Friday, August 31, 2018

தேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை

தேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை





தென்னை  விவசாயிகளின்; கருத்துக்கு தென்னை வைத்தால் தின்றுவிட்டு சாவோம்! பனையை வைத்தால் பார்த்துட்டு சாவோம்! என்ற பழமொழிக்கு ஏற்ப தென்னை வைக்க முன் வந்தார்கள்.

 தென்னை ஓரளவுக்கு வறட்சியையும் தாங்;கி வளரக்கூடிய பயிர். மேலும் அதிக வேளையாட்கள் தேவைப்படாது. 3- 5 வருடங்கள் வரை ஊடு பயிர்  வைத்துக் கொள்ளலாம். காயும் அறுவடை செய்ய உகந்தது 40 நாட்களுக்கு ஒருமுறை தேங்காயை அறுவடை செய்யலாம். 

தென்னை  விவசாயத்தில் அதிக லாபம் பெற தேங்காயாக விற்பனை செய்வதை விட மதிப்பூட்டல் செய்து கொப்பரையாக விற்றால் அதைவிட பன்மடங்கு லாபத்தை ஈட்டித் தரக் கூடியது. பொதுவாக தென்னை விவசாயிகள் அவற்றை உருட்டு காண்ராக்டாக வியாபாரிக்கு கொடுப்பார்கள்.

வியாபாரிகள் தேங்காய் வெட்டும் பொழுது நன்றாக இருக்கும் காய்களை எடுக்துக் கொண்டு சிறிய காய்களை கழித்து போட்டு விடுவார்கள் அதனால் நமக்கு இழப்புதான். இதுமட்டும் அல்லாது  கைகாய் என்று 100 காய்களுக்கு 5 காய் என்று எடுப்பார்கள்.

தேங்காய்  விலைக்கு எடுக்கும் பொழுது ஒரு காய் ரூ 5 - 6 என்று தான் எடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் விற்பனை செய்யும் பொழுது ஒருகாய் 10 ரூபாய்க்கு விற்பனை செய்வார்கள்.இவற்றை தவிற்கவும் மேலும் கூடுதல் விலை பெறவும். 
  
தென்னை விவசாயிகள் அவற்றை கொப்பரை தேங்காயாக மதிப்பூட்டல் செய்து  மாற்றி விற்பனை செய்தால் மேலும் அதிக லாபம் பெறலாம்.

கொப்பரையில்கிடைக்கும் லாபம் 

தேங்காயை உரித்து போடும் பொழுது உரிமட்டையையும் விற்பனை செய்யலாம்.
 ஒரு கிலோ ரூ 1.50 க்கும்,

 கொட்டாங்குச்சி ஒரு கிலோ ரூ. 10 க்கும் விற்பனை செய்யலாம். 

கொப்பரையாக காயவைத்து விற்றால் ஒரு கிலோ 100 - 105 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்.

 நமக்கு ஒரு காய் விலை 10- 15 ரூபாய்  கிடைக்க வாய்ப்புள்ளது.
1000 தேங்காய் உரித்து போட்டால் 100 கிலோ பருப்பு கிடக்கும் 
இவற்றை எண்ணை ஆக ஆட்டி விற்றால் இன்னும் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளது.

 தென்னை விவசாயிகள் தேங்காயாக விற்பனை செய்வதை விட்டு விட்டு கொப்பரை அல்லது எண்ணையாக  மதிப்பூட்டல் செய்து அதிக லாபம் பெற முன்வருவோம்.

தென்னை மரம் வைத்திருப்போர் தினம் தினம் காற்று அடித்தால் அல்லது மரத்திலேறி காய் பறிக்க முடியாமல் இருந்தாலும் அந்த காய்கள் ஒவ்வொன்றாக கீழே விழும். அவற்றை சேர்த்து வைக்க முடியாமல் விற்றுவிடுவோம் அல்லது உறவினர்களுக்கு கொடுத்துவிடுவோம் நமக்கு முதல் சேராது. 

தேங்காயாக சில்லரையில் விற்பது கை வந்து சேராது இவற்றை தவிர்க கொப்பரையாக மதிப்பூட்டல் செய்யலாம். இது பழனிச்சாமி என்ற  தென்னை விவசாயி கூறிய கருத்து.

Saturday, August 25, 2018

தூதுவேளை பழங்கள்

தூதுவேளை பழங்கள் 



தூதுவேளை – மருத்துவ பயன்கள்

தூதுவேளை கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. இருமல், இரைப்பு போன்றவற்றைக் குணமாக்கும். தேரையர் காப்பியத்தில், “தூதுவேளையையுணத் தொக்கினிற் றொக்கிய வேதையா நோயெலா மெய்யைவிட்டகலுமே” என்று தூதுவேளையின் சிறப்பு கூறப்பட்டுள்ளது.

தூதுவேளை இலை கோழையகற்றும்; உடலைத் தேற்றும்; காமம் பெருக்கும்; உணவின் சுவையைக் கூட்டும். தூதுவேளை பூ, உடலை உரமாக்கும்; காமம் பெருக்கும். தூதுவேளை காய், கோழையகற்றும்; பசியைத் தூண்டும்; மலச்சிக்கலைப் போக்கும்.

தூதுவேளை பழம், மார்புச்சளி, மார்பு வலி, கோழை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். தூதுவேளை இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு மருந்துப் பொருளிலிருந்து புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளைத் தயாரிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தூதுவேளை வளைந்து படரும் ஏறுகொடி தாவரமாகும். படரும் வாய்ப்பு கிடைக்காத போது செடி போன்ற அமைப்பில் காணப்படும். சிறகாக உடைந்த முட்கள் கொண்ட இலைகள், ஊதா அல்லது அரிதாக வெள்ளை நிறப் பூக்கள் உருண்டையான பச்சைக் காய்கள் மற்றும் சிவப்பு நிறமான பழங்களைக் கொண்டது.

கத்தரிப்பூ நிறமான பூக்கள் மற்றும் இலை, தண்டுகளில் காணப்படும் வளைந்த முட்களைக் கொண்டு தூதுவேளையை எளிதில் அடையாளம் காணலாம். தூதுவேளை வயல் வெளிகளிலும், ஈரப்பாங்கான புதர்களிலும் பாழ்நிலங்களிலும் களிப்பான நிலப் பகுதிகளிலும் விரும்பி வளர்பவை.

தூதுவேளையின் வேர் முதல் பழம் வரை அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுபவை. தூதுவேளை இலை, பூ, காய் ஆகியவை மருத்துவத்தில் பெருமளவில் பயன்படுபவை. தூதுவளை, தூதுவளம், தூதளை, சிங்கவல்லி என்கிற முக்கியமான மாற்றுப் பெயர்களும் தூதுவேளைக்கு உண்டு. இது கற்ப மூலிகையாகும்.

இரைப்பு, இருமல் குணமாக ஒரு கைப்பிடி அளவு தூதுவேளை இலைகளை, 2 குவளை நீரில் போட்டு, ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, வடிகட்டிக் குடித்துவர, இரைப்பு, இருமல் ஆகியன தீரும் அல்லது ஒரு கைப்பிடி இலைகளை, அதே அளவு பொடி செய்த வெங்காயத்துடன் சேர்த்து, நல்லெண்ணெயில் வதக்கி, துவையலாக்கிச் சாப்பிட வேண்டும். இதேபோன்று, மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு, பின்னர் மூன்று நாட்கள் விட்டு மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு 21 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம்.

தூதுவேளைக் காயை நெய்விட்டு வதக்கி, குழம்பு வைத்து, தொடர்ந்து சாப்பிட்டு வர மார்புச் சளியைக் கரைக்கும்.

ஒரு டம்ளர் நீருக்கு, 10 தூதுவேளை இலைகள் என்கிற அளவில் இட்டுக் காய்ச்சி, குடிநீராகச் செய்து, குடித்துவர சளியுடன் கூடிய இருமல் குணமாகும். தினமும் இரண்டு வேளைகள், 3 நாட்கள் சாப்பிட வேண்டும்.

தூதுவேளைக் காயை உலர்த்தி, தயிர், உப்பு ஆகியவற்றில் பதப்படுத்தி வைத்துக் கொண்டு, எண்ணெயில் வறுத்து, இரவில் மட்டும் சாப்பிட்டுவர மலச்சிக்கல் தீரும்.

தூதுவேளை இலை, காய், வற்றல் போன்றவற்றை நம் உணவில் ஏதாவது ஒரு வகையில் 48 நாட்கள் தொடர்ச்சியாக சாப்பிட்டுவர அரிப்பு நோய்கள் தீரும். இரவில் அதிகமாகக் கண் விழித்ததால் ஏற்படும் கண் எரிச்சலும் இதனைச் சாப்பிடுவதன் மூலம் குறைக்கலாம்.

