Thursday, July 26, 2018

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்




"தமிழர்களின் ஆதிகால உணவு பட்டியலில் வெங்காயமே முதலிடம். காரணம் வெங்காயம் உணவல்ல அது ஒரு மருந்து! "வெங்காயத்தின் நன்மைகள் என்ன???

*சக்தி, "Energy"
நோய் எதிர்ப்பு சக்தி வெங்காயத்தில் அதிகம் உள்ளது, அடிக்கடி சளி தொல்லை இருப்பவர்களுக்கு வெங்காயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்,

*அரிப்பு, 
மற்றும் காயத்திற்கு வெங்காய சாறு ஒரு மருந்து,

*உடல் அசதிக்கு,
பாதத்தில் வைத்த்து இருக கட்டி உறங்கினால், மறுநாள் காலையில் உடல் வலி நீங்கும் மாத்திரையே தேவையில்லை,

*அலர்ஜி, 
கை கால்களில் ஏதோ படர்தாமரை போல இருக்கிறது... வெங்காயத்தை அரைத்து உடலில் தேய்த்து சிறிது நேரத்திற்கு பிறகு குளித்தால் அலர்ஜி நீங்கும்,

*முகத்தில் கருப்பு புள்ளி, 
வெங்காய துண்டை வைத்து அடிக்கடி முகத்தில் லேசாக தடவினால் கரும்புள்ளி நீங்கும்,

*ஏப்பம், வாயு, பிரச்சினை, வெங்காயத்துடன் தேனை கலந்து சாப்பிட்டால் வாயு பிரச்சினை நீங்கும்,

*தொப்பை குறைக்க, 
காலையில் வெறும் வையிற்றில் வெங்காய சாறு, எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, இதனுடன் ஒரு கரண்டி தேன் கலந்து பதமாக கொதிக்க வைத்து தினமும் வெறும் வைற்றில் குடித்தால் அடி வையிற்றின் கொழுப்பு குறைந்துவிடும்,

*பாலியல் உணர்வை தூண்டும். காம உணர்வு பெருகும், ஆணுருப்பை விரைக்க செய்யும், திருமணம் ஆன இளம் தம்பதியினர் வெங்காயம் உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் கட்டிலில் வெகு நேரம் விளையாடலாம்,

*சிறுநீரக கோளாறு நீங்கும், 
நீர் கடுப்பை தவிர்க்கும், சிறுநீர் மஞ்சள் நிறமாக போகிறது என்றால், உணவில் அடிக்கடி வெங்காயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்,

*இரத்த அழுத்தம்,
சின்ன வெங்காயம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் "Blood Presure" குறையும்,

*சொத்தை பல், 
பல் வலி, 
பல் வெண்மைக்கு,
பூச்சிப் பல் நீங்க வெங்காய துண்டை கொண்டு பல் துலக்க வேண்டும், பல் வெண்மைக்கு வெங்காயத்தை பற்கலில் தேய்த்தால் போதும், பல் வலிக்கும் அந்த இடத்தில் வெங்காய துண்டை வாயில் வைத்து உறங்கினால் வலிக்கும் பல் விழுந்துவிடும்,

"இனியும் உணவில் வெங்காயத்தை தவிர்க்க வேண்டாம், 
உணவே மருந்து மருந்தே உணவு"

தென்னை ஊடு பயிராக கோகோ பயிர்டுவது எப்படி?







தென்னை, பாக்கு தோட்டங்களில் கோகோ பயிர் ஊடுபயிராக சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம்.

உகந்த இடம்:

பணப்பயிராக விளங்கும் கோகோ சாகுபடி செய்ய 50 சதம் நிழல் உள்ள பகுதிகளே தேவை.
களிமண், கடலோர மணல் பகுதிகளில் சாகுபடி செய்ய முடியாது.
தட்பவெப்ப நிலை:

கோகோ பயிரானது வறட்சியைத் தாங்காது. எனவே, மண்ணில் அதிக அளவு ஈரத்தைப் பிடித்து வைக்கும் தன்மையுள்ள மண்ணாக இருக்க வேண்டும்.
நடவு: 1.5-க்கு 1.5-க்கு 1.5 என்ற அளவில் குழிகளை எடுத்து நடவு செய்ய வேண்டும்.
தென்னந்தோப்புகளில் நடும்போது இரண்டு தென்னை வரிசைகளில் மையப் பகுதியில் கன்றுகளை 10 அடி இடைவெளியில் குழியெடுத்து நடவு செய்ய வேண்டும்.
பயிர் பாதுகாப்பு:

செந்நிற தண்டு துளைப்பாளர், காய் துளைப்பான் பூச்சிகளில் இருந்து பயிரைக் காக்க கந்தகம், எண்டோசல்பான் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
வேர்ப் புழுக்களைக் கட்டுப்படுத்த 2 கிராம் நனையும் கார்பரேட் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து மரத்தை சுற்றியுள்ள மண் பகுதியில் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.
கருங்காய் நோய்:

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கருங்காய் நோய் அதிகம் காணப்படும். நோய் பாதித்த காய்களின் மீது சாக்லெட் நிற புள்ளிகள் ஏற்படும். பின்னர், காய்கள் முழுவதும் படரும். இந்த நோயைக் கட்டுப்படுத்த மழைக்காலம் தொடங்கும் முன்னரும், பின்னரும் போர்டோ கலவையை தெளிக்க வேண்டும்.
நிழல்:

கோகோ நிழலில் வளரக்கூடிய பயிர். ஆதலால் 50 முதல் 75 சதம் நிழல் விழும் பகுதியில்தான் நன்கு வளரும்.
அறுவடை:

நவம்பரில் பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும். பூ பிஞ்சாகி முதிர்ந்த காயாக வளர 150 முதல் 170 நாள்கள் ஆகும்.
நன்கு முதிர்ந்த கோகோ காய் உரித்த தேங்காய் அளவுக்கு இருக்கும்.
முதிர்ந்த காயில் 30 முதல் 45 விதைகள் இருக்கும். காய் நன்கு முதிரும்போது, பச்சை நிறம் மஞ்சளாக மாறும். 100 காய்களிலிருந்து ஒரு கிலோ ஈர விதைகள் எடுக்கலாம்.
3 கிலோ ஈர விதைப்பருவிலிருந்து ஒரு கிலோ உலர்ந்த பருப்புகள் கிடைக்கும். ஒரு விதையின் எடை சராசரி ஒரு கிராம் இருக்க வேண்டும்.
மானியம்:

கோகோ பயிரின் பரப்பு, உற்பத்தியை அதிகரிக்க தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் ஹெக்டேருக்கு ரூ.12,500 மானியமாக வழங்கப்படுகிறது.
தமிழக அரசுடன் செய்துள்ள ஒப்பந்தப்படி வீரிய ஒட்டு செடிகளை கேட்பரி நிறுவனம் தேர்வு செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
நிகர வருமானம்:

கோகோ செடி நடவு செய்த மூன்றாவது ஆண்டில் ஒரு மரத்திலிருந்து சுமார் அரை கிலோ கோகோ விதையும், நான்கு வயதான மரத்திலிருந்து ஒன்றரை கிலோவும் 5 மற்றும் 6 வயதுடைய மரத்திலிருந்து 2.5 கிலோ கோகோ விதையும் கிடைக்கும்.
ஓர் ஏக்கரில் ஊடுபயிராக சாகுபடி செய்துள்ள 200 கோகோ மரங்கள் மூலம் ஓராண்டில் 400 கிலோ உலர்ந்த பருப்பு கிடைக்கும். செலவு போக ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிகர லாபம் கிடைக்கும்.
எனவே, தென்னை, பாக்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்யலாம்.

தென்னையில் அதிக விளைச்சல் பெறும் வழிமுறைகள்

தென்னையில் அதிக விளைச்சல் பெறும் வழிமுறைகள்



தேங்காயின் விலை முந்தைய காலகட்டத்தை விட அதிகமாக இருக்கிறது. அதிக
விளைச்சல் இருக்கும் நிலையில் குறைந்த விலையில் தேங்காய்கள் கிடைக்கும்
படி செய்யலாம். பணப்பயிர்களில் அமுதசுரபி போல் திகழும் தேங்காய்களை அதிக விளைச்சல் மூலம் பெற்றிட விவசாயிகள் சரியான உரநிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கு இயற்கை உரங்களான தொழுஉரம், வேப்பம் புண்ணாக்கு மற்றும் இலுப்பை புண்ணாக்கு போன்றவற்றுடன் கலந்து ஆண்டுக்கு ஓரிரு முறைகள் இடுவதன் மூலம் அதிகமான விளைச்சலை உறுதி செய்யலாம்.

ரசாயன உரங்களில் பலவகை சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒரு சில சத்துக்களே தென்னையில் வளர்ச்சிக்கு அவசியமாக இருக்கின்றன. இதில்
மணிச்சத்து முக்கியமானது. பலவாறாக இருக்கும் ரசாயன உரங்களில் மணிச்சத்து அடங்கியிருந்தாலும், சூப்பர் பாஸ்பேட் உரத்தில் அடங்கியிருக்கும்
மணிச்சத்தானது நிலத்திற்கு எந்த வித கெடுதலையும் செய்யாமல் தென்னைக்கு
ஊட்டமளிக்கிறது. சூப்பர் பாஸ்பேட்டில் மணிச்சத்துடன் தென்னை
வளர்ச்சிக்கும், நல்ல காய்பிடிப்பிற்கும் அவசியமான கந்தகம், சுண்ணாம்பு,
போரான், குளோரின் மற்றும் சோடியம் சத்துக்களும் வேறு பல நுண்ணூட்ட
சத்துக்களும் அடங்கியுள்ளன.
இந்த சத்துக்களில் உள்ள சத்துக்கள் தென்னையின் வளர்ச்சியில் என்ன
செய்கின்றன என்று பார்க்கலாம்.
மணிச்சத்து 16 சதவீதம்
இந்த சத்தானது, தென்னை நாற்றிலிருந்து முளைத்து வரும் குருத்தின் பருமனை
அதிகரிக்கவும், குருத்திலிருந்து அதிக இலைகள் உற்பத்தியாவதற்கும்
உதவுகிறது. மேலும் தென்னையில் அதிகமான வேர்கள் உருவாகவும், வேர்கள் ஆழமாக நிலத்தில் சென்று பிடிப்பை ஏற்படுத்தவும் உதவுகிறது. இதனால் மரத்தின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.
பாளையில் ஏராளமான பூக்கள் உருவாகவும், அவ்வாறு பூத்த பூக்கள் அனைத்தும்
தரம் மிக்க காய்களாக மாறுவதற்கும் உதவி செய்கிறது.
தேங்காய் குறுகிய காலத்தில் முற்றவும், கொப்பரையின் பருமனை அதிகரிக்கவும்
உதவுகிறது.
கந்தகச்சத்து 11 சதவீதம்
கந்தக சத்தானது தேங்காய் பருப்பு ரப்பர் போன்று ஆகிவிடாமல் கெட்டியாக
உருவாக உதவுகிறது.
கொப்பரையில் எண்ணெயின் அளவு கணிசமாக அதிகரிக்க உதவுகிறது. சூப்பர்
பாஸ்பேட் இடப்படாத தென்னையில் கந்தகச்சத்து குறைபாட்டினால் கொப்பரையில் எண்ணெய்ச்சத்து குறைந்து சர்க்கரை சத்து மட்டுமே அதிகமாக இருக்கும்.
சுண்ணாம்பு சத்து
சுண்ணாம்பு சத்தினால் மரம் வலிமையாக உருவாகும். மேலும் இந்த சத்தானது
மரத்தின் கட்டமைப்பில் உள்ள செல்களின் சுவர்களின் அமைப்பில், வேர்களின்
வளர்ச்சியில், சர்க்கரை மற்றும் தனிமங்களின் கடத்திலில் பெரும் பங்கு
வகிக்கிறது.
மேலும் நொதிப்பொருட்களின் வினையாக்கத்தை தூண்டி தென்னையின் சீரான
வளர்ச்சிக்கு அதிகரிக்கிறது. தென்னை பயிரிடப்படும் மணற்பாங்கான அமில வகை நிலங்களில் சுண்ணாம்பு சத்தானது  தழை, மணிச்சத்து மற்றும் சாம்பல்
சத்துக்களை நல்ல முறையில் கிரகிக்க வழி செய்கிறது.
இது தவிர சூப்பர் பாஸ்பேட்டில் அடங்கியுள்ள தனிமச்சத்துக்களான போரான்,
குளோரின் மற்றும் சோடியம் போன்றவை தென்னை வளர்ச்சிக்கு அதிக
பங்களிக்கின்றன. இந்த சத்துக்களில் போரான் என்ற தனிமச்சத்து, இலைகள்
நன்றாக வெளிவரவும், ஓலைகள் திடமாக இருக்கவும், தேங்காய்கள் பருத்து
பருப்பின் அளவு அதிகரிக்கவும் உதவுகின்றது.
குளோரின் சத்தானது தழை, மணி, சாம்பல் மற்றும் மக்னீசிய சத்துக்களை தென்னை சீரான அளவில் எடுத்துக் கொள்வதற்கு உதவுகிறது.
இதில் உள்ள சோடியம் தென்னையின் தொடக்க கால வளர்ச்சியை தூண்டவும், வளர்ந்த தென்னையில் பெண்பூக்கள் அதிகமாக உற்பத்தியாவதற்கும், அவை மகரந்த சேர்க்கைக்கு பின் தரமான குரும்பைகளாக உருவாவதற்கும் உதவுகின்றது.
தென்னைக்கு உரமிடும் முறை
தென்னையை நட்ட முதலாம் ஆண்டில் யூரியா 500 கிராம், சூப்பர் பாஸ்பேட்
500கிராம், பொட்டாஷ் 825 கிராம், வேப்பம் புண்ணாக்கு 1250 கிராம்,
தொழுஉரம் 10 கிலோ என்ற அளவில் இடவேண்டும். இரண்டாவது ஆண்டில் யூரியா 1300 கிராம், சூப்பர் பாஸ்பேட்800 கிராம், பொட்டாஷ் 1625 கிராம், வேப்பம்
புண்ணாக்கு இரண்டரை கிலோ, தொழுஉரம் 2 கிலோ என்ற அளவிலும், மூன்றாம்
ஆண்டில் யூரியா 1600 கிராம், சூப்பர் பாஸ்பேட் 1200 கிராம், பொட்டாஷ்
இரண்டரை கிலோ, வேப்பம் புண்ணாக்கு 3 கிலோ 750 கிராம், தொழுஉரம்
3கிலோவும், நான்காம் ஆண்டில் யூரியா 2கிலோ, சூப்பர் பாஸ்பேட் 1 கிலோ 600
கிராம், பொட்டாஷ் 3கிலோ 300 கிராம், வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ மற்றும்
தொழுஉரம் 4 கிலோவும் இடவேண்டும்.
நான்கு ஆண்டுகளுக்கு மேற்பட்ட தென்னைக்கு யூரியா 2 கிலோவும், சூப்பர்
பாஸ்பேட் 1 கிலோ 600 கிராமும், பொட்டாஷ் 3 கிலோ 300 கிராம், வேப்பம்
புண்ணாக்கு 5 கிலோ மற்றும் தொழுஉரம் 5 கிலோவும் இட வேண்டும். குறிப்பாக
இந்த உரங்களை ஜுலை, ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பாதியையும், அக்டோபர் மாதத்தில் மறுபாதியையும் இடவேண்டும்.

