Thursday, July 26, 2018

இயற்கை முறையில் அசோலா வளர்ப்பு:

இயற்கை முறையில் அசோலா வளர்ப்பு:


இயற்கை முறையில் அசோலா வளர்க்க எளிய வழிமுறைகள்: 1. இடம் தேர்வு மற்றும் அமைப்பு    2.தரமான தாய் விதைகள்.       3.இடு பொருள்கள்.4. செய்முறை மற்றும் பராமரிப்பு.
               
1.இடம் தேர்வு  அமைப்பு:   அசோலா வளர்க்க மரத்தின் நிழலில் சிமெண்ட் தொட்டி அமைக்க வேண்டும். (குறிப்பு   மாமரம் ,புளியமரம் நிழலில் தொட்டி அமைக்க கூடாது) தொட்டியில் தண்ணீர் வெளியே செல்ல  தொட்டியின் மையமாக  பை அமைத்து கொள்ளவும்.  1 1/2 அடிஉயரம் , 3அடி அகலம் ,10அடி  நீளம் இந்த அளவிற்க்கு தொட்டி அமைத்து கொள்ளவும் . 
2 .தரமான தாய் விதைகள் :        பூச்சி தாக்குதல் இல்லாத விதைகளை தேர்வு செய்து கொள்ளவும். விதைகளை இரண்டுமுறை தண்ணீரில் அலசி விடவும் ஏன் என்றால் விதைகளில் பிற ஒட்டுண்ணிகளின் முட்டைகள் இருக்கும் இதனால் அசோலாவில் நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.  3.இடுபொருள்கள் :
# உங்களுடைய  நிலத்து மண்20 கிலோ        # மக்கிய தொழுஉரம் 2கிலோ(அ) மண் புழு உரம்  . # புதிய சாணம் 1/2கிலோ # தண்ணீர்  தொட்டி யில் 10 செ.மீ அளவில் இருக்கவேண்டும். # முருங்கை கீரை 1/2 கிலோ # வேப்பிலை 1/2 கிலோ# பாறைத் தூள்  2கிலோ (அ) வாழைப்பழம் 4 எண்ணிக்கை .

செய்முறை மற்றும் பராமரிப்பு:  தொட்டி யில் மண், தொழுஉரமம், சாணம் (சாணத்தை கரைத்து சக்கை எடுத்துவிட்டு  தொட்டியில் ஊற்றவும் ) பாறைத்தூள் தண்ணீர், வேப்பிலை முருங்கைக் கீரை பாறைத் தூள் (அ) வாழை பழம்   அனைத்து பொருட்களையும் தொட்டியில் போட்டு நன்றாக கலக்கி விடவும்  பிறகு அசோலா விதைகளை தொட்டியில் போட்டு  மேலே சிறிதளவு தண்ணீர் தெளித்து விடவும் . 15 நாட்களுக்கு ஒரு முறை   முருங்கை கீரை ,வேப்பிலை, சாணம் , வாழை பழம்   கொடுக்க வேண்டும் .  மாதம் ஒரு முறை  தொழுஉரம் (அ) மண் புழு உரம்  கொடுக்க வேண்டும் . மாதம்ஒரு முறை தண்ணீரை மாற்ற வேண்டும்.  #குறிப்பு இந்த முறையில்  அசோலா வளர்ப்பதால்  6 மாதம் வரை நன்றாக  இருக்கும். 6 மாதத்திர்க்கு ஒரு முறை தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்.  10 நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் அசோலா வளர்க்க தயார் செய்து கொள்ளலாம் .

No comments:

Post a Comment

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள்

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள். =================================  February 7, 2019 (ப.ப) இன்றைக...

உழவர் சந்தை