அகத்தியர் குணமபாடம், இறுகிய மார்புச் சளியையும், தொடர்ச்சியான இருமலையும் அறவே நீக்கும் திறனை தூதுவேளை காய் கொண்டுள்ளது என்பதை உறுதி செய்கின்றது.
கபக்கட்டு கோழை கதித்ததிரி தோடம்
குபுக்கென் றெழும்புநீர்க் கோவை-கவுக்கென்
றழுத்துவிட முன்போம் அடர்தூது ளத்திற்
பழுத்துவிழும் காயையுண்டு பார்

தூதுவேளையைப் பற்றி இராமலிங்க வள்ளலார் கூறுவதைப் பார்ப்போம். அறிவை விளக்குவதற்கும், ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கும், சளியை அகற்றுவதற்கும் மிக முக்கியமான ஒரு தாவரமாகத் தூதுவேளை திகழ்கின்றது. உடல் அசதியை நீக்கும். தேகத்தை மிகவும் வலுவுள்ளதாக மாற்றும் என்பதால் நமது முன்னோர்கள் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் தந்துள்ளார்கள்.

ஆண்மை பெருக தூதுவேளைப்பூவை உலர்த்தி தூள் செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு ½ தேக்கரண்டி அளவு தினமும் காலையில் பாலுடன் சாப்பிட வேண்டும்.

தூதுவேளைத் துவையல்

தூதுவேளை இலைகளை சுத்தம் செய்து, முட்கள் நீக்கி, துவையலாகச் செய்து சாப்பிட்டு வரலாம். இது மிகவும் சுவையானது, கிராமப் பகுதிகளில் வெகுவாகப் பிரபலமானது. இந்தத் துவையலை சாப்பிட, இருமல், சளி, கோழைக்கட்டு, மூச்சுத் திணல் ஆகியன குணமாகும். மேலும், செரிமானத் தன்மையும் அதிகரிக்கும்.

வெள்ளைத் தூதுவேளை

இதற்கு சங்கத் தூதுவேளை என்கிற பெயரும் உண்டு. தோற்றத்தில் தூதுவேளையை ஒத்திருந்தாலும்,பூக்கள் தூய வெள்ளை நிறமானவை. இவை இயற்கையில் அதிகமாக வளர்வதில்லை.

சிதம்பரம், தஞ்சாவூர், திருவாரூர் போன்ற பகுதிகளில் மட்டும் காணப்படுவதாக‌ அறியப்பட்டுள்ளது. தூதுவேளையின் அனைத்து மருத்துவக் குணங்களும் இதற்கும் பொருந்தும். இது ஒரு காயகல்ப மூலிகை என்பதாக நமது மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் இலையைத் துவையல் செய்து சாப்பிட குரல் இனிமையாகும்.

Friday, August 24, 2018

பயோ என்சைம் தயாரிப்பு மூலம் இயற்கையான முறையில் துணி துவைக்கும் முறை.

பயோ என்சைம் தயாரிப்பு மூலம் இயற்கையான முறையில் துணி துவைக்கும் முறை.











துணி துவைக்க ரசாயனம் கலந்த சோப்பு கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகிறோம் என்று எனக்குள் உறுத்தல். முடிந்த வரை தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கப் பழகி வருகிறேன். 

இப்போது வீட்டில் பயோ என்சைம் தயாரிப்பு வெற்றியாகியுள்ளது. பருத்தி ஆடைகள் தோட்ட வேலை செய்து சேறு அப்பி அழுக்காகி விட்டால் துணிகள் விரைவில் மங்கிப் போகும். அழுக்கும் சரியாகப் போகாது. 
பயோ என்சைம் நன்றாக அழுக்கு நீக்குகிறது. திருப்தியாக உள்ளது. 

செய்முறை:
 தண்ணீர் 1 லிட்டர்
நாட்டு சர்க்கரை 100 கிராம்
எலுமிச்சை பழம் 3
ஒரு லிட்டர் தண்ணீரில் மூன்று எலுமிச்சை பழங்களையும் மிக்ஸியில் அரைத்து ஊற்றி நூறு கிராம் நாட்டு சர்க்கரை கலந்து கண்ணாடி பாட்டிலில் மூடி வைக்கவும். தினமும் ஒரு முறை திறந்து மூடி வைக்கவும்.  ஏழு நாட்களில் தயாராகி விடும். 

ஒரு பக்கெட் துணிக்கு நூறு மில்லி அல்லது அதற்கு மேல் கொஞ்சம் கலந்து ஊறவைத்து துவைக்கலாம். 

துவைக்கும்போது நுரை வராது. எனவே தண்ணீர் குறைவாக செலவாகிறது. 

நான் ஐந்து லிட்டர் தண்ணீரில் அரை கிலோ நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிளாஸ்டிக் வாளியில் மூடிவைத்தேன். உண்பதற்கு வாங்கும் ஆரஞ்சு, மாதுளம் பழங்களின் தோலை அப்படியே அதில் சேர்த்து வருகிறேன். எலுமிச்சை சாறு பிழிந்து பின்னர் அதன் தோலையும் சேர்க்கிறேன். மிக்ஸியில் அரைக்கவில்லை. இப்போது பயன் படுத்துகிறேன். துவைக்கும் போதே நல்ல மணம். துவைத்து அலசிய பின்னும் தொடர்கிறது. 

இதையே தரை துடைக்கவும் தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம்!

நீங்களும் பயன்படுத்துங்கள். சோப்பு வாங்கும் செலவு குறையும். சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும்! நம் ஒவ்வொருவரின் சிறிய ஆனால் சீரிய முயற்சி!

Monday, August 20, 2018

கத்தரி சாகுபடியில் சாறுஉறிஞ்சும் பூச்சியை கட்டுப்படுத்தும் முறை

கத்தரி சாகுபடியில்  சாறுஉறிஞ்சும் பூச்சியை கட்டுப்படுத்தும் முறை







கத்தரியில் பெருமாபாலும் இலைப்பேன், தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, அஸ்வினி முதலிய  பூச்சிகள் செடிகளில்;  உள்ள சாற்றை உறிஞ்சுவதால் இவற்றை சாறுஉறிஞ்சும் பூச்சிகள் என அழைக்கப்படுகிறது.

இந்த பூச்சிகள் செடிகளில் உள்ள சாற்றை உறிஞ்சுவது மட்டும் அல்லாமல் மற்ற செடிகளிலும் உறிஞ்சிய  சாற்றை உமிழ்ந்து விடுவதால்  வைரஸ் நோயையும் பரப்புகிறது. பிறகு. செடிகள்  இளமஞ்சள் நிறமடைந்து காய்ந்து உதிர்ந்து விடும்.
 
இயற்கை முறையில் சாறுஉறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த

வரிசைப் பயிராக உளுந்து, தட்டப்பயறு, துவரை முதலிய பயறுவகை பயிர்களை வாய்காலில் நடவு செய்து சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
 அல்லது
சாறுஉறிஞ்சும் பூச்சி, நோய் தாக்கிய செடிகளை வயலில் இருந்து அகற்றி விடவேண்டும்.

மஞ்சள் நிறப்பொறி அல்லது ஊதா நிறப்பொறி   ஒரு ஏக்கருக்கு  பத்து  இடங்களில் வைத்து கட்டுப்படுத்தலாம்.
 
அல்லது

தாவர இலைச்சாறு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

அசிபேட் ஒரு லிட்டர் தண்ணீருக்கு  2 கிராம் அவற்றுடன் அசிட்டமா பிரைடு ஒரு கிராம்  என்ற அளவில் கலந்து  தெளித்து  கட்டுப்படுத்தலாம்.

மேலும் தொடர்புக்கு 

முகநூலில் பார்க்க – rsgaseed
யூடியூப்பில் பார்க்க rsgaseed kannivadi
வலைதளம் – rsga.co.in,  l3fpedia.com

Friday, August 17, 2018

உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகையான #நாகதாளி எனப்படும் #சப்பாத்தி கள்ளிச்செடியை ஏன் பயன்படுத்த தவறினோம்?

உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகையான #நாகதாளி எனப்படும் #சப்பாத்தி கள்ளிச்செடியை ஏன் பயன்படுத்த தவறினோம்?







