முருங்கை இட்லி பொடி;
முருங்கை விதை
கொள்ளு
வர மிளகாய்
பூண்டு
கறிவேப்பிலை
எல்லாவற்றையும் லேசாக வறுத்து உப்பு சேர்த்து அரைத்து எடுக்கலாம்
இந்த பதிவுக்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது
முருங்கையில் கீரை மற்றும் காய்களை உண்கிறோம். விதைகளை நாம் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.
நம்முடைய இந்த அறியாமையை மிகச் சரியாகப் பயன்படுத்தி கார்ப்பரேட் உலகம் கோடிகளில் பணம் குவிக்கிறது.
ஆனால் விளைவிக்கும் முருங்கை விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை.
எங்கள் அரவக்குறிச்சி பகுதியில் இந்தியாவிலேயே அதிக அளவில் முருங்கை விவசாயம் நடைபெறுகிறது.
ஆனால் முருங்கை விதைகளை வியாபாரிகள் மிக மிகக் குறைந்த விலைக்கு வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
அங்கு அவை பொடி செய்து கேப்சூல்களில் அடைக்கப்பட்டு மூட்டு வலி மாத்திரைகளாக நம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.
முன்பு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விலை போன முருங்கை விதை இந்த ஆண்டு வெறும் 200 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது.
மூட்டு வலி கேப்சூல் ஒன்றே ஒன்று 360 ரூபாய்.
நாள்பட்ட மாத்திரை உள்ளே புழுத்திருந்தாலும் வெளியே தெரியாது.
நாம் அப்படியே விழுங்கி விடுவோமே!
என்ன செய்யலாம் நண்பர்களே
முருங்கை விதைகளைத் தேடி வாங்கி பொடி செய்து உண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்குவோமா
அல்லது... உங்கள் முடிவு
முருங்கை மூட்டு வலி மட்டுமின்றி ஆண்மைக் குறைபாடு, இரத்த சோகை போன்ற எண்ணற்ற நோய்களைக் குணமாக்கும் ஆற்றல் கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும்
இந்தப் பதிவுக்கு எல்லோரும் லைக் கமெண்ட் போட்டுட்டுப் போகாதீர்கள்..
முருங்கை விதைகளைத் தேடி வாங்கி உணவில் சேருங்கள்.
No comments:
Post a Comment