கால்நடைகளை தாக்கக்கூடிய மடிநோயை தடுக்கும் முறைகளும்
"மாடா உழைச்சு ஓடா தேய்ந்தவன்" என்பது நம் நாட்டுப் பழமொழி. மனிதனுக்கு உழைத்துச் சாவதற்காகவே பிறந்தவை மாடுகள். ஓய்வெடுக்க முடியாமல், ஓட ஓட விரட்டப்பட்டு, வண்டி இழுத்து, பட்டினியால் உடல் வற்றி, தன் முகத்தையே பார்க்கும் கன்றுக்குகூட பால் கொடுக்க முடியாமல், குடம் கணக்கில் நமக்குப் பால் கொடுக்கும், உழைக்க மட்டுமே பிறந்த பாவப்பட்ட, பரிதாபமான உயிரிகள் நம் மாடுகள்.
செயற்கை வாழ்க்கைக்குள் மனிதன் புகுந்த பிறகுதான் மாடுகள் புறக்கணிக்கப்பட்டு விட்டன. இயற்கையோடு இயைந்து, நோய் நொடியில்லாமல் வாழ்ந்த காலத்தில் தன்னைக் காத்துக் கொள்வதைவிட, தன் இயற்கைச் செல்வங்களை, கால் நடைகளை, மரம் வளர்ப்பை, நிலத்தடி நீர் ஆதாரத்தை, சுற்றுப்புறச் சூழலை, தூய்மையான மூச்சுக் காற்றை மாசுபடாமல், குன்றாமல் குறையாமல், காத்தபடி வாழ்ந்தான் மனிதன்.
"மாட்டின் கொம்பு கூறு, மனிதனின் கொம்பு மயிறு" என்பது பழமொழி. கூர்மையாக மேல் நோக்கி வளர்ந்துள்ள கொம்புகள்தான் சூரிய ஒளியை உள்வாங்கி உடலில் வைட்டமின் 'டி' யை உற்பத்தி செய்து கொடுக்கும் ஆன்டென்னாக்கள். இந்த வைட்டமின் 'டி' தான் பாஸ்பரசை உறுஞ்சி எடுத்து, உள்வாங்கி கால்சியம் பாஸ்பேட்டாக எலுமபுகளில் படியச் செய்து எலும்புகளை உறுதிமிக்க தாக்குகின்றன.
"குளம்பு பட்ட மண்ணுக்குக் குண்டுமணி எருவும் வேண்டாம்" என்பது இன்னுமொரு பழமொழி. சூரிய ஒளியிலிருந்து உள்வாங்கப்பட்ட, இயற்கையான உயிரோட்ட சக்தி மாட்டின் குளம்பின் வழியே நிலத்துக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டு, விளைநில மண்ணிலே ஊட்டம் ஏற்றப்படுகின்றது. அதனால்தான் உழவு வேலையின் போது எருதுகளின் லாடங்களை கழற்றி விட்டு, உழவு செய்தார்கள். ஏர் பூட்டி, உழவு செய்தது சூரிய ஒளி சக்தியை பூமிக்குள் பாய்ச்சி, வளம் கூட்டுவதற்காகத்தான் என்பதை கருத்திற் கொள்ளத் தவறிவிட்டோம்.
(கொம்பு, சாண உரம் இதன் அடிப்படையில் தான்) உழவு மாடுகள் சிறுநீர் கழிக்கும்போது 50 அடி நீளத்திற்கு குறைந்தது 8 கிலோ மண்ணுக்கு தன் சிறுநீரால் (யூரியா) உரமேற்றி புரட்டிக் கொடுத்து, இயற்கையான வளம் பெருகிறது. ஊரின் நிலம் முழுவதும் பல ஊர் மாடுகளின் குளம்புபட்டு உரமேற்ற வேண்டும்
என்பதற்காகத்தான் பொங்கல் விழா நாளிலும் அதன் பின்னரும் மாடுவிரட்டு, மஞ்சுவிரட்டு, எல்லைப் பந்தையம், சல்லிக்கட்டு, என்று பல பேர்களில் பல ஊர் காளைகளை ஒரே ஊரில் கூட்டிவைத்து நில வளத்தைப் பெருக்குவதே விழாவாக, பொங்கல் விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்து வந்தனர் நம் முன்னோர்கள்.
"அதிர ஓடினால் முதிர விளையும்" என்ற பழமொழி இதைத்தான் சொல்லுகின்றது. பூமி அதிர மாடுகள் ஒடினால் அதில் விளையும் பயிர் மணிகள் முதிர்ச்சி பெறும். சாலி குறையும். முதிர்ந்த மணிகள் சுவை நிறைந்த விதைகளாகப் பயன்படுத்தக்கூடிய முற்றிய மணிகளாக இருக்கும் என்பது முன்னோர்கள் கண்டுபிடித்துப் பயன்படுத்திய இயற்கை விதி.
