துங்கள். அவ்வளவு தான் உணவு. சுவையும் வாசனையும் அதிகமாக இருந்தால் திகட்டி விடும். முக்கியமாக இரவு நேரத்தில் சுவையும் வாசனையும் அதிகம் இருக்க கூடாது. சூரியன் மறைந்த பின் உணவுகள் எடுப்பது தவிற்க்க வேண்டும். மாலை நேரத்தில் கடுக்காய் சாப்பிட சொல்வார்கள், கடுக்காய் கொடுத்துட்டான் என்றால் என்னை ஏமாற்றி விட்டான் என்று பொருள், மாலை நேரத்தில் உணவுகளை சாப்பிடாமல் உங்கள் வயிற்றை ஏமாற்ற வேண்டும். பல வியாதி வர முக்கியமான காரணம் இரவு உணவு எடுப்பதே.
புளியை கண்டு நாம் இப்பொழுது அஞ்சுகிறோம் ஏனென்றால் வியாதி வந்தால் மருத்துவர் சொல்வது புளியை சேர்க்காதிர்கள் என்று. அவர்கள் மட்டுமா! ஆன்மீக சாமியார்கள் பலர் புளியை சாப்பிட்டால் உடலுக்கு நல்லதல்ல என்று பரப்புரை செய்கின்றனர். புளித்த உணவு என்றால் கெட்டுப்போன உணவு. புளித்த உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று சொன்னால் பரவாயில்லை, புளியை சாப்பிடக்கூடாதுன்னு சொல்றது தான் துரோகம்.
அரிசிக்கு பதில் அவலை பயன்படுத்தலாம்.
தேங்காய் மற்றும் வெல்லம் அல்லது பனவெல்லம் கலந்து சாப்பிடலாம். கூடவே வாழைப்பழத்தை கொஞ்சம் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
அவலை(Rice Flakes) ஊறவைத்து தேங்காய், வெல்லம், வாழைப்பழம் கலந்து சாப்பிடலாம். அதே ஊறவைத்த அவலுடன் காரம், பச்சை வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இழை கலந்து சாப்பிடலாம்.
கறந்த மாட்டுப்பாலுடன் வீட்டிலிருக்கும் புளியுடனோ அல்லது மரத்திலிருந்து பறித்து ஓடுடன் பாதியாக உடைத்து பாலில் கலந்து வைத்துவிட்டால் தயிராக மாறிவிடும். பாலை கொதிக்க வைக்க தேவையில்லை. இந்த மாறி மாடு மேய்கிறவர்கள் செய்வார்கள்.
மாட்டுப்பாலுக்கு பதில் நிலக்கடலை( வேர்கடலை ), பாசிப்பயாறு, அரிசி போன்ற தானியங்களிலிருந்து பால் தயாரிக்கலாம். நிலக்கடலை, பாசிப்பயாறு எட்டு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து, புது தண்ணீர் சேர்த்து ஒரு மூன்று நிமிடம் வேகவைத்து சூடு ஆறிய பின் அரைத்து, தேவையான தண்ணீர் சேர்த்து, பாலை வடித்து சாப்பிடலாம். மிகவும் சத்தான பால். அரிசியை வேகவைத்து சூடு ஆறிய பின்பு தண்ணீர் ஊற்றி ஆறு முதல் எட்டு மணி நேரம் வைக்கவும். பின்பு அரைத்து பாலை வடிகட்டி பருகலாம். இது போன்று செய்யும் பொழுது தண்ணீர் வறட்சியை சமாளிக்க முடியும். தாங்கள் மாட்டுப்பால், மாட்டுபாலால் டீ, காபி தினமும் அருந்திகொண்டிருந்தால், தானிய வகை பாலை குடித்து பழகுவதால் இந்நாட்டிற்க்கு நிச்சயமாக வறட்சியை போக்க உதவமுடியும். செய்து சாப்பிட்டு பாருங்கள். உயிர் போயிடுமா என்ன?
நிலக்கடலை(GroundNut), கொண்டைக்கடலை, பாசிப்பயாறு, கம்பு, கொள்ளு போன்ற தானியங்களை ஊறவைத்து முளைக்கட்டி சாப்பிடலாம்.
இளம் வென்பூசனியை வெல்லம் சேர்த்து சாப்பிடலாம். தேங்காய் பாலும் வெல்லமும் கலந்து சாப்பிடலாம்.
தேங்காய் சட்னி, புளி, தக்காளி, புதினா, வெங்காயம் சட்னி, புளி ரசம், மாங்காய் சட்னி, நிலக்கடலை சட்னி, இளம்புளி சட்னி போன்ற உணவுகளை சமைக்காமல் சாப்பிடலாம்.
மாங்காய், நெல்லிக்காய், எழுமிச்சை, புளி, நார்த்தங்காய், விதையில்லாத இளம் முருங்கைக்காய் ஊர்காய் செய்து சாப்பிடலாம். காட்டு நெல்லியை வத்தல் செய்து தேவைபடும்பொழுது ஊறவைத்து சாப்பிடலாம்.
கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய் போன்ற உணவுகளை சாப்பிடலாம். தக்காளி, சின்ன வெங்காயம், கொத்தமில்லி, கருவேப்பிலை, உப்பு மற்றும் மிளகு கலந்து சாப்பிடலாம்.

வறட்சி வந்துவிட்டால் இந்நிலத்தில் வாழமுடியாத சூழலை ஏற்படுத்தலாம். அதற்க்கு முன்பாக விளிப்புனர்வுடன் நடப்பது மிகவும் பயந்தரகூடியதாக அமையும். தங்கள் கருத்தும் வரவேற்க்கப்படுகிறது.
மேலே கூறப்பட்ட செய்திகளை/கருத்துகளை ஆழமாக சிந்தித்து தங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
Source: www.ytamizh.com/pathivu/162/
No comments:
Post a Comment