புற்றுநோய் கட்டிகள், கட்டிகள் உடலில் ஏன் உருவாகிறது? நமது இரத்தத்தில் உள்ளபல விதமான செல்கள் கனிம கரிம பொருட்கள் கலந்து உள்ளது இவைகள் தான் உடல் செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. டிபன்ஸ் மெக்கானிசம் எனப்படும் உடல் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன நமது உடலுக்குள் நுழையும் நூண்னுயிரிகளை இரத்த அணுக்கள் சண்டையிட்டு அழித்து விடுகின்றது இந்த கழிவுகள் தோலின் வழியாக வெளியேற்ற படுகின்றன. இந்த கழிவுகள் வியர்வை துவாரங்களை அடைத்து உடலில் கட்டிகளை உண்டு பன்னுகிறது.... இந்த கழிவுகள் சிறிது சிறிதாக திரண்டு பெரிதாகி சிவந்து,உடைந்து,சீழாக வெளியேறிய பின்பு புண்ணாக மாறி உடல் ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி மூலமாக புண் ஆறி விடுகிறது இது தான் இயற்கையான நிகழ்வு அதாவது கிருமிகளை கிருமிகளே அழித்து உடலில் இருந்து வெளியேற்றி உடலை பாதுகாக்கிறது தோலின் தன்மையை கெடுக்கும் சன்ஸ்கிரின் லோசன் மற்றும் அதிகப்படியான கிரீம்களை பயன்படுத்தும் அமெரிக்கா ஐரோப்பியா நாடுகளில் அதிகப்படியான புற்றுநோய் உருவாகிறது என்பதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ளலாம்....

நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக முக்கிய காரணம் இதில் உள்ள நுண்ணூட்டங்களே, மிகையாக. உள்ள கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும்  உயர்தரமான நார்சத்தும் நிறைந்து உள்ளது இதில் விட்டமின் B மிகவும் அதிகமாக இருக்கும். இதில் இருக்கும் மிகையான பொட்டாசியம் இரத்த அழுத்தம் மிகையாகாமல் பாதுகாக்கிறது இரத்த நாளங்களில் உள்ள கழிவுகளை நீக்கி இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கும். 

வரண்ட நிலங்களில் ஆடு மாடு மேய்க்கும் போது நாவரட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குறைக்கவும் இந்த சப்பாத்தி கள்ளி பழம் உதவி புரியும்.

பழங்குடியினர் மத்தியில் இந்த சப்பாத்தி கள்ளி சிறந்த உணவாக மருந்தாக பயன்படுத்துவதை நான் உணர்ந்து இருக்கிறேன். நாங்கள் தொலை தூரமாக காடுகளில் திரியும் போது ஓடைகளில் தேங்கி இருக்கும் அசுத்தமான நீரை நன்னீராக மாற்ற சப்பாத்தி கள்ளியின் மடலில் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து கலங்கிய அசுத்தமான நீருடன் கலந்து வைக்க சிறிது நேரத்தில் சுத்தமான நீர் மட்டும் கிடைக்கும் கழிவுகள் வீழ்படிவாக கீழே இருக்கும் இந்த தண்ணீரை குடிக்கும் போது உடலானது பெரும் ஆற்றல் பெருகிறது புத்துணர்வுடனே இருக்கும் எவ்வளவு தூரம் நடந்தாலும் சோர்வோ பசியோ எடுக்காது இது எனது அனுபவத்தில் உணர்ந்தது. இருளர் இனமக்கள் கக்குவான் நோய்க்கு இதன் பழத்தை நெருப்பில் வாட்டி குழந்தைகளுக்கு கொடுக்க பூரண குணமாவதையும் நான் அறிவேன்.

நாகதாளியின் பயன்பாடுகள்.

1.சப்பாத்தி கள்ளியின் பசையை மேல் பூச்சாக  பயன்படுத்தி வீக்கத்தை போக்கலாம்.

2.உடலில் ஏற்படும் எந்தவொரு கட்டியாக இருந்தாலும் இதன் மடலின் உள்ளே இருக்கும் சோற்றுடன் குவாட்ஸ் எனப்படும் வெள்ளைகல்லை அறைத்து  இரண்டையும் சமமாக சேர்த்து அறைத்து  கட்டிகளின் மீது பற்று போட கறைந்து விடும் அதுவும் அக்குள் கழுத்து பகுதிகளில் வரும் கட்டிகளுக்கு சிறந்த மருந்து இதுவே. ஓரிரு நாளில் கட்டி கரைந்து விடும்.

3.நாகதாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை,மலக்குடல், சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் கக்குதலும் தீரும்.

4. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு பித்தப்பை வீங்கி விடும் இதனை சுரக்கட்டி(Enlargement of Spleen) என்பார்கள் இதனை தீர்க்க நாகதாளி பழத்தை கொடுக்க உடனடியாக குணம் கிடைக்கும்

5.ஞாபகமறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம் இந்த பழத்தை தொடர்ந்த எடுத்துகொள்ள கண் பார்வை கூர்மையாகிறது என்றும் ஏடுகளில் உள்ளது.

6.சப்பாத்தி கள்ளி பழத்தில் இருக்கும் உயர்தரமான நார்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கறைத்து வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது அதனால் தான் பிரேசில் போன்ற நாடுகளில் இதிலிருந்து எடுக்கப்படும் Extract உடல் குறைப்புக்கு மருந்தாக பல நூறு கோடி ரூபாய்க்கான வியாபாரம் நடைபெறுகிறது என்பதையும் உணருவோம் . சித்த மருத்துவத்தில் இதனை தீ நீராக செய்து பயன்படுத்தி வந்தால் உடல் குறையும் சர்க்கரை நோயும் கட்டுபடுகிறது என்று குறிப்புகள் உள்ளது.கல்லீரல் பாதிப்படைந்து உருவாகும் மகோதிரம் எனப்படும் பெருவயிறு நோய்க்கு இது சிறந்த மருந்தாகும்.

உலகின் மிகச்சிறந்த இயற்கை உரம் சப்பாத்தி கள்ளி என்றால் மிகையாகாது....

தென்னை மரத்தை சுற்றி இரண்ட்டிக்கு குழி எடுத்து அதில் சப்பாத்தி கள்ளியின் மடல்களை வெட்டி பரப்பி இதன்மீது கொஞ்சம் கல்உப்பையும் அடுப்பு கரியையும் போட்டு மண் மூடி விட ஆறு மாதத்தில் தென்னை மரம் கருகருவென்று இருப்பது மட்டுமின்றி தென்னம் பிஞ்சு உதிர்வது அப்படியே மட்டுபடும் ஒரு வருடத்தில் சுமார் 300 தேங்காய் வரை காய்க்கும் தென்னையை தாக்கும் பலவிதமான நோய்கள் நெருங்கவே நெருங்காது இதுவும் அனுபவ ரீதியான உண்மை.

நிலங்களில் இதனை பயன்படுத்துவதில் உள்ள சிரமம் இதில் உள்ள கூர்மையான முட்கள் தான் அதனை போக்க எளிய வழிமுறை. வெட்டி போடபட்ட மடல்களின் மீது  எள்ளுபுண்ணாக்கை தூவ ஒரு வாரத்தில் முட்கள் இருந்த இடம் தெரியாமல் அழுகிவிடும் பிறகு அத்தனை வயல்களிலும் பயன்படுத்தி மண்ணை வளமாக்கி கொள்ளலாம்.

ஆடு மாடு மேய்க்கும் போது கால்களில் இந்த முள் ஆழமான சென்று விடும் அப்பொழுது எள்ளை அரைத்து முள் உள்ள இடத்தில் கட்ட ஒரிரு நாளில் தூள் தூளாக வந்து விடும். 

தென்அமெரிக்க பழங்குடியினர் இதனை உணவு பொருளாகவே பயன்படுத்தி வருகின்றனர் Tunas என்ற பெயரில் இதன் பழங்கள் விற்க்கபடுகிறதாம்.எங்கோ படித்தது.

இவ்வளவு சிறப்பான சப்பாத்தி கள்ளி பழத்தை நாமும் பயன்படுத்த முயல்வோம் ஏனெனில் இன்று புற்றுநோய் ஓர் பயமுறுத்தும் வகையில் உருவெடுத்து வருகிறது. இந்த பழத்தில் இருக்கும் Flavonoid,Polyphenol போன்ற வேதி பொருட்களால் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் பண்பு உள்ளது என மேலை நாட்டு ஆய்வுகள் கூறுகிறது இந்த பழம் Antioxidant ஆக செயல்பட்டு உடல் செல்களுக்கு அதிகபடியான ஆக்சிஜனை கொண்டு செல்கிறது ....

நமக்கு தெரியும் இரத்த ஒட்டம் தடைபெற்ற இடங்களில் தான் புற்றுநோய் செல்கள் உருவாகிறது உடலில் உள்ள செல்களுக்கு அதிகபடியான ஆச்சிஜன் தேவை புற்றுசெல்களுக்கு சிறிதளவு ஆச்சிஜனே போதும். அதனால் தான் இவைகள் பல்கி பெருகி வருகிறது இந்த பழத்தில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் செல்களுக்கு ஆக்சிஜனை  அதிகரித்து புற்றுசெல்களை அழிக்க உதவி புரிகிறது....

எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் சப்பாத்தி கள்ளி பழம். கொஞ்சம் மெனகெட்டாலே போதும். இது நமக்கான உணவு மருத்துவம். செலவில்லாத சிறந்த உணவு மருந்து.

-Selva

Wednesday, August 15, 2018

வீட்டில் இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் நோய்களை விரட்ட...!

சுக்குடன் சிறிது பால் சேர்த்து மைய அரைத்து நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், விலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இந்த ஐந்து பொருட்களையும் கஷாயம் செய்து பருகிவர கடுமையான சளி மூன்றே நாட்களில் குணமாகும். சுக்கு, வேப்பம்படடைட போட்டு கஷாயம் செய்து குடித்து வர ஆரம்பநிலை வாதம் குணமாகும். சுக்கு தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய் துர்நாற்றம் விலகும். சுக்குடன் சிறிது நீர் தெளித்து விழுதாக அரைத்து நெற்றியில் தடவினால் தலைவலி வந்த வழியே போய்விடும். சுக்குடன் சிறிது வெந்தயம் சேர்த்து பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் அலர்ஜி தொல்லை அகலும். சுக்குடன் சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும். சுக்குடன் சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்து சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். சுக்கு, மிளகு, சீரகம் மூன்றையும் எண்ணெய்யில் இட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

சுக்கு ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடிப்பதால்...?

அடிக்கடி நோயினால் பாதிப்புக்குள்ளானவர்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த அடிக்கடி கற்றாழை ஜூஸை குடித்தால் பலனை பெறலாம். உயர் ரத்த அழுத்தம் குறையும். சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்கும். கற்றாழை ஜூஸை குடித்து வந்தால் உங்கள் வெளிப்புற அழகிற்கு பலன் கிடைப்பதை விட இரு மடங்கு அழகை தரும். உள்ளிருந்து ஊட்டம் அளித்து உங்களை இளமையாக்கும். ஹார்மோன் சமநிலையில் இருந்தால் மொத்த உடல் இயக்கத்திலும் பாதிப்பு உண்டாகும். இதற்கு இந்த ஜூஸ் நல்ல மருந்து. ஹார்மோன் சுரப்பை சீர்படுத்துகிறது. கற்றாழை ஜூஸை குடித்து வந்தால் ஜீரண மண்டலத்தில் உண்டாகும் பாதிப்புகள் குணமாகி ஜீரண உறுப்புகள் இளமையாகவே இருக்கும். கற்றாழை ஜூஸில் உள்ள சேர்மங்கள், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றிவிடும். கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும். தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால், உடலினுள் உள்ள பாதிக்கப்பட்ட திசுக்கள் புதுப்பிக்கப்படும். இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம். உடலில் கஸ்தூரி மணம் வீசும்.

சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வரஉடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால்தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள்மறைந்து போகும்.

எலும்புகளுக்கு வலு சேர்க்கும் பிரண்டை!!

மருத்துவ உணவாக பயன்படுகிறது. பிரண்டையை துவையல், குழம்பு, தோசை என்று பலவிதத்தில் பயன்படுத்தலாம். கலோரி குறைந்த எளிதில் ஜீரணிக்கக் கூடிய, நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம் நிறைந்துள்ளது. உடைந்த எலும்புகளுக்கு பிரண்டை கொண்டு தயாரித்த எண்ணெய், சாறு பயன்படுகிறது. வாரம் 2 முறை பிரண்டையை பயன்படுத்தினால் 40 வயதுக்கு மேல் வரும் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் மென்மையாகிற நோயை முழுவதும் குணப்படுத்தி விடலாம் என்கிறது சித்த மருத்துவம். எடையை குறைப்பதில் பிரண்டை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பசியைக் கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை பராமரித்து அதிக கொழுப்பைக் கரைக்கிறது. இதனால் பருமன் மற்றும் ஊளைச்சதை குறைகிறது. நீரிழிவுக்கும் மருந்தாகிறது பிரண்டை. இன்சுலின் சுரப்பைத் தூண்டுவதால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இதய நோய் உள்ளவர்களுக்கு பிரண்டை நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைப்பதால் மாரடைப்பு அபாயம் தவிர்க்கப்படுகிறது. அஜீரணத்தை குணப்படுத்தி பைல்ஸ் எனும் குடல் நோயையும் குணப்படுத்துகிறது.

பெண்களுக்குரிய மாதவிடாய் பிரச்னை - குறிப்பாக அதிக ரத்தம் போவதையும் குணப்படுத்துகிறது. பிரண்டை ஜூஸ் மூக்கில் ரத்தம் வடிவதைக் கட்டுப்படுத்துகிறது. சித்த மருத்துவத்திலும் நாடி வைத்தியத்திலும் பிரண்டை மிக முக்கியமான மருந்தாக பயன்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற தண்ணீரை வெளியேற்றக்கூடியது.

புற்றுநோய்க்குக் கொடுக்கப்படுகிற மருந்துகளிலும் பிரண்டையின் பங்கு இருக்கிறது. குடல் புழுக்களைக் கொல்கிறது. பசியைத் தூண்டுகிறது. நரம்புத்தளர்ச்சியைப் போக்குகிறது.

குழந்தையின்மையை குணப்படுத்தவும் சித்த மருத்துவத்தில் பிரண்டை பயன்படுத்தப்படுகிறது. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும், எலும்பு பலப்படும். மேலும் ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தவும், வாயு பிடிப்பை போக்கவும் பிரண்டை உதவுகிறது. ஒவ்வாமைக்கும் இது சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

பாலியல் உணர்வை அதிகரிக்கும் செய்யும் வெந்தயம்

தாம்பத்திய வாழ்க்கைக்கு பலம் கூட்டவும், ஏகப்பட்ட மருந்துகள் பல மெடிக்கல் ஷாப்பில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அவைகள் எல்லாம் கெமிக்கல் பொருட்களால் தயாரிக்கப்பட்டது மட்டுமின்றி பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. ஆனால், இயற்கையான முறையில் நாம் முன்பு தினமும் உணவில் பயன்படுத்தி வந்த ஒரு பொருள் பக்க விளைவுகள் இன்றி செக்ஸ் உணர்வை அதிகரிக்கின்றது என்றால் நம்ம முடிகின்றதா ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். அந்தப் பொருளின் பெயர் வெந்தயம். இந்திய உணவு வகைகளில் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்று வெந்தயம். அதனால் தான், நமது முன்னோர்கள், நமது உணவுப் பொருட்களில் வெந்தயத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு, செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும். வெந்தயம், ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை தூண்ட உதவுகிறது. வெந்தயத்தில் உள்ள சபோனின் எனப்படும் பொருள், ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரனை தூண்டும் சக்தி கொண்டது. வெந்தயத்திற்கு, செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக வெளிநாட்டு ஆய்வு முடிவுகளும் உறுதிப்படுத்துகிறது.

இந்த ஆய்வுக்காக 25 வயது முதல் 55 வயது வரையிலான 60 ஆரோக்கியமான ஆண்களை ஆய்வு செய்தபோது, அவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை என மொத்தம் 6 வாரங்களுக்கு வெந்தயம் மற்றும் வெந்தயச் சாறு கொடுத்து, கண்காணிக்கப்பட்ட போது, ஆறு வார காலத்திற்குப் பின்பு, அவர்களது செக்ஸ் உணர்வுகள் பல மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. வெந்தயம் சாப்பிடாத சிலரை அதே போல் ஆய்வுக்குட்படுத்திய போது அவர்களுக்கு செக்ஸ் உணர்வுகள் குறைவாகவே இருந்துள்ளது. செக்ஸ் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது வெந்தயம். எனவே, இனி பணம், காசு செலவு பண்ணி கண்ட கண்ட மருந்துக்களை வாங்கி உயயோகப்படுத்தாமல், நமது உணவில் அடிக்கடி வெந்தயத்தை சேர்த்துக் கொண்டாலே நல்ல பலன் கிடைக்கும்.

வாழை இலையில் சாப்பிடுவது புற்றுநோயைத் தடுக்குமா...?

