Saturday, June 8, 2019

#திருநீற்றுப்பச்சிலை...

#திருநீற்றுப்பச்சிலை...

கற்பூர துளசி, ருத்ர சடை, சப்ஜா செடி, கருப்பு கசகசா என்ற பெயர்களால் அறியப்படும் துளசி குடும்பத்தை சேர்ந்த இதை தாவரவியலில் Ocimum basilicum என்பார்கள்.

பேசில்(Basil) என்ற பெயரில் உலகம் முழுதும் வாசனைக்காகவும் உணவாகவும் பயன்படுத்தும் இதை ஆசிய நாடுகளில் ஆன்மீகத்திலும் மாந்ரீகத்திலும் பயன்படுத்துவார்கள்.

விறுவிறுப்பான சுவையில் குளிர்ச்சி தன்மைகொண்ட இதன் விதைகளை Ice cream, சர்பத்களில் அதிகம் பயன்படுத்தினாலும்  இதை முதன்மைபொருளாக கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருள் Falooda.

முகப்பரு சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களின் வடுக்களை மறைக்கவும், தோலுக்கு மேலாக வரும் கட்டிகளை கரைக்கவும், தலையில் பேன்களை ஒழிக்கும் மருந்தாகவும் பயன்படும்.

இதில் வாசனை எண்ணெய், சவக்காரம் போன்றவையும் இப்போது செய்யப்படுக்கிறது.

Alpha lipoic அமிலத்தை அதிகமாக கொண்டிருப்பதால் இது நவீன எடைகுறைப்பு சிகிச்சையிலும் பயன்படுத்தபடுகிறது.
லவங்கம் தவிர்த்து இதிலும் Eugenol எண்ணெய் காய்ச்சுவார்கள்.

பொட்டாசியம் சத்து குறைபாட்டை நீக்கவும் பூச்சிகொல்லியாகவும் விவசாயத்தில் பயன்படுகிறது.

வியர்வை, சிறுநீர் பெருக்கும் தன்மை அதிகமிருப்பதால் நீரிழிவு நோயாளிகள் தவிர்பது நலம்.

பலர் இதை சியா விதைகள் என்று சொன்னாலும் சியா என்பது வேறு. உருவ ஒற்றுமையால் வரும் குழப்பம் இது.

கண்களில் விழுந்த பிசுறுகளை அகற்ற கண்களில் இந்த விதைகளை கொட்டிவிட்டு சிலநிமிடங்கள் கழித்து ஊறி திரவம்போல் வழவழத்து வரும் இதனோடு அந்த பிசுறும் வெளிவந்துவிடும் இதை ஆதிக்குடிகள் பயன்படுத்தியதை ஒருமுறை பார்திருக்கிறேன்.


No comments:

Post a Comment

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள்

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள். =================================  February 7, 2019 (ப.ப) இன்றைக...

உழவர் சந்தை