இந்த அடிப்படையில் தென்னைக்கு உரங்களை இட்டு வந்தால் மரத்தின் விளைச்சல் தொடர்ந்து அதிகரிக்கும். விவசாயிகள் நல்ல லாபத்தை பெறலாம்.

தென்னையில் குரும்பை உதிர்தல் காரணங்கள்

தென்னையில் குரும்பை உதிர்தல் காரணங்கள்



தென்னையில் குரும்பை மற்றும் இளங்காய்கள் உதிர்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம்.

அதிக கார அல்லது அமில நிலை
வடிகால் வசதி இல்லாமை
கடும் வறட்சி
மரபியல் காரணங்கள்
ஊட்டச்சத்து குறைபாடு
மகரந்தச் சேர்க்கை இல்லாமை
உறார்மேன் குறைபாடு
பூச்சிகள்
நோய்கள்
அ) மண்ணின் கார அமிலத்தன்மையை சரிசெய்தல்

மண்ணின் அதிகப்படியான கார அல்லது அமிலத்தன்மை குரும்பை உதிர்வதற்கான காரணமாக இருக்கலாம். மண்ணின் கார அமில நிலை 5.5க்கும் குறைவாக இருப்பது அதிக அமில நிலைக்கான அறிகுறியாகும். இதனை சுண்ணாம்பு சேர்ப்பதன் மூலம் சரிசெய்யலாம். கார அமில நிலை 8.0க்கும் அதிகமாக இருப்பது மண்ணில் அதிகமான காரத்தன்மையைக் குறிக்கும். இதனை ஜிப்சம் சேர்ப்பதன் மூலம் சரிசெய்யலாம்.

ஆ) போதுமான வடிகால் வசதி அமைத்தல்

தென்னை மரங்களில் நீர் வடிகால் வசதி இல்லாவிட்டால், அதன் வேர்கள் காற்றில்லாமல் மூச்சுவிட முடியாத நிலை ஏற்படும். இந்நிலையில் குரும்பைகள் உதிரும். உரிய இடங்களில் வடிகால் வாய்க்கால்களை அமைத்து மழைக்காலத்தில் எஞ்சிய நீலை வெளியேற்றவேண்டும்.

இ) நீர் தேங்கி நிற்கும் இளந்தென்னந்தோப்புகளில் மேலாண்மை

இளந்தென்னங்கன்றுகள் நடப்பட்ட இரு வரிசைகளுக்கிடையே பருவமழை தொடங்கும் பருவத்தில் ஒரு நீண்ட குழி அமைக்கவேண்டும். குழியின் அளவு மூன்று மீட்டர் அகலமும், 30-45 செ.மீ ஆழமும் உள்ளபடி வயலின் முழு நீளத்திற்கு அமைக்கவேண்டும். இதிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை கன்றுகள் நட்பபட்ட வரிசைகளிலே ஒரு மேடான பாத்தி உருவாகும்படி போடவேண்டும்.
இளங்கன்றுகளை சுற்றிலும் 1.2 மீட்டர் அகலமும் 30-45 லிட்டர் உயரமும் கொண்ட மணற்குன்றுகளை அமைக்கவேண்டும்.
ஈ) மரபியல் காரணங்கள்

சில மரங்களில் போதுமான உர, நீர், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செய்தபோதிலும் குரும்பை உதிர்வது தொடர்ந்து கொண்டிருக்கும்.இது விதைத் தேங்காய் எடுக்கப்பட்ட விதை மரத்தின் வழியே வந்த குறைபாட்டின் அறிகுறியாகும். ஒன்று போல நல்ல மகசூலை தரும் மரங்கள் கிடைக்க விதைக்காய்களுக்கு தரமான விதை மரத்தை தெரிவு செய்யவேண்டும் என்ற தேவையை இது உணர்த்தும்.

உ) ஊட்டசத்து குறைபாடு

முற்றிலுமாகவோ அல்லது போதுமான அளவிலோ உரமிடாலிருப்பதால் குரும்பைகள் உதிரும்.

பரிந்துரை செய்யப்பட்ட உரங்களை குறித்த காலத்தில் இடுவது குரும்பைகள் உதிர்வதைக் குறைப்பதற்கு முக்கியமாகக் கருதப்படுகிறது.

ஊ) மகரந்த சேர்க்கை இல்லாமை

மகரந்து சேர்க்கை இல்லாததாலும் குரும்பைகள் மற்றும் தோப்பில் எக்டருக்கு பதினைந்து என்ற கணக்கில் தேனீ கூடுகளை ஏற்படுத்துவதால் கலப்பின சேர்க்கை அதிகரிக்கும்.

மேலும் தேனினால் கிடைக்கப்பெறும் கூடுதல் வருவாயினால் குறிப்பிட்ட பரப்பளவிற்குரிய நிகர லாபமும் அதிகரிக்கும்.

எ) உறார்மேன் பற்றாக்குறை

இனச்சேர்க்கை முடிந்த நிலையில் உள்ள பெண்பூக்கள், அதாவது குரும்பைகள், சில சமயங்களில் உதிரும். பாளை வெடித்த ஒரு மாதத்தில் மலர் கொத்தின் மீது 30 (அ) 20 (ஒரு லிட்டர் நீரில் 30 அல்லது 20) தெளிப்பதன் மூலம் காய்க்கும் சதவீதத்தை அதிகரிக்கலாம்.

ஏ) பூச்சிகள்

நாவாய்ப்பூச்சி தாக்குவதால் குரும்பைகள் உதிரலாம்.

இயற்கை முறையில் துவரை சாகுபடி

இயற்கை முறையில் துவரை சாகுபடி




தமிழகத்தில் பயறு சாகுபடி வகைகளில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைப் பயிறு, துவரை, கொண்டைக்கடலை ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இதில் உளுந்து, பாசிப்பயிறு போன்றவை குறைந்த நாள்களில் விளைச்சல் பெறுவதால், இதன் உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. துவரைப் பயறு விளைச்சலுக்கு 105 முதல் 200 நாள்கள் வரை உள்ளதால், இதன் உற்பத்தித் திறன் அதிகமாகும். மேலும், உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் தொழில்நுட்ப நடவு முறையில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.

தொழில்நுட்பம் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் ச. கண்ணையா கூறியது:

துவரை சாகுபடியில் நடவுமுறையைப் பின்பற்றுவதன் மூலம் போதிய பயிர் எண்ணிக்கையைப் பராமரிப்பதுடன், குறைந்த விதையளவுடன் 1 ஏக்கருக்கு 1 கிலோ விதை போதுமானது. தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்துவதால் இறவையில் 1 ஏக்கருக்கு 500 முதல் 600 கிலோவும், மானாவாரியில் 1 ஏக்கருக்கு 300 முதல் 400 கிலோ வரை கூடுதல் மகசூலும் கிடைக்கும்.

துவரை நடவு செய்வதற்குத் தேவையான நாற்றாங்காலை குழித்தட்டு மற்றும் பாலித்தீன் பைகளில் வளர்த்து நடவு செய்யலாம். பெருங்கரை போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இதுபோன்ற நாற்றாங்கால் அமைக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குழித்தட்டு நாற்றங்கால் முறையில் 200 காஜ் கருப்பு நிற குழித்தட்டுகள் அமைத்து, அக் குழிகளில் மக்கிய தென்னை நார்க் கழிவுகள் மற்றும் மணல் பயன்படுத்தப்படுகிறது. தட்டில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி வேர்கள் அழுகி விடாமல் இருந்திட 3 முதல் 4 துளைகள் போட வேண்டும். 15 நாள் வளர்ந்துள்ள நாற்றுகளை நடவு செய்திடலாம்.

இக் குழித் தட்டுகளில் 90 சதவீதம் பரப்பியுள்ள தென்னைநார் மற்றும் மணலில் குழி ஒன்றில் இரண்டு விதைகளை ஊன்ற வேண்டும். பூஞ்சாள நோய் தாக்குதலிலிருந்து நாற்றுகளைப் பாதுகாத்திட 1 கிலோ விதையுடன் 10 கிராம் சூடோமோனாஸ் கலவையுடன் கலந்து விதைக்க வேண்டும். முளைத்த 10ஆம் நாளில் வீரியமான நாற்றை மட்டும் வைத்துவிட்டு, வலுவிழந்த நாற்றினை நீக்கி, ஒரு குழியில் ஒரு நாற்று மட்டும் இருக்குமாறு வைத்து பின்னர் நடவு செய்ய வேண்டும்.

நடவு முறை: நடவு செய்வதற்கு 1 வாரத்திற்கு முன்பு தொழு உரம் இட்டு நடவு வயலைத் தயார் செய்திட வேண்டும். வரிசைக்கு வரிசை 5 அடி, செடிக்கு செடி 3 அடி இடைவெளியில் நாற்றுகள் நடுவதற்கு ஏதுவாக சிறு குழிகள் எடுக்க வேண்டும். 15 நாள்கள் வளர்ந்துள்ள நாற்றுகளை அந்த குழிகளில் நடவு செய்ய வேண்டும்.

ஊடுபயிர் சாகுபடி: வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளி உள்ளதால், காலியாக உள்ள பரப்பில் ஊடுபயிராக உளுந்து, பாசிப் பயறு மற்றும் கடலை போன்ற பயிர்களைப் பயிர் செய்யலாம். இதனால் கூடுதல் மகசூல் பெற்று அதிக லாபம் பெறலாம்.

களை மற்றும் நீர் மேலாண்மை: நடவு செய்த 20-ஆம் நாளில் கைக் களை எடுத்து களைகளைக் கட்டுப்படுத்தலாம். தண்ணீர் தேங்கினாலும், பற்றாக்குறை ஏற்பட்டாலும் பயிரின் வளர்ச்சி பாதித்து, மகசூல் இழப்பு ஏற்படும். இதனால் நடவின்போதும், பூக்கள் மலரும்போதும், காய்கள் உருவாகும்போதும் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம்.

நடவு செய்த 30ஆம் நாள் ஜீவாமிர்த கரைசல் தர வேண்டும். பூக்கும் தருணத்தில் பஞ்சகவ்ய கரைசலை இலை வழியாக 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். இதனால் அதிக எண்ணிக்கையில் காய்கள் உருவாகும்.

துவரையின் நுனி மேல் நோக்கி வளர்ந்து கொண்டே செல்லும். இதனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பக்கக் கிளைகள் தோன்றி, அதிக காய்கள் உருவாகும்.

