மல்லிகை சாகுபடி:
மலர் பயிர்களின் ராணி மல்லிகை.
ஒரு விவசாயின் பொருளாதாரத்தை உயர்த்தும் பயிர்களில் இதுவும் ஒன்று. பத்து வருடம் வரை மகசூல் பெறலாம் செடிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப மகசூல்.
குண்டு மல்லி சாகுபடியில் இடைவெளி 4×4 அல்லது 5×4 அடி. பதியன் குச்சிகள் ஆடி மாதம் நடவு செய்வது சிறப்பு.
1×1.5 ஆழம் குழி வெட்டி ஒரு மாதம் கழித்து மண்புழு உரத்துடன் சிறிது மக்கிய ஆட்டு உரம் மற்றும் மண் கலந்து நடவு செய்யும் போது செடி சுற்றிலும் இட்டு சிறிது மண் அனைக்க வேண்டும்.மண் தண்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
தேவை படுபவர்கள் மாதம் ஒரு முறை நுன்னூட்ட சத்துக்கள் வேருக்கு அருகே இட்டு தண்ணீர் கட்ட வேண்டும்.
உயிர் உரங்களான பாஸ்போ பாக்டீரியா, அசோஸ் பைரில்லம், பொட்டாஷ் , பாக்டீரியா மற்றும் VAM இவற்றை தொழுஉரத்துடன் அதாவது சிறிது வெல்லம், தயிர் கலந்து மூன்று நாட்கள் நிழலில் வைத்து மாதம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சி பின் வேரில் இடுவதால் நல்ல வளர்ச்சி மற்றும் திடமாக செடிகள் வளரும்.
களை இல்லாமல் இருப்பது நல்லது. வரிசைகள் இடைவெளியில் சணப்பை விதைகளை தொடர்ந்து தூவி ஒரளவு வளர்ந்த உடன் மடக்கி உழுது விட்டாலூம் நல்ல சத்துக்கள் மல்லிகை செடிகளுக்கு கிடைக்கும். களைகள் எளிதாக கட்டுப்படும்.
நட்ட ஆறாம் மாதம் முதல் பூக்கள் தோன்றும் ஏப்ரல் முதல் அதிகமாக துளிகள் தோன்றும் அதை அடுத்து மொட்டுக்கள் தோன்ற ஆரம்பிக்கும் மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் மற்றும் மீன் அமிலம் இவற்றை தொடர்ந்து பாசன நீரில் கலந்து விட்டால் நல்ல மகசூல் கிடைக்கும். அதாவது அளவிற்கு அதிகமாக துளிர் மற்றும் பூக்கள் தோன்றும். வருடம் இருமுறை ஆட்டு சாணம் இட வேண்டும்.
கற்பூரகரைசல் மற்றும் மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் இவை இரண்டையும் மாறி மாறி தெளித்தால் எந்த பூச்சிகளும் தாக்காது மல்லிகை செடிகளை அதிகம் தாக்குவது. செம்போன் மற்றும் மொட்டு துளைப்பான்.
இரண்டாவது வருடம் முதல் பூக்கள் பூத்து முடிந்து உடனே கவாத்து செய்வதால் செடிகள் அதிக உயரம் வராமல் தடுக்கலாம் அடுத்து அதிக துளிர்கள் தோன்றும் மேற்கண்ட சாகுபடி முறை பயன்படுத்தினால் வருடம் முழுவதும் பூக்கள் பறிக்கலாம்..
No comments:
Post a Comment