வாழை இலையில் சாப்பிடுவது சுத்தமானது, பயன்படுத்த எளிதானது மற்றும் எளிதில் மக்கும் தன்மைக்கொண்டதால் சுற்று சூழலுக்கும் பாதுகாப்பானது போன்ற பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், வாழை இலையில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். சமீப காலமாக க்ரீன் டீ அருந்துவது ஃபேஷனாக உள்ளது, க்ரீன் டீயில் இருக்கும் Epigallocatechin gallate (EGCG) போன்ற பாலிபினால்ஸ்கள் வாழை இலையில் அதிக அளவில் உள்ளன. இது பல நோய்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்வதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இன்று அதிகம் பரவி வரும் புற்றுநோய் உட்பட பார்கின்சன் நோய் (Parkinson's disease) எனப்படும் நடுக்குவாத நோய் வராமலும் நம்மை காக்கிறது. இன்று பலரின் பயமாக இருக்கும் நோய்க்கு அன்றே தீர்வு கண்டுள்ளனர் நம் முன்னோர்கள். இந்த இலையை நேரடியாக உண்பது நம் ஜீரண சக்திக்கு அப்பாற்ப்பட்டது என்பதால் இதன் நன்மைகள் நம் உடலுக்கு சென்றடையும் விதமாக அதில் உணவருந்துவதைப் பழக்கமாக கொண்டிருந்துள்ளனர். நன்மைகள்: 1. பெரும்பாலும் ஆண்களுக்கு வரும் புரோசுட்டேட் புற்றுநோய் எனப்படும் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோயைத் தடுக்கும் பாலிபினால்ஸ் (Polyphenols) வாழை இலையில் அதிகளவில் உள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

2. அபரிவிதமான ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidant) இருப்பதால் பல தீவிர நோய்களைத் தடுப்பதற்கும், நம் சருமப் பாதுகாப்பிற்கும் மிகவும் சிறந்தது. இதிலிருக்கும் ரூட்டின் (Rutin), குளுக்கோஸ் ஹோமியோஸ்டினை சீர்படுத்தி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது, இரத்த உறைவு, மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதுடன் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தப்படுத்துகிறது. ரூட்டின் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.

3. வாழை இலை ஒரு இயற்கை கிருமி நாசினி, இதில் உணவருந்தும் போது உணவில் உள்ள நச்சு தன்மையை போக்குவதுடன் நம் உடலில் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. 4. நாம் நாகரீகம் என்ற பெயரில் நம் பழமையின் அரிய நன்மைகளை மறந்து இயற்கையை பாழ்படுத்தாமல், மூடநம்பிக்கையை அகற்றி அதில் பொதிந்திருக்கும் ரகசியங்களைக் கண்டு கடைப்பிடிக்கலாமே!.

நல்ல விஷயங்களை ஏத்துகிறது நல்லதுதானே. இயற்கையான முறையில் வளர்ந்த வாழை இலைக்குதான் இத்தனை மகிமையும், பேப்பர் வாழைக்கு இல்ல!!

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் வல்லாரை..!

வல்லாரை உடல் சோர்வினை அகற்றி மூளையின் நினைவாற்றலை அதிகரிக்க செய்யக்கூடியதும், தொழுநோய்களை குணப்படுத்தும் வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.'பிரம்மி' என்றழைக்கப்படும் வல்லாரை கீரையில் சிறந்த மருத்துவ குணங்கள் உள்ளன. வல்லாரை சாப்பிடுவதால் உடல் தேற்றி, உரமாக்கி, சிறுநீர் பெருக்கி, வெப்பமுண்டாக்கி, ருது உண்டாக்கி. வாதம், வாய்வு, அண்டவீக்கம், யானைக்கால், குட்டம், நெரிகட்டி, கண்டமாலை, மேகப்புண், பைத்தியம், சூதக் கட்டு, மூளை வளர்ச்சிக்கும், சுறுசுறுப்பிற்கும் ஏற்றது. வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து இதில் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வர வேண்டும்.48 அல்லது 96 நாள் சாப்பிட்டு வர எல்லா நோய்களும் குணமாகும். உடல் நோய் எதிர்ப்பாற்றல் பெறும். ஒரு வருடம் சாப்பிட்டால் நரை, திரை மாறும். வல்லாரை மற்றும் தூதுவிளையை சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5 மி.லி.

சாப்பிடவும். நோய்க் கேற்றவாறு காலம் நீடித்து சாப்பிட சயரோகம், இருமல் சளி குணமாகும். பெண்களுக்கு உதிரத்தடை ஏற்படும். மாதவிலக்கு தள்ளிப்போகும்.

இதனால் இடுப்பு, அடிவயிறு கடுமையாக வலிக்கும். இதற்கு வல்லாரை மற்றும் உத்தாமணி இலையை சம அளவில் அரைத்து 20-30 கிராம் அளவு காலை, மாலை நான்கு நாள் சாப்பிட வேண்டும். குணமாகும். குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் தேநீர் தயாரிப்பு: தேவையான பொருட்கள்: வல்லாரை இலைச்சாறு - 50 மி.லி., நாட்டு சர்க்கரை, பால்.

ஒரு பாத்திரத்தில் வல்லாரை இலைச்சாறு, நாட்டு சர்க்கரை கலந்து, பச்சை வாசனை நீங்கும் வரை கொதிக்கவிடவும். பின்னர் வடிகட்டி அதனுடன் பால் சேர்த்து பருகுவதால், மறதி நிலை மாறி அற்புதமான நினைவாற்றலை தருகிறது.

எல்லா வியாதிகளுக்கும் நிவாரணம் தரும் கருஞ்சீரகம்.....!

கருஞ்சீரகத்தில் "தைமோகியோனின்" என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பு குறையும். ஒவ்வாமையும் நீங்கும். * ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி அதில் இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும். * கருஞ்சீரகத்தில் நறுமண எண்ணெய் உள்ளது. அது வயிற்று உப்புசம் மற்றும் வலியை நீக்கி, கழிவுகளை எளிதாக வெளியேற்றும்தன்மை கொண்டது. இரைப்பையில் பக்டீரியாவால் உண்டாகும் நோய்த் தொற்று மற்றும் குடலில் உள்ள தேவையற்ற பூச்சிகளை அழிக்கும். * கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் கலந்து, சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை, மாலை இருவேளை சாப்பிடலாம். * தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்பப்படுகிறவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ் சீரக பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட வேண்டும். இது நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும். * தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து.

இதனை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாஸிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம். புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும். குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து, பயன்படுத்துவது நல்லது. * புற்று நோய்க்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்தாக செயல்படுவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகி உள்ளது.

குறிப்பாக கணையப் புற்று நோயை கட்டுப்படுத்துவதில் இது பெரும் பங்கு வகிக்கிறது.

இயற்கை மருத்துவத்தில் ஓமம் எப்படியெல்லாம் பயன்படுகிறது...!

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும். ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும். நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும். அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது.வயிற்றில் செரிமானம் சீராகும். வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும். மார்ச்சளி இருந்தால், ஓம எண்ணெயை மார்பின் மீது தடவுவதை கிராமங்களில் இன்றும் காணலாம். ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும்.

பல்வலி இருந்தால், இந்த எண்ணெயைப் பஞ்சில்தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும். வயிறு "கடமுடா" வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவலாம். சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும்.

நீரில் ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உலர் திராட்சையை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இப்போது உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம். மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு கப் நீரில் 20 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம். கர்ப்ப காலத்தில் இந்த முறையைப் பின்பற்றலாம். இரத்த சோகை உள்ளவர்கள், இதனை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம். கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதை குணமாக்க ஆயுர்வேதம் பரிந்துரைப்பது இந்த வழியைத் தான். அது என்னவெனில் இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் 8-10 உலர் திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வருவது தான். உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 20-25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.

தீமைகளையும் தெரிந்துக்கொள்ளுங்கள்... அன்னாசி பழத்தின் பக்கவிளைவுகள்!

அன்னாசி பழத்தை அளவாக சாப்பிட்டால் பயன்கொடுக்க கூடியதாக இருக்கும். இதில் பல உடல்நல பயன்கள் இருப்பது போல சில உடல் நலத்தை பாதிக்கும் காரணிகளும் அடங்கியுள்ளன. # அன்னாசிப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அடங்கியுள்ளது. எனவே, இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லதல்ல. # அன்னாசி பழத்தில் ப்ரோம்லைன் உள்ளது. இது நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேர்ந்து கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். # பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலோ அது ஆபத்தை ஏற்படுத்தலாம். # அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொண்டால் பற்களில் அதிகம் கரை ஏற்படும். பற்களின் எனாமலின் மீதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். # அன்னாசி பழம் சாப்பிடுவதால் சிலருக்கு லேசான அலர்ஜிகள் ஏற்படலாம். அன்னாசி பழத்தில் அதிக அளவிலான அசிடிட்டி உள்ளது.

பதனீர் பருகுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் என்ன தெரியுமா...!