எனவே, நடவு செய்த 20 முதல் 30ஆம் நாள் ஒருமுறையும், 50ஆம் நாள் இரண்டாவது முறையும் நுனியைக் கிள்ளிவிடவது அவசியம்.

பயிர் பாதுகாப்பு முறைகள்: சரியான நேரத்தில் மண் அணைத்துக் கொடுக்க வேண்டும். பூச்சிகள் ஏதேனும் தென்பட்டால், வேப்பம் கொட்டை கரைசல், பூண்டு மற்றும் நொச்சி கரைசல் போன்றவற்றை வேளாண் துறையினரின் ஆலோசனைப்படி தெளிக்க வேண்டும்.

இயற்கை முறையில் எள்ளு சாகுபடி

இயற்கை முறையில் எள்ளு சாகுபடி




ஆமணக்கு, நிலக்கடலை, சூரியகாந்தி என ஏகப்பட்ட எண்ணெய் வித்துப் பயிர்கள் இருந்தாலும், அதிகப் பராமரிப்பு இல்லாமல் குறைந்த செலவிலேயே நல்ல வருவாய் தருவது எள் சாகுபடிதான். எள் சாகுபடிக்கு வைகாசி பட்டம் ஏற்றதாக இருக்கும்.

ஏக்கருக்கு 2 கிலோ விதை !

‘அனைத்து மண்ணிலும் எள் வளரும். என்றாலும், வண்டலும் செம்மண்ணும் கலந்த நிலத்தில் நன்றாக வளரும். எள்ளில் வெள்ளை, கருப்பு, சிவப்பு என மூன்று வகைகள் புழக்கத்தில் உள்ளன. சித்திரை மாதத்தில் இரண்டு முறை கோடை உழவு செய்து மண்ணைக் கலைத்துவிட வேண்டும். தொடர்ந்து 10 டன் தொழுவுரத்துடன், அடியுரமாக தழை, மணி, சாம்பல் சத்து கொண்ட 50 கிலோ உரத்தையும் கலந்து இறைத்து விட வேண்டும். பிறகு விதைப்புதான். ஒரு ஏக்கருக்கு, 2 கிலோ விதை தேவைப்படும். சலித்த சுத்தமான மணலை, விதையின் அளவுக்கு சம அளவு கலந்து, சீராக நிலத்தில் தூவி விட வேண்டும். எள் மிகவும் லேசாக இருப்பதால்தான் மணலுடன் கலந்து விதைக்க வேண்டும். பிறகு குச்சியை (கவைக்கோல்) நிலத்தில் இழுத்துச் சென்றால் விதைகள் மண்ணில் அழுந்தப் புதைந்து விடும்.

தண்ணீர் வசதி இருந்தால், விதைத்தவுடன் லேசாக ஒரு பாசனம் செய்யலாம். இல்லாவிட்டாலும், கவலையில்லை. கிடைக்கும் பருவ மழை நீரே போதுமானது. மானாவாரி விவசாயம் போல விதைகள் தூவப்படுவதால் செடிகள் இடைவெளி இல்லாமல், அடர்த்தியாக இருக்கும். இப்படி இருந்தால், செடிகளின் வளர்ச்சி ஒரே சீராக இருக்காது. அதனால், செடிக்குச் செடி 15 செ.மீ இடைவெளி இருப்பதுபோல், செடிகளைக் கலைத்து விட வேண்டும்.

120 நாளில் அறுவடை !

60-ம் நாளில் நன்றாகப் பச்சைகட்டி செடிகள் வளர்ந்து நிற்கும். வெள்ளை நிறப்பூக்கள் செடிகளில் பூத்துக் குலுங்கும். வெயில் சூடு மற்றும் நுண்ணூட்டக் குறைபாடு காரணமாக பரவலாக பூக்கள் உதிரலாம். 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து, அதிகாலை வேளையில் பனிப்புகை போல தெளிக்க வேண்டும். பத்து நாட்கள் இடைவெளியில், இரண்டு முறை இப்படித் தெளித்தால் பூக்கள் உதிர்வது நின்று, செடிகளில் பிஞ்சுகள் பிடிக்கும்.

நோய் தடுக்கும் அஸ்திரங்கள் !

70-ம் நாள் முதல் செடிகளில் காய்கள் குலுங்கத் தொடங்கும். இந்த சமயத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் காய்ப்புழுக்களின் பாதிப்பு அதிகம் இருக்கும். இரண்டு முறை அக்னி அஸ்திரம் தெளித்தால், இவற்றைக் கட்டுப்படுத்தலாம். சில நேரங்களில், சாம்பல் நோயும் தாக்கலாம். இந்நோய் தாக்கிய செடிகளின் தண்டுகள் பழுத்து, பாதியாக ஒடிந்து விழும். 100 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் பிரம்மாஸ்திரம், 2 லிட்டர் கோமியம் ஆகியவற்றைக் கலந்து தெளித்தால், சாம்பல் நோய் கட்டுப்படும்.

90-ம் நாள் தொடங்கி… 120-ம் நாளுக்குள் அறுவடை செய்யலாம். செடிகளில் தொங்கும் காய்களில், ஒரு காயைப் பறித்து பிளந்து பார்த்தால், விதைகள் நிறம் மாறி, முதிர்ந்து காட்சி அளிக்கும். இதுவே அறுவடை செய்ய ஏற்ற தருணம். தகுந்த ஆட்களைக் கொண்டு செடிகளைப் பறித்து, கத்தை கட்டி, சுத்தம் செய்யப்பட்ட களத்துமேட்டில் ‘அம்பாரக் குவியல்’ போட்டு அடுக்கி வைக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் வரை அம்பாரக் குவியலில் காயப் போட வேண்டும். அப்பொழுதுதான் நுனித்தண்டில் இருக்கும் இளம் காய்கள் காய்ந்து முதிர்ச்சி அடையும். பின்னர் அம்பாரக் குவியலைக் கலைத்து செடிகளை களத்துமேட்டில் பரப்பி காய வைக்க வேண்டும். ஒரு வாரத்தில் செடிகள் காய்ந்து விடும். பிறகு, களத்துமேட்டில் கோணி சாக்கு அல்லது தார்பாலினை விரித்து மரக்கட்டை அல்லது பலகை மீது, காய்ந்த செடிகளைத் தட்டினால் காய்களில் இருந்து பதருடன் கலந்து எள் பிரியும்.’

அறுவடை முடிந்து அடித்த எள்ளை காற்றில் தூற்றினால் சுத்தமான எள் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 400 முதல் 500 கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்கும்.

இயற்கையான முறையில் பால் உற்பத்தி செய்யும் எளிய வழிமுறைகள்..


இயற்கையான   முறையில்
 பால் உற்பத்தி செய்யும் எளிய வழிமுறைகள்..







கறவை மாடுகளுக்கு ஆங்கில   டானிக்குகள்   மூலம் பால் உற்பத்தி செய்யும் மருந்துகளை  தவிர்த்து இயற்கையான   முறையில்
 பால் உற்பத்தி செய்யும் எளிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம் .கறவை மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்க இயற்கையான  வழிகள்:

  கறவை  மாடுகளுக்கு கன்று ஈன்ற 35 நாள் முதல் 45நாட்களுக்குள்  குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும் . ஏன் என்றால்   கறவை மாடுகளுக்கு வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் முட்டைகள்  வெளியேறிய பின்னர்  மாடுகள் நன்றாக தீவனம் எடுக்கும் .   மாடுகள் உற்கொண்ட தீவனம் முழுமையாக செரிமானமாகும். 

  குடற்புழு நீக்கம் செய்வதால் மாடுகள் நன்றாக தீவனம் எடுக்கும் போது பால் அதிகம் சுரக்கும் மேலும் மாடுகள் 60நாள் முதல் 80 நாட்களுக்குள் மாடு பருவதிற்க்கு வந்து விடும்.  

 குடற்புழு நீக்கம் செய்யும் பொழுது  ஆங்கில மருந்துகள் பயன்படுத்துவது என்றால் கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைப்படி  குடற்புழு நீக்க மருந்துகளை  கறவை மாடுகளுக்கு கொடுக்க வேண்டும்.  இயற்கை முறையில் என்றால்  குடற்புழு நீக்கம் மருத்தை  தயாரித்த  1மணி நேரத்திற்குள்  மாடுகளுக்கு கொடுக்க வேண்டும்.

🐄 மாடுகளுக்கு அடர் தீவனம் கொடுக்கும் பொழுது  பரங்கிக்காய்(200 கிராம் முதல் 500 கிராம் வரை மாடுகளின் பால் உற்பத்தியை பொறுத்து ) வெல்லம் 50 கிராம் முதல்100 கிராம் வரை அடர் தீவனத்தில் காலை அல்லது மாலை ஒரு வேளை மட்டும் கொடுக்க வேண்டும். இப்படிகொடுக்கும்போது  மாடுகளுக்கு  இயற்கையாகவேபால் சுரப்பு அதிகரிக்கும்  இதனை வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் கொடுத்தால் போதும்.

 மாடுகளுக்கு அடர்த்தீவனம்  கொடுக்கும்போது தானிங்களான (மக்கா சோளம் கம்பு, கேழ்வரகு , பாசி பயிறு)  நான்கில் ஒரு பங்கை பச்சையாக 12 மணி நேரம் ஊற வைத்து அரைத்து மாடுகளுக்கு கொடுக்க வேண்டும் இதனால் பாலில் கொழுப்பு சத்து அதிகரிக்கும்.

பச்சையாக  கொடுக்கும் அடர்தீவனத்தின் அளவு  மக்கா சோளம்5கிலோ, கம்பு 1கிலோ,  கேழ்வரகு 3கிலோ, பாசி பயறு 1கிலோ  இந்த அளவுகளில் கலந்து கொண்டு  500 கிராம் முதல் 1 கிலோ வரை  பச்சையாக ஊறவைத்த அரைத்து கொடுக்க வேண்டும் .

தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை!

தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை!




தென்னை நார் கழிவுகள்,காளான் விதை, மாட்டுச் சாணம், கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பூண்டு, மஞ்சள் தூள், கோமியம், வேப்பம் புண்ணாக்கு, பூண்டு, உட்பட 14 இயற்கை பொருட்களை எடுத்து, பெரிய குழியில் போட்டு மாதம் ஒரு முறை அவைகளை நன்றாக கலக்கி, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை குழிக்கு தண்ணீர் பாய்ச்சவும்
இவை ஆறு மாதத்தில் மக்கிய இயற்கை உரமாக உருமாகிறது.
ஒரு தென்னை மரத்துக்கு ஓராண்டுக்கு 40 கிலோ முதல் 50கிலோ வரையி லான இயற்கை உரம் போதும்.
இயற்கை உரம் ஒரு கிலோ தயாரிக்க ரூ.3.50 மட்டுமே செலவாகிறது.
இயற்கை உரங்களால் விளை விக்கப்படும் தென்னையில் 100 தேங்காய்களுக்கு 17 கிலோ கொப்பரை கிடைக்கும். ரசாயன உரங்களால் விளைவிக்கப்படும் தேங்காய்களில் 100 தேங் காய்க்கு 13 கிலோ கொப்பரை மட்டுமே கிடைக்கும்.

இயற்கை முறையில் சாமை சாகுபடி

இயற்கை முறையில் சாமை சாகுபடி




மண் வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் கூட சிறுதானியங்களை பயிரிடலாம். இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. குறிப்பாக சாமையை விவசாயிகள் எளிதாக பயிரிடலாம்.

சிறுதானியங்கள் என்பவை பொதுவாக குறுகிய பயிர்களாகும். இவை தானிய பயிர்களாகவும், தீவனப் பயிர்களாகவும், தொழிற்சாலை பயன்பாட்டுக்காகவும் பயிரிடப்படுகின்றன. இந்த பயிர் வறட்சி மற்றும் மித வறட்சி பகுதிகளிலும், அனைத்து பருவகால மாற்றங்களையும் தாங்கி வளரக்கூடியவை. சிறுதானியங்களின் உற்பத்தியை பெருக்க, விதை பெருக்கத் திட்டம், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள்,எண்ணெய் பனை மற்றும் மக்காச்சோளம் ஒருங்கிணைந்த திட்டம், தீவிர சிறுதானிய சாகுபடி, சிறுதானிய விரைவு திட்ட அணுகுமுறை, மானாவாரி நிலங்களின் வளர்ச்சி திட்டங்கள், விதை கிராம திட்டம் போன்ற திட்டங்கள் உள்ளன. விவசாயிகள் இந்த திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு சிறு தானியங்களை பயிரிடலாம்.

இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதிக அளவு அரிசியை மட்டுமே உட்கொள்ளுவதால் நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலையில் அரிசிக்கு பதிலாக மாற்று உணவை உண்ண வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியங்களில் ஊட்டச்சத்து அதிகம் இருப்பதால் அவற்றை உட்கொள்வது நல்லது. சிறுதானியங்களின் மகத்துவத்தை நுகர்வோர் உணர்ந்து வருவதால் சிறுதானியங்களுக்கான தேவையும் பெருகிவருகிறது. மேலும் விவசாயிகள் சிறுதானியங்களை பயிரிடுவதால் நல்ல லாபம் பெறலாம்.

சாமையின் ரகங்கள்:

கோ 3, கோ (சாமை4), பையூர்2, கோ1 ஆகிய ரகங்கள் உள்ளன.

பருவம்:

ஆடி மற்றும் புரட்டாசி பட்டங்களில் பயிரிடலாம்.

நிலம் தயாரித்தல்:

சித்திரை வைகாசி மாதங்களில் இறக்கை கலப்பை அல்லது மரக்கலப்பை கொண்டு இரண்டு முறை நன்கு ஆழமாக உழுது நிலத்தை சமன் செய்ய வேண்டும்.

விதையளவு:

கை விதைப்பு முறை மூலம் விதைக்கும் போது ஏக்கருக்கு 12.5 கிலோ விதை தேவைப்படும்.

கொர்து அல்லது விதைப்பான் கொண்டு வரிசை விதைப்பு செய்யும் போது ஏக்கருக்கு 10 கிலோ விதை தேவைப்படும்.

இடைவெளி:

பயிர் இடைவெளியானது 22.5 செ.மீ – 7.5 செ.மீ இருக்க வேண்டும்.

உர நிர்வாகம்:

ஒரு ஏக்கர் நிலத்தில் 5 டன் மட்கிய தொழு உரத்தை கடைசி உழவின் போது பரப்பி, பின்னர். உழ வேண்டும். தழை மணிசத்துக்களை ஏக்கருக்கு முறையே 44:22 கிலோ அளவில் இட வேண்டும்.

களை நிர்வாகம்:

வரிசை விதைப்பு செய்திருந்தால் இரண்டு முதல் மூன்று முறை இடை உழவு செய்து பின் ஒரு முறை கையினால் களையெடுக்க வேண்டும் . கை விதைப்பு முறையில் இரண்டு முறை கையினால் களையெடுக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்:

சாமைப் பயிர் நன்கு வளர்வதற்கு 300 முதல் 350 மீ.மீ. மழை அளவு தேவைப்படும். பயிர் வளர்ச்சிப் பருவத்தில் விதைப்பு நீர், பூக்கும் பருவம், பால் பிடிக்கும் பருவங்களில் கட்டாயம் மண்ணில் ஈரப்பதம் இருக்க வேண்டும்.

பயிர் களைதல்:

முதல் களை எடுத்தவுடன் அல்லது விதைத்த 20 – ம் நாளில் மானாவாரி பயிரில் வரிசைக்கு வரிசை 22.5 செ. மீ மற்றும் செடிக்கு செடி 7.5 செ. மீ வைத்து பயிர் களைய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

இந்த பயிரை பொதுவாக எந்த நோயும் தாக்குவதில்லை. குருத்து ஈ சாமையை தாக்கி விளைச்சலை மிகவும் பாதிக்கிறது. இந்த பூச்சியை கட்டுப்படுத்த விதைப்பை தள்ளிப்போடாமல் பருவமழை தொடங்கிய உடன் விதைக்கலாம்.

அறுவடை:

கதிர்கள்  நன்கு காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்ய வேண்டும்.

நன்மைகள்:

சாமை பயிர், உடல் அசதி மற்றும் தளர்ச்சியை நீக்கி சுறுசுறுப்பு தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படும். இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு வரும் முதுகுவலியை நீக்க சாமையை அடிக்கடி சாப்பிடலாம்.

மரிக்கொழுந்து சாகுபடி

மரிக்கொழுந்து சாகுபடி


தவனம் என்றழைக்கப்படும் மரிக்கொழுந்து ஒரு நறுமணத் தாவரமாகும். இச்செடிகள் இவற்றின் மணமுள்ள இலைகளுக்காகவும், அதிலிருந்து தயாரிக்கக் கூடிய நறுமண எண்ணெய்க்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது.  மாலைகளிலும், மலர் செண்டுகளிலும் இதன் இலைகள் அவற்றின் நறுமணத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.   இதன் நறுமண எண்ணெய் அழகு சாதனப் பொருட்களுக்கு நறுமணமூட்டவும், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.  அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கேக், புகையிலை மற்றும் பானங்களுக்கு நறுமணமூட்ட அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது.

இந்தியாவில் காஷ்மீர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் சுமார் 1000  எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.
மரிக்கொழுந்து ஓராண்டு வாழும் வகையை சார்ந்த பயிராகும்.  45-80 செ.மீ. உயரம் நேராக வளரக்கூடிய இச்செடிகள் சாம்பல் நிறம் கலந்த பச்சை வண்ண இலைகளை கொண்டது. பூங்கொத்தானது காப்பிட்டுலம் வகையைச் சார்ந்ததாகும்.  இருபாலினப் பூக்கள் நடுப்பாகத்திலும் பெண் பூக்கள் ஓரத்திலும் அமைந்திருக்கும்.
தவனத்தில் நெட்டை மற்றும் குட்டை என இரு வகைகள் உள்ளன.  அவற்றில் நெட்டை வகை சற்று உயரமாக (80 செ.மீ வரை) வளரும் தன்மையும், பிளவுபட்ட இலைகளையும், காலம் தாழ்ந்து பூக்கும் தன்மையும் கொண்டதாகும்.  குட்டை வகையில் அனைத்து இலைகளும் செடிகளின் அடிப்பாகத்திலும், மேல்பாகத்திலும் பிளவுபட்டு காணப்படும். சீக்கிரமாக பூக்கும் தன்மை கொண்டது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து பி கே எம்-1 மரிக்கொழுந்து எனும் மேம்படுத்தப்பட்ட இரகம் வெளியிடப்பட்டுள்ளது. இது உள்ளுர் இரகத்தில் (சின்னமனூர்) இருந்து தேர்வு செய்யப்பட்டதாகும். இதன் செடிகள் நேராகவும், அடர்த்தியாகவும் அதிக கிளைகளையும் கொண்டது.  இலைகள் வெள்ளை கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும். ஒரு செடியின் எடை சுமார் 38.65 கிராம் கொண்டதாக இருக்கும். ஒரு எக்டரிலிருந்து 16.78 டன் பச்சை தழை விளைச்சலாக கிடைக்கிறது.  இதன் மூலம் 20.32 கிலோ வாசைன எண்ணெய் கிடைக்கம்.  இந்த இரகம் சுமார் 145 முதல் 150 நாட்கள் வயதினைக் கொண்டதாகும்.  தமிழ்நாட்டில் வெப்ப மண்பல சமவெளிப் பகுதிகளுக்கு மிகவும் உகந்த இரகமாகும்.
இப்பயிர் வளம் செறிந்த செம்மன் நிலங்களிலும், நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் நிலங்களிலும் நன்கு வளரும் மிதமான மழை, நல்ல சூரிய ஒளி, காலை பனி ஆகியவை நல்ல விளைச்சல் கிடைக்க உதவுகின்றன. பூக்கும் பருவத்தில் அதிக அளவு மழை மற்றும் வெப்பம் இருந்தால் கிடைக்கும் எண்ணெயின் அளவு குறைகின்றது.
மாலைகளுக்கு உபயோகிப்பதற்காக பயிரிடப்படும் மரிக்கொழுந்து விதைத்ததில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அறுவடை செய்யபடுவதால் எந்த பருவத்திலம் சாகுபடி செய்யலாம். ஆனால், வாசனை எண்ணெய்க்காக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி – மார்ச் வரை சாகுபடி செய்வது நல்லது. பின்பு மறுதாம்பு பயிரை ஏப்ரல் – மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.
சாகுபடி நுட்பம்

மரிக்கொழுந்து செடிகள் விதை முலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு எக்டரில் விதைக்க 1.50 கிலோ விதை தேவைப்படும். விதைகள் மிகச்சிறயவை. விதைகள் முந்தன பருவத்து பயிரிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஓராண்டுக்கு மேலான பழைய விதைகள் முளைப்புத் தன்மையை இழந்து விடுகின்றன.
நாற்றங்கால் பாத்திகள் 2 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் உடையதாக அமைக்க வேண்டும். ஒரு பாத்திக்கு 5 கிலோ மக்கிய தொழுஉரம், 2 கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் இட்டு மண்ணோடு நன்றாக கலக்க வேண்டும். ஒரு எக்டர் நடவு செய்ய 1.5 கிலோ விதையை 500 சதுர மீட்டர் பரப்பளவுள்ள நாற்றங்காலில் விதைக்க வேண்டும். விதைப்பதற்கு முன் விதைகளை விதைநேர்த்தி செய்யவேண்டும் (1 கிலோ விதைக்கு 50 கிராம் சூடோமோனாஸ்).
விதைகளை 10 கிலோ மணலுடன் கலந்து, சுமார் 3 கிராம் விதை 1 சதுர மீட்டர் பரப்பளவில் விழுமாறு தூவி விதைக்க வேண்டும். பின்பு விதைகளை மணல் தூவி மூடவேண்டும். பூவாளி கொண்டு ஒரு நாளைக்கு இருமுறை வீதம் தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைத்த 3-4 நாட்களில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். விதைகளை 48 மணி நேரம் ஈரத்துணியில் ஊறவைத்து, முளைக்கட்டியும் விதைக்கலாம்.
நடவு  வயலை கட்டிகளின்றி நன்கு உழுது 2 ஒ 2 மீட்டர் அளவில் பாத்திகள் அமைத்துக் கொள்ளவேண்டும்.  விதைத்த 30 நாட்கள் கழித்து நாற்றுக்களை பிடுங்கி 15 ஒ 7.5  செ.மீ. என்ற அளவில் இடைவெளியிட்டு நடவேண்டும். அந்த சமயம் நாற்றுக்கள் சுமார் 10 – 12 செ.மீ. அளவு உயரமிருக்கும்.
மரிக்கொழுந்து பயிருக்கு எக்டருக்கு 15 டன் நன்கு மக்கிய தொழு உரம், 125 கிலோ தழை, 125 கிலோ மணி மற்றும் 75 கிலோ சாம்பல் சத்து உரங்கள் சிபாரிசு செய்யப்படுகிறது. முழு அளவு நன்கு மக்கிய தொழு உரம், மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாகவும், 50 கிலோ தழைச்சத்தினை நடவு செய்த 25வது நாளில் முதல் மேலுரமாகவும், பின்னர் 25 கிலோ தழைச்சத்தினை ஒவ்வொரு முறையும் அறுவடை செய்த பின்னர் மேலுரமாக இடவேண்டும்.
பொதுவாக இச்செடிகளை பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை. சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் வேப்பெண்ணெயை நீரில் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம்.
நாற்றங்காலில் நாற்றுக்கள் பூஞ்சாணத்தால் பாதிக்கப்பட்டு அழுகிவிடும். நாற்றுக்கள் மழை காலத்தில் உற்பத்தி செய்யாதிருந்தால் அழுகல் நோயை தவிர்க்கலாம்.
விதைத்த 5 – 6 மாதங்கள் வரை இப்பயிரை அறுவடை செய்யலாம்.  விதைத்த 45 வது நாளில் முதல் அறுவடையும், அதன் பின் 30 – 40 நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியாக அறுவடையும் செய்யலாம்.
நல்ல விளைச்சல் பெறவும், அதிக அளவு எண்ணெய் கிடைக்கவும் அதிக அளவு பூ மொட்டுகள் விரிந்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். பொதுவாக பிப்ரவரி கடைசி மற்றும் மார்ச் மாதங்களில் அறுவடை செய்ய வேண்டும்.  செடிகளை தரையிலிருந்து சுமார் 10 செ.மீ.உயரம் விட்டு தழை வெட்ட வேண்டும்.  ஒரு எக்டரிலிருந்து 17 பசுந்தழையும், அவற்றிலிருந்து 12.50 கிலோ வாசனை எண்ணெயும் கிடைக்கிறது.