மடிவீக்க நோய்
மடிவீக்க நோய் நுண்கிருமிகள் கால்நடையின் மடியை தாக்குவதால் நோய் ஏற்படுகிறது. மாடுகள் நன்கு பராமரிக்காமல் அசுத்தமாகவும் மற்றும் சேறான தரையில் வைத்திருப்பதாலும் இந்நோய் உண்டாகிறது. மடியில் ஏற்படும் காயங்கள் அல்லது பாலுட்டும்போது கன்றுகளால் ஏற்பட்ட காயங்கள் அல்லது தவறான பால் கறக்கும் முறைகளினால் ஏற்பட்ட காயங்கள் ஆகியவை இந் நோய் கிருமித் தொற்று ஏற்படக் காரணமாகின்றன அதிகப் பால் கறக்கும் மாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
மடிவீக்க நோய் தாக்குதலின் அறிகுறிக்கள்
மடிசுற்று வீக்கத்துடன் காணப்படும்
பாதிக்கப்பட்ட மடி சூடாகவும் வலியையும் கொடுக்கும் இந்த மடியை தொட்டுபார்த்து தெரிந்து கொள்ளலாம்.
நோயுற்ற மடியிலிருந்து கறக்கப்படும் பால் திரிந்து, தண்ணீராயும் நிறம் மாறியும் காணப்படும்
ஆதிகமாய்ப் பாதிக்கப்பட்ட மடியிலிருந்து வரும் பால் துர்நாற்றத்துடன் சலம் கலந்து காணப்படும்
மடி விக்க நோயினால் ஏற்படும் பாதிப்புகள்
பால் உற்பத்தி குறையும்
மற்ற மாடுகளுக்கு இந்நோய் பரவுவதால் வருவாய் இழப்பு
மடிவீக்க நோயை குணப்படுத்த மிகுந்த சிரத்தை, மருந்து மற்றும் பணவிரையம் ஏற்படுகின்றது
சரியாகக் குணமாகாத மாடுகள் உபயோகமில்லாமல் போய்விடுகின்றன. இதனால் பண்ணையாளர்கள் நல்ல மாடுகளை இழக்க நேரிடுவதால் சரிவர பயன்படுத்த முடியாமல் நாட்டிற்கும் பொருளாதார நஷ;டம் உண்டாகிறது.
மடிவீக்க நோயை தடுக்கும் முறைகள்.
மடிவீக்க நோய் வந்தபின் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதைவிட சுகாதாரமான முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோய் கிருமிகளின் எண்ணிக்கையையும், தாக்கத்தையும் குறைத்து நோய் வராமல் தடுக்க முடியும்.
மாட்டுத் தொழுவத்தில் சாணம், சிறுநீர் தேங்க விடாமல் கவனிப்பதுடன், கிருமி நாசினி மருந்தைக் கொண்டு தொழுவத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
பால் கறப்பதற்கு முன்னும், பின்னும் பொட்டாசியம் பெர்மாக்கனேட், அயோடோபோர் ஆகிய கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
மடிவீக்க நோய் வராமல் தடுக்க
மடியில் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது
தரையை சுத்தமாக இருக்கும்படி வைத்துக் கொள்வது
ஈக்கள் வராமல் தடுக்க சுண்ணாம்புத் தூளை தூவுவது
பால் கறக்கும்போது சுத்தமான இடத்திற்கு கொண்டு சென்று கறப்பது
பால் கறப்போர் கைகளை சோப்புப் போட்டுக் கழுவுவது
மடியை பால் கறக்கும் முன் சுத்தமாக கழுவிவிடுவது
பால் கறப்பது விரைவாகவும் முழுமையாக செய்யவும்
நோய் பாதித்த மடியிலிருந்து பாலைக் கடைசியாகத் தனிப் பாத்திரத்தில் கறப்பது அதனை உபயோகப்படுத்தாமல் இருப்பது
நல்ல மாடுகளை முதலில் கறந்தபின்னர் நோயுற்ற மாடுகளை கறப்பது
வருமுன் காக்கும் வழிமுறைகள்
பால் கறந்த பின் மடிக்காம்பு துவாரமம் பால் வரும்பாதையும் திறந்திருப்பதால் மாடுகள் படுத்தால் நோய்கிருமிகள் மடியில் நுழைய ஏதுவாகும்
பால் கறந்தவுடன் தீவனமளிப்பதால் 30- 40 நிமிடங்கள் வரை மாடுகள்படுப்பதைத் தவிர்க்கலாம்.
பால் வற்றிய மாடுகளில் மடியினை ஆரோக்கியமாகப் பராமரிக்க கால்நடை மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
கொசு, ஈ, எறும்பு தொல்லை தீர
சாம்பிராணி - 50 கிராம்
டீதூள் வடித்த சக்கை - 50 கிராம்
மஞ்சள் - 50 கிராம்
புதினா பொடித்தது - 50 கிராம்
வேப்பிலை - 50 கிராம்
எல்லாவற்றையும் கலந்து புகை மூட்டம் போடவும்
No comments:
Post a Comment