பதநீர் பனையில் இருந்து கிடைக்கின்ற பானம். பனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரைச் சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரிப்பார்கள். இனிப்புச் சுவையுடன் கூடிய இந்தத் திரவமே பதநீர். உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த ஊக்கம் தரும். சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளையும் குணப்படுத்தும். வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும். பதநீரை, பழைய கஞ்சியுடன் சேர்த்துப் புளிக்க வைத்து ஆறாத புண்கள், கொப்புளங்கள் மீது தடவிவந்தால் குணம் கிடைக்கும். சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால், இதில் உடம்புக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது. எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு. பதநீரை 48 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால், மேக நோய்கள் தணியும். பெண்களைப் படுத்தும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கு இது நல்ல மருந்து. உடலுக்குக் குளிர்ச்சி தரும். மலச்சிக்கலைத் தீர்க்கும்.

கழிவு அகற்றியாகவும் வியர்வை நீக்கியாகவும் செயல்படும். உடல் வீக்கம், வயிறு தொடர்பான பிரச்னைகளையும் கட்டுப்படுத்தும். வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு, மூல சூடு தணியும். மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண், வெப்ப கழிச்சல், சீத கழிச்சல் நீங்கும்.

காசநோயினால் ஏற்படும் சளித்தேக்கத்தை வெளியேற்றும் வல்லாரை..!

வல்லாரையின் இலைச்சாறு தினமும் 5 மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரைவாதம் குணமாகும். ஆமணக்கெண்ணையில் வல்லாரை இலையை வதக்கி மேலே பற்றிடவேண்டும். கட்டிகளும் கரையும். அரைத்துப் பூச புண்களும் ஆறும். வல்லாரை, உத்தாமணி, மிளகு சமமாக எடுத்து அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை செய்து காலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில் கொடுக்க அனைத்து வகையான காய்ச்சலும் தீரும். கீழாநெல்லி, வல்லாரை சம அளவு எடுத்து அரைத்து சுண்டக்காய் அளவு காலை மட்டும் தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும். வல்லாரை இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டிவந்தால் யானைக்கால் வீக்கம், குறையும். வல்லாரை இலைகளுடன் 2 மிளகு, ஒரு பூண்டு பல் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதில் ஒரு நெல்லிக்காயளவு காலை, மாலை இரு வேளைகளும் வெறும் வயிற்றில் உண்டு வர நாள்பட்ட புண்கள், சொறி, சிரங்குகள் முதலியவை குணமாகும். வல்லாரை இலை, தூதுவளை ஆகிய இரண்டையும் சம எடையளவு எடுத்து பொடி செய்துகொள்ளவும். ஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர, காசநோயில் ஏற்படும் சளித்தேக்கம், தொண்டைக்கம்மல் நீங்கும். வல்லாரை இலையுடன், கீழாநெல்லி இலையைச் சம எடையளவு சேர்த்து அரைத்து 5 கிராம் அளவு காலை வேளை மட்டும் தயிரில் கலந்து உண்டு வர நீர் எரிச்சல் தீரும்.

வல்லாரை இலையுடன் சம எடையளவு வேலிப்பருத்தி இலையைச் சேர்த்து அரைத்து கொள்ளவும். இதில் 3 கிராம் அளவு வெந்நீரில் கலந்து 4 நாள்கள் உட்கொண்டு வர தடைப்பட்ட மாதவிடாய் வெளியாவதோடு, மாதவிடாயினால் ஏற்படும் வயிற்றுவலியும் குறையும்.

குடல் புற்று நோயை எதிர்த்திடும் முட்டைகோஸ்

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை நிறைய உள்ளன. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. முட்டைக்கோஸில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் இதை தினமும் ஜூஸ் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் நீக்கப்பட்டு உடலின் எடை குறைய உதவுகிறது. விட்டமின் B-5, விட்டமின் B-6, விட்டமின் B-1 போன்ற அத்தியாவசிய விட்டமின்கள், உடம்பின் உணர்வுகளுக்கும் இதர உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை புரிகின்றது. மேலும் சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள துணை செய்கிறது. பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, மாங்கனீசு போன்ற தாது உப்புகள் முட்டைகோஸில் இருப்பதால், இவை இதய துடிப்பு, உடற்செல்கள் மற்றும் ரத்த அழுத்தத்தை சீரமைக்கிறது. மேலும் சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது. விட்டமின்-K நிறைய அளவில் இருப்பதால் அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.

முட்டைகோஸில் தயோசயனேட், கார்பினால், லூடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற இரசாயன மூலக்கூறுகள் இருப்பதால், இவை மார்பகம், தொண்டை, குடற்புற்று நோய்களுக்கு எதிராக செயல்படும் தன்மை உடையது. முட்டைகோஸில் உள்ள விட்டமின் சி உடம்பிற்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மேலும் தீங்கு விளைவிக்கும் 'பிரீ-ரேடிக்களை' சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

செம்பருத்தி பூவின் அற்புத மருத்துவ பயன்கள்...!

செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும். மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் குருதி பெருக்கிற்கு பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும். செம்பருத்தி பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும். நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி நஞ்சுகளை வெளியேற்றும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் இது மருந்தாகின்றது. செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக்.செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும். உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.

செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும். செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும். 10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்து வர சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

செம்பருத்தி பூ, உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாகும். செம்பருத்தி பூவின் இதழ்களை 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து, காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.

செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.

சித்த வைத்தியத்தில் பல நோய்களுக்கு தீர்வு தரும் தூதுவளை...!

தூதுவளை ஓர் வகைக் கொடியாகும். தூதுவளையின் மறுபெயர் "கூதளம்" என்பதாகும். சிறு முட்கள் காணப்படும். இதன் வேரும் இலையும் கைப்பு, கார்ப்பு சுவையுடையது. தூதுவளையை சமைத்துச் சாப்பிட கபத்தால் உண்டாகும் காதுமந்தம், காதெழுச்சி, காசம், நமைச்சல், அக்னி மாந்தம், தேக உட்குத்தல், விந்து நட்டம் ஆகியவை நீங்கும். தூதுவளைப் பூவை நெய்யில வதக்கி தயிருடன் சாப்பிட விந்து கட்டும், அறிவு விருத்தியாகும். தூதுவளை இலையைத் துவையல் செய்து சாப்பிட மாந்தம், தாது நஷ்டம், இளைப்பு இவைகள் போகும். தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது. புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம். சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

சக்கரை நோய் வராமல் தடுக்க தினமும் காலையில் சீதாப்பழ இலை டீ...!

சீத்தாப்பழத்தில் விட்டமின் சி, கால்சியம் மற்றும் நீர்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது. சீதாப்பழத்தில் குளுக்கோஸ், சுக்ரோஸ் சம அளவு காணப்படுவதால்தான் ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இதனாலேயே இது பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டதாக உள்ளது. குழந்தைகளின் கவனிக்கும் திறன் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்க சீத்தாப்பழத்தை தினமும் உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகி நினைவாற்றல் அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் சீதா மரத்தின் இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் அருந்தி வந்தால் சீக்கிரமாக குணமடைவர். பெண்களுக்கு ஏற்படும் கருச்சிதைவை கட்டுப்படுத்த சீதாப்பழ மரத்தின் வேர் பெரிதும் உதவுகின்றன. சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழவிதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். சீத்தாப்பழ விதையால் செய்யப்பட்ட பொடி நம் உடலின் மேனியை பளபளப்பாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

விதையின் பொடியில் தயாரிக்கப்பட்ட டீயை அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்பட்டு தினமும் புத்துணச்சியுடன் இருக்கலாம். சீத்தாபழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் இதைச் தினமும் சாப்பிடுவது இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதினா...!

மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வாய்யில் ஏற்படும் நாற்றம் அகலும், பசியை தூண்டும் மற்றும் மலச்சிக்கலை நீக்கும். பெண்களின் மாதவிலக்குப் காலங்களில் ஏற்படும் முக்கிய பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தமாக்கி அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு அடிக்கடி தோன்றும் வாந்தி ஏற்படுவதை தடுக்கவும் இதனை பயன்படுத்துவது உண்டு. கடுமையான வயிற்றிப் போக்கின் போது இதை துவையலாக செய்து சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறுகள் அகலும். தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகள் போன்றவற்றிற்கு புதினாவை நீர் விடாமல் அரைத்து பற்றுப் போட்டால் அவர்களின் தீராத வேதனை குறையும். புதினா சாரை முகத்தில் தடவி வர முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் நல்ல பலன் கிடைக்கும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வரலாம். இந்த முறையில் புதினா சாறு தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புதினா இலைகள் - 1 கைப்பிடி, பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புதினாவை கழுவிச் சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடித்துக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு, சீரகப்பொடி, வெல்லத்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.