வாசனை எண்ணெய் எடுத்தல்
வாசனை எண்ணெய் எடுக்க மரிக்கொழுந்து செடிகளை அதிக அளவு பூ மொட்டுகள் வெளிவந்த பின்பு பிப்ரவரி மாத கடைசியில் அல்லது மார்ச் மாதம் அறுவடை செய்து 2-3 நாட்கள் காய வைக்க வேண்டும்.
காய்ச்சி வடிக்கும் முறையில் எண்ணெய் பிரித்தெடுத்தப்படுகிறது. வடிகலன் மிருதுவான இரும்பல் செய்யப்பட்டு அடிப்பாகத்தில், துளைகளோடு கூடிய உலோகத் தட்டை கொண்டிருக்கும்.  இதனுள் இலைகள் நெருக்கமாக இடைவெளியின்றி அடைக்கப்பட வேண்டும்.  இலைகளை அடைப்பதையும், எடுப்பதையும் இயந்திரங்கள் மூலமாகவும் செய்யலாம்.  இக்கலத்தின் மூடியை தேவைப்படும் போது தள்ளி வைத்துக் கொள்ளலாம். இலைகள் நெருக்கமாகவும் ஒன்று போலும், அசைக்கபட்டாவிட்டால் எண்ணெய் விளைச்சல் மிகவும் குறைந்துவிடும்.
கொதிகலனிலிருந்து வரும் நீராவி, ஆவியாக்குதல் முறையில் இலைகளிலிருந்து காய்ச்சி வடித்து வரும் எண்ணெயை, கண்டென்சர் கலங்கள் குளிர்வித்து அங்கிருந்து சேமிப்பு கலங்களுக்கு அனுப்புகின்றன.
இந்த எண்ணெய் தண்ணீரை விட எடை குறைவாக  இருப்பதாலும், தண்ணீரில் கரையாததாலும், மேலே மிதக்கின்றது. கீழே உள்ள நீர் அடியில் உள்ள வடிகுழாய் மூலமாக வெளியேற்றப்படுகிறது.
ஒருமுறை எண்ணெய் எடுக்க சுமார் 6-8 மணி நேரமாகின்றது.  எண்ணெய் எந்த விதமான கசடுகள் அல்லது மிதக்கும் பொருட்கள் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். எண்ணெயை அலுமினிய பாத்திரங்களில் விளிம்பு வரை இருக்கத்தக்கதாக சேமிப்பு வைக்க வேண்டும்.

அன்று 10 ஏக்கர்... இன்று 200 ஏக்கர்! - மதிப்புக்கூட்டல் ‘நெல்லி’யில் மகத்தான வெற்றி!

அன்று 10 ஏக்கர்... இன்று 200 ஏக்கர்! - மதிப்புக்கூட்டல் ‘நெல்லி’யில் மகத்தான வெற்றி!





காய்கறிகள், பழங்கள்... என எந்த விளைபொருளாக இருந்தாலும் அவற்றுக்குச் சந்தையில் பல நேரங்களில் கட்டுபடியான விலை கிடைப்பதில்லை. அண்டை மாநிலங்களிலிருந்து வரத்து, நம் மாநிலத்திலேயே உற்பத்தி அதிகரிப்பு, வியாபாரிகளின் சூழ்ச்சி... எனப் பல காரணங்களால் விலையின்மைப் பிரச்னை ஏற்படும். இதுபோன்ற சமயங்களில், குளிர் பதனக்கிடங்குகளில் இருப்பு வைத்து விற்பனை செய்தல், மதிப்புக் கூட்டி விற்பனை செய்தல் போன்ற யுக்திகள் மூலம் ஓரளவுக்கு லாபம் பார்க்க முடியும். இப்படி வாய்ப்புகள் இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் இவற்றைப் பயன் படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. ஆனால், சில விவசாயிகள் மதிப்புக் கூட்டல் மூலம் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ராஜேந்திரன். 

வாவிபாளையம் அடுத்துள்ள கொசவ பாளையம் கிராமத்தில் ராஜேந்திரன் கடந்த 22 ஆண்டுகளாக நெல்லிச் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். அதோடு நெல்லியிலிருந்து சாறு உற்பத்தியும் செய்து வருகிறார். நெல்லி விவசாயத்தில் கொடிகட்டிப்பறக்கும் இவரின் அனுபவங்களைக் கொஞ்சம் கேட்போமா...

சீதனமாகக் கிடைத்த நிலம் 

“எனக்குப் பூர்வீகம் கரூர் மாவட்டம், ஆண்டிபாளையம். போன தலைமுறையோடு விவசாயத்தைவிட்டு வேறு தொழிலுக்குப் போய்ட்ட குடும்பம். 10-ம் வகுப்பு வரைதான் படிச்சிருக்கேன். சின்ன வயசிலேயே வியாபாரம் செஞ்சு பெரியாளா வளரணும்னு ஆசை. அதனால, கையில இருந்த பணத்தை வெச்சுக் கொடுமுடியில் ஒரு டெலிவிஷன் ஷோரூம் ஆரம்பிச்சேன். 

அந்தப் பிசினஸ் நல்லா நடந்துச்சு. அப்புறம், பரமத்திவேலூர், பல்லடம்னு ரெண்டு ஊர்லயும் ஷோரூம் ஆரம்பிச்சேன். இடையில எனக்குக் கல்யாணம் ஆச்சு. அப்போ மாமனார் வீட்டுக்காரங்க சீதனமா 10 ஏக்கர் நிலத்தக் கொடுத்தாங்க. அது மேட்டுக்காடு. அதனால, அதை விற்பனை செஞ்சுட்டு பிசினஸை விரிவுபடுத்தலாம்னு முடிவு செஞ்சேன்.

மனதை மாற்றிய நாளிதழ்ச் செய்தி 

அந்தச் சமயத்துல, ஒரு நியூஸ் பேப்பர்ல, நெல்லி விவசாயம் பத்தின செய்தி போட்டிருந்தாங்க. வறட்சியிலும் நெல்லி நல்லா வரும்னு எழுதியிருந்தாங்க. அதைப் படிச்சதும், நிலத்தை விற்பனை செய்ற எண்ணத்தை மாத்திக்கிட்டு நெல்லிச் சாகுபடி செய்யலாம்னு முடிவு செஞ்சேன். வனத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை அலுவலகங்கள்ல எல்லாம் போய் நெல்லி பத்தி விசாரிச்சுப் பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். எல்லாருமே நெல்லிச் சாகுபடி பத்தி நல்லபடியாத்தான் சொன்னாங்க. 

அடுத்ததா நிலத்துல 550 அடிக்கு போர்வெல் போட்டு வியாபாரத்துக்கான மின்சார இணைப்பு வாங்கினேன். அப்போகூடச் சிலர் என்னைப் பார்த்து, பிசினஸ்ல சம்பாதிச்ச காசைப் பூமியில விட்டுடாதீங்க. நிலத்தைக் காத்தாடி கம்பெனிக்கு வித்தா நல்ல விலை கிடைக்கும்’னு சொல்லி மனசை மாத்தப் பார்த்தாங்க. சிலர் பகடி பேசினாங்க. நான் எதையும் காதுல போட்டுக்காம வேலையை ஆரம்பிச்சுட்டேன். தோட்டக்கலைத்துறை, வனத்துறையில இருந்து கொஞ்சம் நெல்லி நாற்றுகள் கிடைச்சது. 

மீதியைத் தனியார் நர்சரிகள்ல வாங்கிக்கிட்டேன். ஒரு நாற்று 25 ரூபாய்னு 4,500 நாற்றுகள் வாங்கினேன். பத்து ஏக்கருக்கு 4,300 நாற்றுகள் போதுமானதுதான். இருந்தாலும் பாடுவாசிக்கு (சரியாக முளைக்காத நாற்றுகளைப் பிடுங்கிவிட்டு நடுவதற்காக) 200 நாற்றுகள் சேர்த்து வாங்கிக்கிட்டேன். எல்லாமே வீரிய ஒட்டு ரகப் பெருநெல்லிதான்” என்று விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன ராஜேந்திரன் தொடர்ந்தார்...

முழு இயற்கைமுறைச் சாகுபடி 

“ஆரம்பத்துல இருந்தே முழு இயற்கை விவசாயம்தான்னு முடிவு செஞ்சுட்டேன். 10 அடிக்கு 10 அடி இடைவெளியில் இரண்டரை அடி ஆழம், இரண்டரை அடி அகலத்துல குழிகளை எடுத்தேன். 20 கிலோ தொழு உரம், 1 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ரெண்டையும் கலந்து, ஒவ்வொரு குழியிலயும் நிரப்பி, செடிகளை நட்டு, சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சேன். வாரத்துக்கு ரெண்டு தடவை ஒரு செடிக்கு 80 லிட்டர் அளவுல தண்ணீர் கொடுத்தேன். 

நல்லா தளதளனு வளந்து வந்துச்சு. சரியான சமயத்துல கவாத்துச் செய்றது, களை எடுக்குறதுனு எல்லாத்தையும் தவறாமச் செஞ்சுட்டு வந்தேன். வருஷத்துக்கு ரெண்டு முறை பருவமழை தொடங்குறதுக்கு முன்னாடி, ஒவ்வொரு மரத்துக்கும் 10 கிலோ ஆட்டு எருவையும் 10 கிலோ தொழுவுதையும் கலந்து கொடுத்தேன்.

10 ஏக்கரில் 100 டன் மகசூல் 

நட்ட மூணாவது வருஷத்துல இருந்து சிறப்பாகக் காய்க்க ஆரம்பிச்சது. நான் எதிர்பார்த்ததைவிடக் கூடுதலா மகசூல் கிடைச்சது. முதல் பறிப்பிலேயே பத்து ஏக்கர்லயும் சேர்த்து 20 டன் அளவுக்கு மகசூல் வந்தது. 

அதை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்ல கிலோ 20 ரூபாய்னு விற்பனை செஞ்சேன். அதுல 4 லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சது. அடுத்தடுத்த வருஷத்துல மகசூல் அதிகரிக்க ஆரம்பிச்சது. நட்ட அஞ்சாம் வருஷத்துல பத்து ஏக்கர்ல 100 டன் அளவுக்குக் காய்க்க ஆரம்பிச்சுடுச்சு. மத்த வெள்ளாமை போலத்தான் நெல்லிக்காய்க்கும். விலை நிரந்தரமா இல்லை. சில சமயங்கள்ல ரொம்பவும் கீழே போயிடுச்சு. அதிக அளவு காயை அழிக்க முடியலை. பல நேரங்கள்ல விற்க முடியாம மார்க்கெட்ல இருந்து வர்ற வழியில் இருக்குற ஊர் மக்களுக்குச் சும்மாவே நெல்லிக்காயைக் கொடுத்துருக்கேன்.

நம்மாழ்வார் சொன்ன ஆலோசனை 

அந்தச் சமயத்துலதான், ஒரு பத்திரிகையாளர் நண்பர் மூலமா நம்மாழ்வார் ஐயா தொடர்பு கிடைச்சது. நம்மாழ்வார், என்னோட நெல்லித் தோட்டத்துக்கு வந்து முழுசையும் சுத்திப் பார்த்துட்டு ஆச்சர்யப்பட்டார். அப்போ அவர்கிட்ட, ‘வருஷம் முழுக்கச் சீரான விலை கிடைக்க மாட்டேங்குது’னு சொன்னேன். அப்போ ஐயாதான், ‘மதிப்புக்கூட்டுங்க, நல்ல விலை கிடைக்கும்’னு சொன்னார். 

அப்புறம் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல, நெல்லி மிட்டாய், ஊறுகாய், வத்தல், நெல்லிச்சாறுனு மதிப்புக்கூட்டறது பத்தி பயிற்சி எடுத்துக்கிட்டேன். பேங்க்ல லோன் வாங்கி, சின்ன அளவுல நெல்லிச்சாறு தயாரிக்கிற கம்பெனி ஆரம்பிச்சேன்” விவசாயத்தில் இருந்து மதிப்புக்கூட்டலுக்கு மாறியது குறித்துச் சொன்ன ராஜேந்திரன் தொடர்ந்தார். 

விளம்பரத்தால் கிடைத்த விற்பனை வாய்ப்பு 

“நெல்லிக்காய்ல இருந்து தினமும் 100 லிட்டர் அளவுக்கு நெல்லிச்சாறு உற்பத்தி செஞ்சு, பாட்டிலில் அடைச்சு ஊர் ஊராப் போய் விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். விவசாயக் கண்காட்சிகள்ல கலந்துக்கிட்டு ஸ்டால் போட்டதுல ஓரளவுக்கு வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிச்சது.

செய்தித்தாள், ரேடியோ, டி.வி எல்லாத்துலயும் தொடர்ச்சியா விளம்பரம் செஞ்சதுல ஆர்டர்கள் குவிய ஆரம்பிச்சது. ஆந்திரா, கர்நாடகா மாநிலத்துலயும் விளம்பரம் செஞ்சேன். அங்க இருந்தும் ஆர்டர் அதிகமா வர ஆரம்பிச்சதும், நவீன இயந்திரங்களை வாங்கி உற்பத்தித்திறனை அதிகப்படுத்தினேன்.

நிலத்தில் சம்பாதித்ததை நிலத்திலேயே முதலீடு 

அப்புறம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மலேசியா, சிங்கப்பூர், துபாய், வியட்நாம்னு நெல்லிச்சாற்றை அனுப்ப ஆரம்பிச்சேன். விவசாயத்துல கிடைச்ச வருமானத்தை விவசாயத்துலயே முதலீடு செய்வோம்னு முடிவு செஞ்சு திண்டுக்கல் மாவட்டம், ஸ்ரீராமபுரம் கிராமத்துல 150 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். அந்த நிலத்தையும் சரி செஞ்சு நெல்லிச் சாகுபடியை ஆரம்பிச்சேன். 

