வேர்க்கடலையை ஏன் குளிர்காலத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா?
குளிர்காலத்தில் அதிகம் விளையும் பயிர் வேர்க்கடலை இதை நம் முன்னோர்கள் தங்களது உணவில் குளிர்காலத்தில் அதிகம் சேர்த்து கொள்வதற்கான காரணம் இது குளிர் கால பயிர் மட்டுமல்ல இந்த காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதனால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பதும் தான்.
உடலை உஷ்ணமாக வைத்திருக்கும்
வேர்க்கடலை இயக்கையாகவே நமது உடலின் வெப்ப அளவை அதிகரிக்கக் கூடிய ஒன்று. இதனால் குளிர் காலத்தில் தேவையான வெது வெதுப்புடன் நமது உடல் இருக்கும். பொதுவாக குளிர்காலத்தில் நமது கல்லீரல் நல்ல ஆரோக்கியத்துட ன் செயற்படும் என்பதால் எண்ணெய் நிறைந்த உணவுகளையும் அதனால் எளிதாக செரிமானம் செய்ய முடியும்.
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் :
வேர்க்கடலை எண்ணெய் உடலில் இருக்கும் கேட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை தரக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள் இதனால் பித்தக்கட்டிகள் உருவாவதற்கான அபாயம் குறையும்.
சர்க்கரை அளவை சரி செய்யும்:
வேர்க்கடலையில் இருக்கும் சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவை சீர் படுத்த கூடியது. சமீபத்திய ஆய்வின்படி வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதற்ககான அபாயம் 21% குறையும் என்று தெரியவந்துள்ளது.
சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் :
வேர்க்கடலையில் இருக்கும் நல்ல கொழுப்பு சருமத்தில் எண்ணெய் பதத்தை பாதுகாக்கும் இதனால் குளிர்க்காலத்தில் நமது சருமம் வறண்டு போவதை தடுக்கும் மேலும் வேர்க்கடலையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் இ சத்துக்கள் சருமத்தின் பொலிவை அதிகரிப்பதுடன் தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும். வேர்க்கடலையில் இருக்கும் ஆன்டிஆஸிடெண்ட் அப்பழுக்கற்ற சருமத்தை தரக்கூடியது.
No comments:
Post a Comment