உணவு சாப்பிடும்போது பழங்களையும் சாப்பிடுவது நல்லதா..? தீமையா..?

தினசரி ஏதாவது ஒரு வகையில் பழங்களை ட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். சிலர் உணவு சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிடக் கூடாது எனவும் சிலர் சாப்பிடலாம் எனவும் எதிர்மறை கருத்துக்கள் கூறுகின்றனர். எது உண்மை என நியூட்ரீஷனிஸ்ட் ரூபாலி தத்தா விளக்குகின்றார். உணவு சாப்பிடும்போது ஒவ்வொரு உணவிற்கும் தகுந்தாற்போல் நொதி சுரக்கும். உணவிற்கும் பழத்திற்கும் சுரக்கும் நொதிகள் வேறு. உங்களுகு ஜீரணக் கோளாறுகள் இல்லையென்றால் இப்படி உணவும், பழங்களும் சேர்ந்து சாப்பிடலாம் தவறில்லை. ஆனால் ஜீரண மற்றும் கல்லீரல் பிரச்சனைகள் இருப்பவர்கள் அவ்வாறு சேர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் அமிலத்தன்மை அதிகரிப்பு, நெஞ்செரிச்சல் போன்றவை உண்டாகும். ஜீரண பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆகவே அஜீரணக் கோளாறுகள் இருப்பவர்கள் மட்டும் உணவையும், பழங்களையும் சேர்த்து சாப்பிட வேண்டாம். மற்றவர்கள் தாராளமாக சாப்பிடலாம். ஆனால் எல்லாருக்கும் சொல்ல வேண்டிய அறிவுரை என்னவென்றால், பழங்களை எப்போதும் காலை அல்லது மாலை இடைவேளைகளில் தனியாக சாப்பிடுவதால் மெட்டபாலிசம் அதிகரிக்கும், அவற்றின் முழுச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும்.

நீர்ச்சத்தும் தக்க வைக்கப்படும். உணவுடன் சேர்த்து சாப்பிடுவதை விட, தனித்து சாப்பிடும்போது, அவற்றின் சத்துக்கள் இருமடங்கு அதிகரிக்கும். சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும்போது உணவானது பழத்தினால் கிடைக்கும் பலன்களை தடுத்து விடுகிறது. சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

காலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிபிளவர் சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. காலிபிளவர் மூளையை போன்ற தோற்றம் உடையது. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. காலிபிளவரில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்கு உன்னதமான மருந்தாகிறது. புற்று நோய் உருவாவதை தடுக்குகிறது. நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் இல்லாது செய்கிறது. காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. மூட்டு வலியை குறைப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்புசக்தி அதிகமாக உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது. இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் பல்வேறு நன்மைகள் விளையும். காலிபிளவரை பயன்படுத்தி கீழ்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலிக்கான மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் காலிபிளவர் பசை, சிறிது பூண்டு, மிளகு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து குடித்தால் மூட்டுவலி, வாத ஜுரம், வீக்கம்
சரியாகும். உடல் வலியும் குறையும். காலிபிளவர் இலைகளை பயன்படுத்தி அடிப்பட்ட வீக்கம், மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். விளக்கெண்ணெய்யுடன் காலிபிளவர் இலை பசையை சேர்த்து நன்றாக வதக்கி பத்தாக போட்டு துணிகட்டி வைத்தால் வலி, வீக்கம் சரியாகும்.

காலிபிளவரை பயன்படுத்தி சிறுநீரகம், இதயத்தை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் காலிபிளவர் பூ பசை, அரை ஸ்பூன் சீரகம், சிறிது மிளகுப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடிக்கவும். இது, இதயத்துக்கு பலம் கொடுக்கும் ஊட்டசத்தாகிறது.

எலும்பு பலவீனம் அடையாமல் செய்கிறது. அடிபட்ட இடத்தில் ரத்தம் சேர்ந்து வீக்கம், ரத்தகசிவு இருந்தால் அவைகள் சரியாகும். சிறுநீர் பெருக்கியாக விளங்குவதுடன் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது.

உன்னதமான இதய ஊட்டச்சத்தாக விளங்குகிறது. காலிபிளவரை பயன்படுத்தி புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் காலிபிளவர் பசை, கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி 50 முதல் 100 மில்லி அளவுக்கு தினமும் புற்றுநோயாளிகள் எடுத்துக்கொள்ளும்போது, புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.

அற்புத மருத்துவ பலன்களை அள்ளித்தரும் ஆவாரம் பூ

ஆவாரை முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்களையும், ஆண்குறி எரிச்சலையும் போக்கும். இலை, பூ, பட்டை உடலைப் பலமாக்கும். துவர்ப்புத் தன்மையைக் கூட்டும். பூ, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். உடம்பிற்கு பொற்சாயலைத் தரும். வேர், இளைத்த உடலைத் தேற்றும். விதை காமம் பெருக்கும், குளிச்சியுண்டாக்கும். ஆவாரம் இலையை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும். இதுபோல் ஒருநாள் விட்டு ஒருநாள் கட்டிவர சர்க்கரை நோயால் ஏற்படும் குழிப்புண்கள் மாயாமாக மறைந்துவிடும். வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சல் தீர ஆவாரையின் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்து கொண்டு, ½ கிராம் அளவு, 2 கிராம் வெண்ணெயில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும் அல்லது பூவைக் குடிநீராக்கியும் சாப்பிட்டு வரலாம் அல்லது பூ இதழ்களைச் சேகரித்து, கூட்டு செய்து, தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து, ஒரு லிட்டர் நீரில் இட்டு, 200 மி.லி. ஆக சுண்டக் காய்ச்சி, 50 மி.லி.

அளவில் காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும். தோல் அரிப்பு மற்றும் நமைச்சல் குணமாக பசுமையான அல்லது உலர்ந்த பூக்களுடன், சமஅளவு பச்சைப்பயறு சேர்த்து அரைத்து, வெந்நீர் கலந்து பசையாக்கி, உடம்பில் தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். திருமணமா‌கி பல ஆ‌ண்டுக‌ள் ஆ‌கியு‌ம் குழ‌ந்தை இ‌ல்லாத பெ‌ண்க‌ளு‌க்கு ஆவாரை பய‌ன்படு‌கிறது. அதாவது, கருப்பட்டியுடன் ஆவாரை‌ப் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம்.

‌விரை‌வி‌ல் க‌ரபப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும். ஆவாரம்பட்டை, அத்திப்பட்டை, நாவல்படை இவை மூன்றையும் சம அளவு பொடி செய்து தேனில் 5-10 நாட்கள் சாப்பிட வெள்ளை நோய், நீரிழிவு தீரும்.

வெற்றிலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்...!

மூலிகை மருத்துவத்தில் வெற்றிலை மற்றும் மிளகு நம் உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு கொழுந்து வெற்றிலை ஒன்றை எடுத்து அதனுடன் 5 மிளகு உருண்டைகளை சேர்த்து மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால், இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குணமாகுவதோடு, மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்க உதவுகிறது. வெற்றிலைகளில் இரைப்பைக் குடல் வலி நீக்கி குணங்கள் அடங்கியுள்ளது. அதே போல் சரியான செரிமானத்திற்கும் உதவிடும். வெற்றிலையை மெல்லுவதால் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, வயிற்றில் சளி உடைய பொருளை அதிகரிக்கும். இதனால் அசிடிட்டி ஏற்படாமல் தடுக்கப்படும்.

இதனால் காஸ்ட்ரிக் அமிலத்தின் தீய தாக்கங்களில் இருந்து வயிற்றின் உட்பூச்சு பாதுகாக்கப்படும் என ஒரு ஆய்வு கண்டுபிடித்துள்ளது. வெற்றிலையை மெல்ல ஆரம்பித்த உடனேயே வாயில் எச்சில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நீங்கள் உண்ட உணவை செரிக்க சொல்லி வயிற்றுக்கு சிக்னல் அனுப்பும் உங்கள் வாய். இதனால் செரிமானம் சிறப்பாக செயல்பட தொடங்கும்.

வயிற்றில் இருந்து நச்சுக்களை நீக்கவும் இது உதவுகிறது. மஞ்சள் நிறத்தில் அல்லது அழுகிய நிலையில் உள்ள வெற்றிலையை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

உடல்நலம் காக்கும் நல்லெண்ணெய்யின் பயன்கள்...!




எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் இதுதான். கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும். நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது. நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். காலையில் எழுந்து பல் தேய்த்த பின்னர் 25 மி எண்ணெயை வாயில் ஊற்றி 10 நிமிடம் அப்படியே வாய்க்குள்ளேயே வைத்திருந்து பற்களுக்கிடையே நன்றாக படும்படி கொப்பளிக்க நுரைத்து வெண்மை நிறமாக மாறி இருக்கும் அப்போது அதை வெளியே கொப்பளித்து விடவேண்டும்.