இங்க நடவு செஞ்சு 22 வருஷம் ஆச்சு. ஸ்ரீராமபுரம் கிராமத்துல நடவு செஞ்சு 12 வருஷம் ஆகுது. இப்போ மொத்தம் 160 ஏக்கர்ல நெல்லி இருக்கு. வருஷத்துக்குச் சராசரியா 1,600 டன் அளவுக்கு ( 16 லட்சம் கிலோ) நெல்லிக்காய் கிடைக்கிது. அதுல சாறு எடுத்து விற்பனை செஞ்சுட்டு இருக்கேன்” என்ற ராஜேந்திரன் மதிப்புக்கூட்டல் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்த தகவல்களைச் சொன்னார். 

ஆண்டுக்கு 4 லட்சம் லிட்டர் சாறு 

“4 கிலோ நெல்லிக்காயில் ஒரு லிட்டர் சாறு எடுக்கலாம். வருஷத்துக்குச் சராசரியா 4 லட்சம் லிட்டர் அளவுக்குச் சாறு உற்பத்தி செய்றேன். ஒரு லிட்டர் 120 ரூபாய்ங்கிற விலையில் வருஷத்துக்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானம் வருது. ஒரு லிட்டர் சாறு க்கு எல்லாச் செலவும் போக 30 ரூபாய் லாபம் கிடைக்கும். அந்தக்கணக்குல வருஷத்துக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்குது. காயா விற்பனை செஞ்சா இதுல பாதி அளவு கூட லாபம் கிடைச்சிருக்காது” என்ற ராஜேந்திரன் நிறைவாக,

பத்துக்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் 

“மதிப்புக்கூட்டல்னாலதான் இவ்வளவு லாபம் கிடைக்குது. விலை கிடைக்கலையேனு மனம் தளராம முயற்சி எடுத்ததுக்குக் கிடைத்த வெற்றி இது. இந்த வெற்றிக்கு வழிகாட்டியவர் நம்மாழ்வார் ஐயா. அதனால, அவர் ஆரம்பிச்ச வானகம் பண்ணைக்குப் பக்கத்துல அவர் நினைவா 60 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கேன். அதுலயும் நெல்லிச் சாகுபடியை ஆரம்பிக்கப் போறேன். அடுத்து பத்துக்கு மேற்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள தயாரிக்கிற யோசனையும் இருக்கு. அதுக்காக என்னோட பொண்ணை உணவுப் பதப்படுத்துதல் சம்பந்தமான படிப்பைத்தான் படிக்க வெச்சுருக்கேன்” என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார்.

தோட்டத்திலேயே நாற்று உற்பத்தி! 

தனக்குத்தேவையான நெல்லி நாற்றுகளை ஒட்டுக்கட்டுதல்மூலம் தோட்டத்திலேயே ராஜேந்திரன் உருவாக்கிக்கொள்கிறார். அதற்காக இத்தொழில்நுட்பம் தெரிந்த வட மாநிலத் தொழிலாளர்கள் சிலரையும் பணியில் அமர்த்தியுள்ளார்.

நல்ல உரமாகும் சக்கை! 

“நெல்லிக்கனிகளைப் பிழியும்போது டன் கணக்கில் சக்கை கிடைக்கும். இந்தக் கழிவுச் சக்கையையும் காய வெச்சுச் சாணத்தோடு சேர்த்து மட்க வெச்சு அதை, நெல்லி மரங்களுக்குக் கொடுக்கிறேன். இது நல்ல தழைச்சத்தா இருக்கு. வேர் கறையானையும் கட்டுப்படுத்துது” என்கிறார் ராஜேந்திரன்.

வறட்சியைத் தாங்கும் நெல்லி 

“கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டாலும் தாங்கக்கூடியது நெல்லி. இலையெல்லாம் உதிர்ந்துபோனாலும் ஒரு மழை கிடைச்சதும் திரும்பவும் தழைச்சுடும். ரெண்டு, மூணு வருஷத்துக்கு முன்னாடி தென்னையெல்லாம் பட்டுப்போன சமயங்கள்ல கூட நெல்லி தாங்கி நின்னுடுச்சு” என்கிறார், ராஜேந்திரன்.

உயிர்வேலியாகப் பல்வகை மரங்கள் 

தன்னுடைய 160 ஏக்கர் நிலத்துக்கும் உயிர் வேலிபோலத் தேக்கு, குமிழ், மலைவேம்பு, வாகை, வேம்பு உள்ளிட்ட பல வகை மரங்களில் கிட்டத்தட்ட 2 லட்சம் மரங்களை நடவு செய்துள்ளார் ராஜேந்திரன். எதிர்காலத்தில் இம்மரங்கள் மூலமும் அவருக்குக் கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

அசுவினி தாக்கும்... கவனம் 

“நெல்லிச்செடிகளை அதிகம் தாக்குவது அசுவினி பூச்சிகள்தான். மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிச்சுதான் இதைக் கட்டுப்படுத்துறேன். 

160 ஏக்கருக்கும் இங்கேயே பூச்சிவிரட்டித் தயாரிச்சு பயன்படுத்துறேன்” என்கிறார் ராஜேந்திரன்.

நோய் எதிர்ப்புசக்தி கூடும் 

“நெல்லிக்கனியில் எக்கச்சக்கமான மருத்துவக் குணங்கள் இருக்குங்கிறது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். 

குழந்தைகளுக்குத் தினமும் 30 மில்லி நெல்லிச்சாறு கொடுத்தால், நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்” என்கிறார் ராஜேந்திரன்.

உங்களுக்கு சக்கரை நோய் உள்ளதா இருமுறை ஆரைக்கீரை

உங்களுக்கு சக்கரை நோய் உள்ளதா இருமுறை ஆரைக்கீரை..



சர்க்கரை நோயை விரட்ட ஆரைக்கீரை…

செங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட நீர்த்தாவரம் . இலையே மருத்துவப்பயனுடையது,கீரைக்கட்டாக விற்கப்படுகிறது. வெப்பம் நீக்குதல்,தாகம் தணித்தல் ஆகிய பண்புகளைக் கொண்டது. விட்டமின் ஏ சத்து அதிகம் கொண்டது,இதை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சுவையின்மை பிரச்சினையும்,செரியாமை பிரச்சினையும் அகலும்.
தாய்ப்பால் சுரப்பை நிறுத்த விரும்புவோர் இந்தக்கீரையை அடிக்கடி சமைத்துண்ண பலன் கிடைக்கும். இது நன்கு சுவையைத் தரும். மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும். பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.

கீரையை சமைத்துண்னவோ,சூரணம் செய்து வைத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வரவோ செய்தால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆரைக் கீரையின் பயன்களை அன்றே தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார். நீராரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மன அழுத்தப் பிரச்சினைகள் இருப்போர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர பிரச்சினை சரியாகும். மன அழுத்தம்,வலிப்பு நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ஆராக்கீரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதன் சூரணத்தை 30கிராம் எடுத்து அரைலிட்டர் நீரில் இட்டு காய்ச்சி அது பாதியாக சுண்டியவுடன் அதனுடன் பால்,பனங்கற்கண்டு கலந்து காலை மாலை சாப்பிட்டு வர நீரிழிவு,அதிக தாகம்,சிறுநீரில் இரத்தம் போதல் ஆகிய பிரச்சினைகள் தீரும்.

குழந்தைபேற்றினை தள்ளிப்போட நினைப்பவர்கள் இந்தக்கீரையை அடிக்கடி சாப்பிடலாம்,கருவுறுதலை தடுக்கும் ஆற்றல் இக்கீரைக்கு இருப்பதால் குழந்தைப்பேற்றுக்காக காத்திருப்போர்,கருவுற்றப்பெண்கள் இக்கீரையை தவிர்ப்பது நலம்.

ஆரைக்கீரை சூப்

ஆரைக் கீரை – 1 கைப்பிடி
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 5
பூண்டுப்பல் – 3
மிளகு – 5
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
இஞ்சி – 1 சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு

இவற்றைச் சேர்த்து நன்கு நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வரலாம்.

சர்க்கரை நோயின் பாதிப்புக்கு ஆளானவர்கள், வாரம் இருமுறை ஆரைக் கீரை சூப் அருந்தி வந்தால் உடல் சோர்வு, மயக்கம், கை, கால் நடுக்கம் நீங்கும். அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது குறையும். மலச்சிக்கல் தீரும். அசீரணக் கோளாறுகள் நீங்கும்.

சரும நோய்கள் ஏதும் அணுகாது. பித்தத்தைத் தணிப்பதால் கண்பார்வை நரம்புகள் வலுவடையும். பெண்களுக்கு உண்டாகும் சூலக நோய்களைத் தடுக்கும். வயிற்றுப் பூச்சிகளை நீக்குவதுடன், வயிற்றுப் புண்களையும் ஆற்றும்.

இயற்கையோட வரம்❤️❤️❤️

இயற்கையோட வரம்❤️❤️❤️





















1 ஏக்கர்… ரூ 3 லட்சம் லாபம் – வறட்சியிலும் வருமானம் தரும் பப்பாளி!

1 ஏக்கர்… ரூ 3 லட்சம் லாபம் – வறட்சியிலும் வருமானம் தரும் பப்பாளி!









தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சியால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். மழை இல்லாததால், ஆறுகளில் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவற்றில் தண்ணீர் இல்லை.
இந்நிலையில், ‘கிடைக்கும் தண்ணீருக்கு ஏற்ப சாகுபடிப் பரப்பைக் குறையுங்கள். இல்லையேல், குறைவான தண்ணீர்த் தேவைப்படும் பயிருக்கு மாறுங்கள்’ என்பதுதான் நீர் மேலாண்மை வல்லுநர்களின் ஆலோசனையாக இருக்கிறது. காலத்தின் கட்டாயத்தால், பல விவசாயிகள் இக்கோட்பாட்டைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சிவபிரசாத்.
சிவபிரசாத், குறைவான தண்ணீர் பயன்படுத்தி ‘ரெட்லேடி’ ரகப் பப்பாளியைச் சாகுபடி செய்துவருகிறார். தூத்துக்குடி மாவட்டம், கானத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள கந்தசாமிபுரம் கிராமத்தில் உள்ளது, இவரது பப்பாளித் தோட்டம். பழங்கள், அறுவடை நடந்துகொண்டிருந்த சமயத்தில் சிவபிரசாத்தைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும், மகிழ்ச்சியோடு வரவேற்றவர், ஒரு பழுத்த பப்பாளிப்பழத்தை நறுக்கிச் சாப்பிடக் கொடுத்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்.
“பூர்வீகமாவே விவசாயக் குடும்பம்தான். நெல், வாழைதான் இந்தப் பகுதியின் முக்கியப் பயிர். ரொபாஸ்டா, நேந்திரன் வாழை போடுவோம். பருவத்துக்கேத்த ஒட்டு ரக நெல்லைச் சாகுபடி செய்வோம். ஆரம்பத்துல இருந்தே ரசாயன உரம்தான் போட்டுட்டு இருந்தோம். நான் பள்ளிகள்ல படிக்கிறப்பவே விடுமுறை நாள்கள்ல தோட்டத்துல வேலை செய்ய வந்துடுவேன். களை எடுக்கிறது, வரப்பு வெட்டுறதுனு எல்லா வேலைகளையும் தெரிஞ்சுகிட்டு ஈடுபாட்டோட செய்வேன். அப்படியே கல்லூரி படிப்பு முடிச்சுட்டு விவசாயம் பார்க்கலாம்னு ஆசைப்பட்டேன். முதல் வருஷம் வாழை நடவு போட்டதுல ஒண்ணும் சரிப்பட்டு வரல. அதனால, மும்பை போய் இட்லிக் கடை வெச்சேன். அதுவும் சரிப்பட்டு வரல. அடுத்த வருஷமே ஊர் திரும்பிட்டேன்.
திரும்பவும் விவசாயமே செய்யலாம்னு முடிவு செஞ்சிருந்தேன். அந்தச் சமயத்துல ஒரு நாளிதழில் இயற்கை விவசாயம் பத்தி கட்டுரை வந்திருந்துச்சு. அதைப் படிச்சப்போ ஒண்ணும் புரியலை. ஆனா, இயற்கை விவசாயம் மூலமா உரம் போடாம விவசாயம் பண்ணலாம், நிலம் மலடாகாம பாத்துக்கலாம்னு மட்டும் தெளிவாகப் புரிஞ்சது. ஏன்னா, அந்தச் சமயத்துல ரசாயன உரத்தைக் கொட்டிக்கொட்டி எங்களோட நிலமே சிமென்ட் தரை மாதிரி இறுகிக் கிடந்துச்சு. தொடர்ந்து இயற்கை விவசாயம் பத்தின விஷயங்களைத் தேடிட்டு இருந்தேன். அப்போதான் ‘பசுமை விகடன்’ அறிமுகமாச்சு.
அதுல, சுபாஷ் பாலேக்கரோட ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறை பத்தி ஒரு கட்டுரை வந்திருந்துச்சு. அதோட பயிற்சி வகுப்பு பத்தின அறிவிப்பும் இருந்துச்சு. உடனே ஈரோட்டுல நடந்த அந்த நாலு நாள் ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புக்கு முன்பதிவு செஞ்சிட்டேன். அந்தப் பயிற்சி வகுப்புல, செலவில்லாத இயற்கை முறை விவசாயத்தைப் பத்தி முழுமையாகத் தெரிஞ்சுகிட்டேன்.

