இயற்கை முறையில் அசோலா வளர்ப்பு:
இயற்கை முறையில் அசோலா வளர்க்க எளிய வழிமுறைகள்: 1. இடம் தேர்வு மற்றும் அமைப்பு 2.தரமான தாய் விதைகள். 3.இடு பொருள்கள்.4. செய்முறை மற்றும் பராமரிப்பு.
1.இடம் தேர்வு அமைப்பு: அசோலா வளர்க்க மரத்தின் நிழலில் சிமெண்ட் தொட்டி அமைக்க வேண்டும். (குறிப்பு மாமரம் ,புளியமரம் நிழலில் தொட்டி அமைக்க கூடாது) தொட்டியில் தண்ணீர் வெளியே செல்ல தொட்டியின் மையமாக பை அமைத்து கொள்ளவும். 1 1/2 அடிஉயரம் , 3அடி அகலம் ,10அடி நீளம் இந்த அளவிற்க்கு தொட்டி அமைத்து கொள்ளவும் .
2 .தரமான தாய் விதைகள் : பூச்சி தாக்குதல் இல்லாத விதைகளை தேர்வு செய்து கொள்ளவும். விதைகளை இரண்டுமுறை தண்ணீரில் அலசி விடவும் ஏன் என்றால் விதைகளில் பிற ஒட்டுண்ணிகளின் முட்டைகள் இருக்கும் இதனால் அசோலாவில் நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. 3.இடுபொருள்கள் :
# உங்களுடைய நிலத்து மண்20 கிலோ # மக்கிய தொழுஉரம் 2கிலோ(அ) மண் புழு உரம் . # புதிய சாணம் 1/2கிலோ # தண்ணீர் தொட்டி யில் 10 செ.மீ அளவில் இருக்கவேண்டும். # முருங்கை கீரை 1/2 கிலோ # வேப்பிலை 1/2 கிலோ# பாறைத் தூள் 2கிலோ (அ) வாழைப்பழம் 4 எண்ணிக்கை .
செய்முறை மற்றும் பராமரிப்பு: தொட்டி யில் மண், தொழுஉரமம், சாணம் (சாணத்தை கரைத்து சக்கை எடுத்துவிட்டு தொட்டியில் ஊற்றவும் ) பாறைத்தூள் தண்ணீர், வேப்பிலை முருங்கைக் கீரை பாறைத் தூள் (அ) வாழை பழம் அனைத்து பொருட்களையும் தொட்டியில் போட்டு நன்றாக கலக்கி விடவும் பிறகு அசோலா விதைகளை தொட்டியில் போட்டு மேலே சிறிதளவு தண்ணீர் தெளித்து விடவும் . 15 நாட்களுக்கு ஒரு முறை முருங்கை கீரை ,வேப்பிலை, சாணம் , வாழை பழம் கொடுக்க வேண்டும் . மாதம் ஒரு முறை தொழுஉரம் (அ) மண் புழு உரம் கொடுக்க வேண்டும் . மாதம்ஒரு முறை தண்ணீரை மாற்ற வேண்டும். #குறிப்பு இந்த முறையில் அசோலா வளர்ப்பதால் 6 மாதம் வரை நன்றாக இருக்கும். 6 மாதத்திர்க்கு ஒரு முறை தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும். 10 நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் அசோலா வளர்க்க தயார் செய்து கொள்ளலாம் .
No comments:
Post a Comment