இப்படி செய்வதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், அரிப்பு போன்றவை நீங்கிவிடும். உள் உறுப்புகள் பலம் அடையும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். பல் வலி, ஈறு வீக்கம், தலை வலி சரி செய்யப்படும். நல்லெண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகள் வரவிடாது.

உடலில் வலி இடத்தில் நல்லெண்ணெயை தேய்த்து மசாஜ் செய்து வந்தால் வலி நீங்கும். சிலருக்கு அதிக உஷ்ணத்தால் அடி வயிறு வலி, சிறுநீர் பிரிவதில் சிரமம் ஏற்படும். அவர்கள் அடி வயிற்றுப்பகுதியில் எண்ணெயை தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.

உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்கும் அருகம்புல் சாறு...!







அருகம்புல் சாற்றில் 65 சதவீதம் பச்சையம் உள்ளதால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களையும், ஹீமோகுளோபினையும் அதிகரிக்க செய்கிறது. இரத்தத்தில் உள்ள அதிகபடியான அமிலத்தன்மையை நீக்கி காரத்தன்மையை உருவாக்குகிறது. அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு எடுத்டுக்கொள்ளுங்கள். அதனுடன் ஐந்து மிளகு மற்றும் நாட்டு வெள்ளைப்பூண்டு இரண்டு சேர்த்துக்கொள்ளுங்கள். இதை மிக்சியில் போட்டு சிரிது சிறிதாக நீர் விட்டு குறைந்த வேகத்தில் அரைத்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு இதனை நன்கு வடிகட்டி இனிப்பு தேவையான அளவு அல்லது தேன் சேர்த்து சாற்றினை தயாரிக்கலாம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட சாற்றினை, அதிகாலையில் வெறும் வயிற்றில் சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும். பருகிய பின் அரை மணி நேரத்துக்கு எந்த விதமான உணவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. அப்பொழுதுதான் இதனுடைய முழுப்பயனும் நாம் பெற முடியும். அருகம்புல் சாறு உடல் வெப்பத்தை சீராக வைக்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது.

தொற்று நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கிரது. சிறுநீரக பாதை அழற்சியை தடுக்கிறது. இரத்தக்குழாய்கள் தடிமனாகாமலும் சுருங்கி போகாமலும் இருக்க செய்து, இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. இதனால் உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

ஞாபக சக்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த திருநீற்றுப் பச்சிலை...!





பொதுவாக பூக்களுக்கு மணம் உண்டு. சில செடிகளின் இலைகளுக்கும் மணம் உண்டு. அப்படியொரு சிறப்புப் பெற்றது திருநீற்றுப் பச்சிலை. உருத்திரசடை, பச்சை, பச்சிலை, சப்ஜா என்ற பெயர்களில் இவை அழைக்கப்படுகிறது. வாந்தி மற்றும் ரத்த வாந்தி, கப வாந்திக்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகை இது. இந்தப் பச்சிலையின் சாறெடுத்து சுடுநீரில் கலந்து கொடுக்கலாம். கஷாயம் செய்தும் கொடுக்கலாம். முகம் போன்ற பகுதிகளில் விஷத் தன்மை வாய்ந்த பருக்கள் தோன்றுவதைக் கண்டிருப்பீர்கள். இந்த விஷப் பருக்களை தெரிந்தோ, தெரியாமலோ நகத்தால் கிள்ளிவிட்டால் அது புரையோடி சீழ் வைத்து சில சமயங்களில் உயிராபத்தைக் கூட ஏற்படுத்தி விடும். இத்தகைய விஷப் பருக்கள் தோன்றினால் யாரும் கவலைப் படத் தேவையில்லை. திருநீற்றுப் பச்சிலையைக் கசக்கி சாறெடுத்து அந்தச் சாற்றோடு வசம்பு எனப்படும் கடைச் சரக்கை வைத்து நன்கு அரைத்து விஷப் பருக்கள் மீது மூன்று வேலை தடவினால் போதும், பரு காய்ந்து கொட்டிவிடும். நறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்துப் பூசினால் கட்டிகள் கரையும். வெறுமனே இலையை முகர்ந்து பார்த்தால் தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை சரியாவதுடன், மூக்கில் வரும் வியாதிகள் சரியாகும். இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்னைகள் சரியாகும்.

திருநீற்றுப் பச்சிலையின் இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும். தேள் கடிப்பதால் வலி ஏற்படும்போது அதன் கடிவாயில் இந்த இலையை கசக்கி பூசினால் வலி குறையும்.

ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய்...!

பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன. பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்று நோய் வருவதைத் தடுக்க முடியும் என ஒரு ஆய்வு கூறுகிறது. உலகம் முழுவதும் மார்பக புற்றுநோய்க்கு பலியாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் பாகற்காயை தமது உணவில் சேர்த்து கொண்டால் இவ்வியாதியில் இருந்து விடுபடலாம் . பாகற்காய் கசக்கும் என்று தானே அதனை விலக்கி வைக்கிறார்கள் சிலர். அவர்கள் என்ன செய்ய வேண்டும் எனில் தேங்காய் உடைத்ததும் வரும் இளநீரில் சிறிது நேரம் வெட்டிய பாகற்காய் துண்டுகளை ஊற விட வேண்டும். அல்லது உப்பு போட்டு 


ஊறவைக்க வேண்டும். அப்போது அதில் உள்ள கைப்பு சுவை போய்விடும். நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.

பாகற்காய் இரைப்பை பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. பாகற்காயை ஜூஸ் ஆக்கிக் குடிப்பது குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளைக் கொல்ல உதவும். ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் போக்கும். பாகற்காயின் விதைகள் இதய நோய்களிலிருந்து நம்மைக் காக்கும்.

தேவையற்ற கொழுப்புகளை எரித்து, இதய தமனி அடைப்பு ஏற்படுவதில் இருந்து காப்பாற்றும். புற்றுநோய், லூக்கீமியா, ரத்தசோகை போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. பாகற்காயின் சாற்றை தயிரில் கலந்து தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால், முடி பளபளப்பாக மாறும்.

இதன் சாற்றுடன் சீரகத்தை அரைத்து பூசிவர, பொடுகுப் பிரச்னைகள் நீங்கும். பாகற்காயின் சாற்றுடன் வாழைப்பழத்தை அரைத்து தலையில் தேய்த்தால், தலை அரிப்பு நீங்கும். பாகற்காய் சாற்றோடு கொஞ்சம் சர்க்கரை சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் பூசிவர, முடிகொட்டுவது குறையும்.

தொடர்ந்து கிரீன் டீ குடிப்பது நல்லதா....?


ரத்தத்தில் குளுக்கோஸ் கலக்கும் வேகத்தை கிரீன் டீ கட்டுப்படுத்தும். கிரீன் டீயில் தயமின் எனும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகம் உள்ளது. தொடர்ந்து கிரீன் டீ அருந்தும்போது, இதய ரத்தக் குழாய்களில் சேரும் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும். கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது. மூச்சு சம்மந்தமான பிரச்சனைகளும் கிரீன் டீயால் சரியாகின்றன. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுப்பதுடன், இதயம் சம்மந்தமான் நோய்கள் வராமலும் இது பாதுக்காக்கிறது. கிரீன் டீயை வெறும் வயிற்றில் எப்போது அருந்தவே கூடாது. ஏனென்றால், அது வயிற்றுக்கு தேவையில்லாத சங்கடங்களை கொடுக்கும். உணவு சாப்பிட்டவுடன் கிரீன் டீ குடித்தால் அது நாம் சாப்பிட்ட சாப்பாட்டின் ஊட்டசத்துகளை நம் உடலில் சரியாக சேர விடாது மற்றும் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதிலும் பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் எப்போதும் உணவு சாப்பிட்ட 30 நிமிடங்கள் கழித்து கிரீன் டீ குடிக்கலாம். கிரீன் டீயைத் தினமும் இரு வேளைகள் பருகிவருவதால், பல் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பலம் கிடைக்கும். உடல் எடையைக் குறைப்பதில் கிரீன் டீ முக்கியப் பங்காற்றுகிறது.

கிரீன் டீ பருகுவதால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் கரையும். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். பெருங்குடல் பகுதியில் வரும் புற்றுநோயைத் தடுக்கும்.

கிரீன் டீ, சருமப் பராமரிப்புக்குக் காரணமான மெலனின் உற்பத்தியைத் தூண்டும் தன்மை படைத்தது.

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள்

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள். =================================  February 7, 2019 (ப.ப) இன்றைக...

உழவர் சந்தை