பயிற்சியில கலந்துகிட்டு வந்த கையோட ஜீரோ பட்ஜெட் முறையில் ஒரு ஏக்கர்ல நேந்திரன் வாழைச் சாகுபடி செஞ்சேன். சுமாரான மகசூல்தான் கிடைச்சது. ஆனா, எனக்கு மண்ணை வளமா மாத்துறதுதான் குறிக்கோளா இருந்துச்சு. ரெண்டாவது வருஷம் நல்ல மகசூல் கிடைச்சது” என்று தான், இயற்கை விவசாயத்துக்கு மாறியது குறித்து சொன்ன சிவபிரசாத் தொடர்ந்தார்.
“அடுத்தடுத்து பாரம்பர்ய ரக நெல், வாழை, பப்பாளினு ஜீரோ பட்ஜெட் முறையில் பயிர் செய்ய ஆரம்பிச்சேன். முழு இயற்கை விவசாயத்துக்கு மாறி, கிட்டத்தட்ட ஒன்பது வருஷம் ஆயிடுச்சு. இது மொத்தம் 6 ஏக்கர் நிலம். செம்மண் கலந்த மணல் பாங்கானது. நெல், வாழைக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படுறதால அதைச் சுருக்கிக்கிட்டு, இப்போ பப்பாளி சாகுபடியை அதிகரிச்சிட்டேன். ஒரு ஏக்கர் நிலத்துல ரெட்லேடி ரகப் பப்பாளி மகசூல்ல இருக்கு. ஒன்றரை ஏக்கர் நிலத்துல ரஸ்தாலியும், 1 ஏக்கர் நிலத்துல பூலாஞ்செண்டு வாழையும் இருக்கு. வாழை அறுவடைக்கு வர இன்னும் நாலஞ்சு மாசமாகும். மூணு மாசத்துக்கு முன்னாடி ஒன்றரை ஏக்கர் நிலத்துல ரெட்லேடி ரகப் பப்பாளி நட்டேன். மீதி ஒரு ஏக்கர் நிலத்தை உழுது வெச்சிருக்கேன்.
பப்பாளியில் ஊடுபயிரா தட்டைப்பயறையும் வெங்காயத்தையும் போட்டிருந்தேன். பப்பாளிக்குக் கொடுத்த ஊட்டத்திலேயே, இது ரெண்டும் ஓரளவுக்கு விளைஞ்சது. அதை வீட்டுத்தேவைக்கு எடுத்து வெச்சிக்கிட்டேன். அறுவடை முடிஞ்சதும் தட்டைப்பயறு செடியை, அப்படியே விட்டு வெச்சிட்டேன். அது உயிர் மூடாக்காக மாறி கொஞ்ச நாள்ல அப்படியே மட்கி உரமாயிடுச்சு.
பப்பாளியைக் கன்றுகளாக வாங்கி நடவு செய்ய மாட்டேன். விதைகளா வாங்கி வந்து, நானே கன்றுகளை உற்பத்தி செஞ்சுக்கிறேன். எந்த மண்ணுல நடவு செய்யப்போறோமோ, அதே மண்ணுல உற்பத்தி செய்றப்போ நல்ல தரமான கன்றுகள் கிடைக்குது” என்ற சிவபிரசாத் விற்பனை மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.
கானம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் பகுதிகள்ல இருக்கிற பழக்கடைகளில்தான் பப்பாளியை விற்பனை செய்திட்டிருக்கேன். இந்தப் பகுதியில எல்லா விவசாயிகளுமே வாழை, பப்பாளி ரெண்டையும் பரவலா சாகுபடி செய்றாங்க. அதனால, இயற்கை விவசாயத்துல விளைஞ்ச பப்பாளினு கூடுதல் விலையெல்லாம் கிடைக்கிறதில்ல. ஆனா, இயற்கையில் விளையுறதாலயும், சுவை அதிகமா இருக்கிறதாலயும், அதிக நாள் இருப்பு வைக்க முடியுங்கிறதாலயும் என்னோட பழங்களைக் கடைக்காரங்க கேட்டு வாங்குறாங்க.
இப்போ ஒரு ஏக்கர்ல போட்டிருக்கிற பப்பாளிதான் மகசூல் கொடுத்துட்டு இருக்கு. பறிப்புக்கு வந்ததுல இருந்து 9 மாசமா காய் பறிச்சுக்கிட்டு இருக்கேன். நடவு செஞ்சது 860 மரங்கள்; அதுல 40 மரங்கள் சரியா வளரல. மீதி மரங்கள்ல இருந்துதான் பழங்கள் கிடைச்சிட்டு இருக்கு. முதல் ரெண்டு மாசம் 5 நாளைக்கு ஒரு தடவை காய்கள பறிச்சேன். அதுக்கடுத்து, 4 நாளைக்கு ஒரு தடவை காய் பறிச்சிட்டு இருக்கேன். இதுவரைக்கும் 15,582 கிலோ பப்பாளி மகசூலாகியிருக்கு. ஒரு கிலோ 17 ரூபாய்னு விற்பனை செஞ்சுட்டு இருக்கேன். அந்த வகையில 15,582 கிலோ பப்பாளியை விற்பனை செஞ்சது மூலமா 2,64,894 ரூபாய் வருமானமாகக் கிடைச்சிருக்கு. உழவு, விதை, நடவு, இடுபொருள், அறுவடைனு இதுவரைக்கும் 76 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணியிருக்கேன். அதைக் கழிச்சா 1,88,894 ரூபாய் இதுவரைக்கும் லாபமா எடுத்திருக்கேன். சொட்டுநீர் அமைச்சது நிரந்தரச் செலவுங்கிறதால, அதைச் செலவுக்கணக்குல சேர்க்கல.
இன்னும் 5 மாசம் வரைக்கும் பப்பாளி அறுவடை செய்யலாம். ஆனா, தண்ணீர் பற்றாக்குறையா இருக்கிறதுனால எப்படியும் 4 மாசம் வரைக்கும் பழங்கள் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அதுல எப்படியும் 8 ஆயிரம் கிலோவுக்கு மேல பழங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கு. அதை விற்பனை செஞ்சா 1,36,000 ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கு. இன்னும் 4 மாசத்துக்குக் கணக்குப்போட்டால், அறுவடைக்கும் பாராமரிப்புக்கும் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு பண்ண வேண்டியிருக்கும். அதைக்கழிச்சா 1,11,000 ரூபாய் லாபமா நிக்கும்னு எதிர்பார்க்கிறேன். எப்படியும் ஒரு ஏக்கர்ல 3 லட்சம் ரூபாய்க்கு குறையாம லாபம் பார்த்துட முடியும்” என்ற சிவபிரசாத் நிறைவாக,
“பப்பாளி கிட்டத்தட்ட 22 மாசப்பயிர். வருஷத்துக்குனு கணக்குப் பார்த்தா ஏக்கருக்கு ஒன்றரை லட்ச ரூபாய்தான் லாபம். இது பெரிய லாபம் இல்லைனாலும், தண்ணீர்ப் பற்றாக்குறையால விவசாயமே இல்லைனு சொல்லாம, இந்தளவு சம்பாதிக்க முடியுறது என்னைப் பொறுத்தவரையில பெரிய லாபம்தான். அதுக்கு நான் இயற்கை விவசாயத்துக்கும் குறைவான தண்ணீர்லயே விளையுற பப்பாளிக்கும்தான் நன்றி சொல்லணும்” என்று சொன்னபடியே அறுவடைப் பணிகளில் மும்முரமானார்.
தொடர்புக்கு, சிவபிரசாத்,
செல்போன்: 97874 39077

மாதம் ஒரு முறை ஜீவாமிர்தம் கன்று நடவு செய்த
5-ம் நாளிலிருந்து மாதம் ஒருமுறை ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசல் என்ற கணக்கில் பாசனத் தண்ணீருடன் கலந்து விட வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து, கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். கன்று நட்ட 100-ம் நாளுக்கு மேல், பூ பூக்கத் தொடங்கும். இந்தச் சமயத்தில் 200 லிட்டர் தண்ணீரில் 250 கிராம் பெருங்காயப் பொடியை நன்கு கலக்கிப் பாசனத் தண்ணீருடன் கலந்து விட வேண்டும். இதனால், பூக்கள் உதிராமல் பிஞ்சு பிடித்துவிடும். பிஞ்சு பிடிக்கத் தொடங்கும் நேரத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி தேமோர் கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

7 அடி இடைவெளி
தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தைச் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு ஓட்டி, பத்து நாள்கள் காய விட வேண்டும். பிறகு டில்லர் மூலம் 2 முறை உழவு ஓட்ட வேண்டும்.முக்கால் அடி விட்டம், முக்கால் அடி ஆழம் இருக்குமாறு 7 அடி இடைவெளியில் குழிகள் எடுக்க வேண்டும். இந்த இடைவெளியில் ஏக்கருக்கு 889 குழிகள் எடுக்கலாம். ஆனால், நிலத்தின் அமைப்பைப் பொறுத்து குழிகளின் எண்ணிக்கை மாறுபடும். சிவபிரசாத், ஏக்கருக்கு 860 குழிகள் எடுத்திருக்கிறார். குழி எடுத்தவுடன் ஒரு குழிக்கு அரைக் கிலோ அளவு தொழுவுரம் இட்டு, நான்கு நாள்கள் குழியை ஆற விட வேண்டும்.

மாவுப்பூச்சிக்கு வேப்பெண்ணெய்…
பப்பாளியில், மாவுப்பூச்சித் தாக்குதல் அதிகம் இருக்கும். இவை எந்நேரத்திலும் தாக்கக்கூடும் என்பதால், கன்று நட்டதிலிருந்தே தொடர்ந்து கவனித்து வர வேண்டும். மாவுப்பூச்சி தென்பட்டால்,மழை பொழிவது போலத் தண்ணீரைக் கைத் தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.
தண்ணீர் தெளித்த 2 மணி நேரத்துக்குள் 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி வேப் பெண்ணெய், சிறிது காதி சோப் என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து விட வேண்டும்.

பப்பாளிக் கன்று தயாரிப்பு
பப்பாளி நடவு செய்யப்போகும் நிலத்திலிருந்து 100 கிலோ மண் எடுத்து அதனுடன் 30 கிலோ தொழுவுரத்தைக் கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். பிறகு, 4 அங்குல அகலம், 6 அங்குல உயரம் கொண்ட பாலித்தீன் பைகளில் மண்ணை நிரப்பி, பூவாளியால் நீர்த் தெளிக்க வேண்டும். பிறகு, ஒரு பைக்கு ஒரு விதை என்ற கணக்கில் முக்கால் அங்குல ஆழத்தில் ஊன்றி, பைகளை வரிசையாக அடுக்கி பாலித்தீன் ஷீட் கொண்டு மூடி விட வேண்டும். தினமும் தண்ணீர் தெளித்து, ஷீட்டை மீண்டும் மூடி விட வேண்டும். 8-ம் நாளுக்கு மேல் விதைகள் முளைக்கும். தேவையான அளவைவிட சற்றுக் கூடுதலாகக் கன்றுகள் உற்பத்தி செய்துகொண்டால், சரியாக வளராத கன்றுகளை அப்புறப்படுத்திவிட்டு நடவு செய்ய ஏதுவாக இருக்கும். 45-ம் நாளிலிருந்து 60-ம் நாளுக்குள் கன்றுகளை நடவு செய்து விட வேண்டும்.

பீஜாமிர்தத்தில் விதை நேர்த்தி
ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை தேவைப்படும். இந்த விதையை 250 மில்லி பீஜாமிர்தக் கரைசலில் மூழ்க வைத்து எடுத்து, ஓலைப்பாயில் கொட்டி, நிழலில் வைத்து 15 நிமிடங்கள் உலர்த்த வேண்டும். இப்படி விதைநேர்த்தி் செய்து விதைத்தால், வேர் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.

நூற்புழுவை விரட்டும் வேப்பம் பிண்ணாக்கு
கன்று நட்ட 20 மற்றும் 40-ம் நாள்களில் களை எடுக்க வேண்டும். முதல் களை எடுத்த பிறகு, ஒவ்வொரு கன்றின் தூரைச் சுற்றிலும் 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கைத் தூவி மண் அணைக்க வேண்டும். இப்படிச் செய்வதால், நூற்புழுக்கள் வராது. நடவு செய்த 6 மற்றும் 10-ம் மாதங்களில் ஒவ்வொரு கன்றைச் சுற்றிலும் அரைக் கிலோ தொழுவுரம் இட வேண்டும்.

