Tuesday, July 24, 2018

விவசாயத்தில் நிலத்தடி நீர் ஆய்வின் பங்கு

விவசாயத்தில் நிலத்தடி நீர் ஆய்வின் பங்கு



நிலதடி நீர்மட்டம் நிலத்தின் பூமியின் தன்மைக் கேற்ப  இடத்திற்கு இடம் வேறுபடும் ஒரிடத்தில் 60 அடி ஆழத்தில் கிடைக்கும் நிலத்தடி நீர் வேறொரு இடத்தில் 150 அடியிலும் மற்றொரு இடத்தில் 200 அடியிலும் கிடைக்கலாம்.

விவசாயத்திற்கு போர்வெல் போடுவதற்கு முன்னர், போர் போட வேண்டிய இடத்தில் விஞ்ஞான முறை நிலத்தடி நீர் ஆய்வு மேற்கொள்ளுதல் மிகவும் இன்றியமையாதது. 

குறிப்பாக மணற்பாங்கான இடங்களில் மேற் குறிப்பிட்ட விஞ்ஞான முறை நிலத்தடி நீர் ஆய்வு மிகமிக அவசியம். காரணம் அத்தகைய இடங்களில் போர் போடும் போது போர்வெல்லின்  விவசாயத்தில் நிலத்தடி நீர் ஆய்வின் பங்கு மொத்த ஆழத்திற்கும் கேசிங் அவுட்டர் பைப் (துளை உள்ள மற்றும் துளை அற்றது.) இறக்கியாக வேண்டும். 

மேற்குறிப்பிட்ட மணற்பாங்கான இடங்களில் பொதுவாக ஒவ்வொரு இடத்திற கேற்றாற்போல் மணல், களி மற்றும் மணல்பாறை இவை மாறி மாறி வரும். இதில் களி அதிகமாக வரும் ஆழங்களில் துளையில்லா  பைப் இறக்குதல் அவசியம். மணல் மற்றும் பாறை வரும் ஆழங்களில் எல்லாம் துளையுள்ள பைப்புகள் இறக்க வேண்டும்.

 இவற்றை சரியாகக் கணிக்க விஞ்ஞான முறை நிலத்தடி நீராய்வு அவசியம். தமிழ் நாட்டைப் பொருத்தவரை நிலத்தடி நீரியல் அடிப்படையில் இடங்களை கீழ் கண்டவாறு பிரிக்கலாம்.

பாறை உள்ள இடம்
மணற்பாங்கான இடம்
மணல் மற்றும் பாறை உள்ள இடம்
ஆற்றுபடுகை

மேற்குறிப்பிட்ட நான்கு பிரிவுகளில் ஆற்றுப் படுகையில் நிலத்தடி நீர் மிக அபரிதமாக கிடைக்கும் 

மணல் இடங்களில் நிலத்தடி நீர் மிக நன்றாகவே இருக்கும். 

பாறை உள்ள  இடங்களில் பாறை முறிவுகள் அதிகமிருந்தால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும்.
மேற்குறிப்பிட்ட இடங்களை கீழ்க்கண்ட வரைபடங்கள் மூலம் விளக்கலாம்.

மேற்குறிப்பிட்ட இடங்களின் தன்மைகளை அறியவும் பாறை அமைப்புகளைத் தெளிவாக தெரிந்து கொள்ளவும், விஞ்ஞான முறை  நிலத்தடி நீர் ஆய்வு நன்கு அனுபவம் வாய்ந்த நிலத்தடி நீர் வல்லுநர்களால்  மேற்கோள்ளப்பட்டு, பின்னர் போர்வெல் போட்டால் அது வெற்றிகரமாக அமையும் என்பது உறுதி.

விவசாய நண்பர்களுக்கு இது குறித்து மேலும் விளக்கம் தேவைப்பட்டால்,    04567-31704 (ராம்நாடு) என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி
தகவல். எஸ். கணேசகுரு, எம்.எஸ்.சி.
நிலத்தடி நீர் ஆய்வாளர்  அரசு அங்கீகாரம்

No comments:

Post a Comment

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள்

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள். =================================  February 7, 2019 (ப.ப) இன்றைக...

உழவர் சந்தை