மாலை நேரத்தில் நடவு
சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துக் கன்று நடுவதற்கு முந்தைய நாள் குழிகள் நன்கு நனையும்படி தண்ணீர் விட வேண்டும். காலை வேளையில் நடவு செய்து தண்ணீர்ப் பாய்ச்சினால், வெயிலில் ஆவியாகிவிடும். அதனால், மாலை வேளையில் நடவு செய்தால் கன்று உயிர்ப்பிடித்து வளர ஏதுவாக இருக்கும். குழிக்கு ஒரு கன்று வீதம் நடவுசெய்து பாசனம் செய்ய வேண்டும். முதல் மாதம் தினமும் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
பிறகு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் கொடுத்தால் போதுமானது. பப்பாளிக் கன்றின் வளர்ச்சியைப் பொறுத்து சொட்டு நீர்க் குழாய்களைக் கன்றின் தூரிலிருந்து விலக்கிக்கொண்டே வர வேண்டும். ஊடுபயிர் சாகுபடி செய்ய நினைப்பவர்கள், பப்பாளி நடவு செய்த அன்றே வெங்காயம், தட்டைப்பயறு போன்றவற்றை விதைக்கலாம். இவையிரண்டும் பப்பாளிக்குத் துணைப்பயிர்கள் என்பதால், இந்தப் பயிர்களோடு பப்பாளியின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

9-ம் மாதத்திலிருந்து பறிப்பு
கன்று நட்ட 9-ம் மாதத்திலிருந்து காய்கள் கிடைக்கும். 11-ம் மாதத்துக்கு மேல் மகசூல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கும். நன்றாகப் பராமரித்தால் பறிக்க ஆரம்பித்ததிலிருந்து 16 மாதங்கள் வரை காய்கள்  பறிக்கலாம்.

செம்மண்
ஏற்றது ரெட்லேடி பப்பாளி செம்மண் வகைகளில் நன்கு வளரும். இதை நடவு செய்ய ஆடிப்பட்டமும் கார்த்திகைப் பட்டமும் ஏற்றவை.

முருங்கை சாகுபடி


முருங்கை சாகுபடி..


முருங்கையில் நாட்டு முருங்கை, செடிமுருங்கை என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில், நாட்டுமுருங்கையில் மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும். செடிமுருங்கையில் காய்கள் சற்று திடமாக இருந்தாலும், சற்றே சலசலப்புடனும் இருக்கும். செடிமுருங்கையின் ஆயுள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள். நாட்டு முருங்கையின் ஆயுள் அதிகபட்சம் 50 ஆண்டுகள். செடிமுருங்கை விதை மூலமும், நாட்டுமுருங்கை நாற்றுகள், போத்து (விதை குச்சிகள்) மூலமும் நடவு செய்யப்படுகின்றன.
ஆண்டு முழுவதும் முருங்கைக்கு விலை கிடைக்காவிட்டாலும் கவலைப்படத் தேவையில்லை. அறுவடை செய்யாமல் விட்டு விட்டால் முற்றி நெற்றாகும். அதில் இருந்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். ஒரு ஏக்கரில் இருந்து ஆண்டுக்கு 240 கிலோ விதை கிடைக்கும். ஒரு கிலோ விதை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிட்டத்தட்ட காய் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், விதை மூலம் கிடைத்து விடும்.

* தென்னைநார்க் கழிவோடு சிறிதளவு பஞ்சகவ்யா, சிறிதளவு அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து 40% ஈரப்பதம் இருப்பது போல் பிழிந்து கொள்ள வேண்டும் (ஈரமாக இருக்க வேண்டும். பிழிந்தால் தண்ணீர் சொட்டக் கூடாது. இதுதான் ஊட்டமேற்றிய தென்னை நார்க்கழிவு).
* முருங்கை மரம் பூவெடுக்கும் தருவாயில், அந்த மரத்தில் கட்டை விரல் அளவுள்ள குச்சியில் ஓர் இடத்தில் பட்டையை நீக்க வேண்டும். அந்த இடத்தில், ஊட்டமேற்றப்பட்ட தென்னை நார்க்கழிவை வைத்து, பிளாஸ்டிக் காகிதத்தால் காயத்துக்குக் கட்டு போடுவது போல இறுக்கமாக கட்டி வைக்கவேண்டும்.
* 40 நாட்கள் கழித்துப் பார்த்தால், அந்தப் பகுதியில் புது வேர்கள் உருவாகி இருக்கும். பிறகு, அந்தக் குச்சியை வெட்டி எடுத்து, ஊட்டமேற்றிய மண்புழு உரம் நிரம்பிய பிளாஸ்டிக் பைகளில் வைத்து நீர் ஊற்றி 60 நாட்கள் வளர்த்து நிலத்தில் நடவு செய்யலாம். விவசாயிகள் இப்படி நாற்று தயாரித்து விற்பதன் மூலமும் வருமானம் பார்க்க முடியும்”
முருங்கை சாகுபடி
* முருங்கையை களர், உவர் மண் தவிர அனைத்து மண் வகைகளிலும் பயிரிடலாம். நிலத்தை நன்றாக உழவு செய்து, 16 அடி இடைவெளியில் நீளமாக வாய்க்கால்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.
* வாய்க்கால்களின் மையத்தில் 16 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்துக்குக் குழியெடுத்துக் கொள்ள வேண்டும். இதன்படி பார்த்தால், செடிக்குச்செடி 16 அடி, வரிசைக்கு வரிசை 16 அடி இடைவெளி இருக்கும்.  ஒவ்வொரு குழியிலும் மூன்று கைப்பிடி தொழுவுரம், ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு மற்றும் ஒரு கைப்பிடி மண்புழு உரம் போட்டு நாட்டுமுருங்கை நாற்றை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்து 3 மற்றும் 5-ம் நாட்களில் தவறாமல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
* 20-ம் நாள் ஒவ்வொரு செடியின் தூரிலும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கை வைத்து பாசனம் செய்ய வேண்டும்.
* 40 மற்றும் 70-ம் நாட்களில் புதிய இளம் கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் பக்கவாட்டுக் கிளைகள் அதிகமாக வளரும்.
* 120-ம் நாளுக்குள்  செடியின் வளர்ச்சியைப் பொறுத்து மூன்றாவது முறையாக கவாத்து செய்ய வேண்டும்.
* 6-ம் மாதத்திலிருந்து காய்க்கத் தொடங்கும். ஆண்டுக்கு மூன்று முறை காய்ப்பு இருக்கும். ஒவ்வொரு காய்ப்புக்கும் 40 நாட்கள் மட்டுமே காய் இருக்கும். காயை அறுவடை செய்வதற்கு முன்பாக, ஒவ்வொரு மரத்துக்கும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கு கொடுக்க வேண்டும். அதே போல மகசூல் முடிந்தவுடன், ஒவ்வொரு மரத்துக்கும் 30 கிலோ தொழுவுரம் வைக்க வேண்டும். இதை முறையாகச் செய்தால்தான் தரமான விளைச்சல் கிடைக்கும்.
பூச்சி, நோய் பராமரிப்பு
* முருங்கை இலைகளில் (கீரை) துளைகள் தென்பட்டால் புழுத் தாக்குதல் என்று அர்த்தம். இந்தப்புழு கண்ணுக்குத் தெரியாது. இந்த அறிகுறி தெரிந்தால், இலைகள் முழுக்க நனையும் அளவுக்கு மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்து புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
* சில சமயங்களில் கம்பளிப்பூச்சித் தாக்குதல் இருக்கும். வேப்பெண்ணைக் கரைசல் அல்லது அடுப்புச் சாம்பலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
* ஒவ்வொரு முறையும் பூவெடுக்கும் முன்பாக பஞ்சகவ்யா கரைசலைத் தெளித்து வந்தால், எந்த நோயும் தாக்காது. இயற்கை முறையில் பெரும்பாலும் பூச்சிகள், நோய்கள் வருவதில்லை.

“ஓர்பூடு”

உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு



மாசடைந்த உவர்நிலத்திலிருந்து உப்புத்தன்மையை உறிஞ்சி எடுத்து, அந்த நிலத்தை விவசாயத்துக்கு உகந்ததாக மாற்றும் அபூர்வத் தாவரத்தைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இனம் கண்டுள்ளது.
வறட்சி, பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் மாற்று வழிகளிலும் விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், நச்சுக் கழிவுகளால் நிலத்தில் ஏற்படும் உப்புத்தன்மையை இயற்கை முறையில் அகற்றி, மண்ணை வளமாக்கக்கூடிய தாவரத்தைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அபூர்வத் தாவரம்
வழவழப்பான தடித்த இலைகள், ஊதா நிறப் பூக்களைக் கொண்டு தரையோடு ஒட்டி வளரும் ‘ஓர்பூடு’ எனும் தாவரத்தைச் சில வீடுகளில் அலங்காரத்துக்கு வளர்ப்பதைப் பார்த்திருக்கலாம். இது அழகுத் தாவரம் மட்டுமல்ல, வேறு பல குணாதிசயங்களையும் கொண்டுள்ளது. கால்நடைகளுக்குத் தீவனமாக, புற்றுநோய் எதிர்ப்புத் திறன் கொண்ட மருத்துவ மூலப்பொருளாக, குறிப்பாக மண்ணிலுள்ள சோடியம் உப்பை உறிஞ்சி எடுக்கும் திறன் கொண்ட அபூர்வத் தாவரம் இது.
இயற்கையாக வளரும் இந்தத் தாவரத்தின் மூலம், உப்பு படிந்து மலடாகிக் கிடக்கும் நிலத்தை, பைசா செலவில்லாமல் வளம்மிக்க விளைநிலமாக மாற்ற முடியும் என்பது ஆச்சரியமளிக்கக்கூடியது. சுமார் இரண்டு வருட ஆய்வுக்குப் பிறகு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகச் சுற்றுச்சூழல் அறிவியல் துறையினர் இந்தத் தாவரத்தின் தனித்தன்மையை ஆய்வுபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
உப்பால் வளரும்
இது குறித்து, ஆய்வை மேற்கொண்ட கோவை வேளாண் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை உதவி பேராசிரியர் ஆர்.ஜெயஸ்ரீ பகிர்ந்துகொண்டது:
‘கடற்கரை ஓரங்களிலும், உவர்நிலங்களிலும் ஓர்பூடு என்ற தாவரம் அதிகமாக வளர்கிறது. இது அந்தச் சூழலில் செழித்து வளர்வதால், தனக்குத் தேவையான சத்துகளை உவர் நிலத்திலிருந்தே பெறுகிறது என்பதை இனம் கண்டோம். இதன் தாவரவியல் பெயர் செசுவியம் போர்டுலகாஸ்ட்ரம் (sesuvium portulacastrum).
விரிவான ஆய்வு மேற்கொண்டதில், மண்ணில் உள்ள சோடியம் உப்பைத் தனது வளர்ச்சிக்கு இந்தச் செடி அதிகளவில் எடுத்துக்கொள்வது தெரியவந்தது. இதை ஆய்வுரீதியாக உறுதிசெய்துள்ளோம். பல வகை மாசுகளால் பாழடைந்து கிடக்கும் உப்பு படிந்த நிலத்தை, இந்தத் தாவரம் மெல்லமெல்ல மீட்டெடுத்து நன்னிலமாக மாற்றுகிறது என்பதால், எதிர்காலத்தில் இதன் தேவை பல மடங்கு அதிகமாக இருக்கும்.
70 சதவீத உப்பை உறிஞ்சும்
உப்பு நிறைந்த மண்ணின் மின்கடத்தும் திறன் அதிகமாக இருக்கும். எனவே, சோடியம் உப்புகளால் அதிகம் மாசுபட்ட மண்ணை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். இந்த மண்ணின் மின்கடத்தும் திறன் 7 முதல் 14 இ.சி. புள்ளிகள் (Electrical conductivity) வரை இருந்தது. அதில் மூன்று நிலைகளில் ஓர்பூடு தாவரத்தை வளர்த்தோம். குறிப்பிட்ட கால இடைவெளியில் மண்ணின் மின்கடத்தும் திறன் குறைந்தது. அதாவது உப்புத்தன்மை குறைந்துவந்தது. அதேசமயம் உப்புச் சத்தை எடுத்துக்கொண்டு ஓர்பூடு தாவரம் நன்கு வளர்ந்தது. அதிக அளவில் சோடியத்தை எடுத்துக்கொண்டதால், அதன் தண்டுகள் சிவப்பாகவும், இலைகள் தடித்தும் வளரத் தொடங்கின.
அடுத்த கட்டமாகத் தொட்டிகளிலும், விளைநிலங்களிலும் இச்செடியை வளர்த்து ஆய்வு செய்தோம். அதிலும் இதே முடிவுகள் கிடைத்தன. இந்தச் செடி மண்ணிலிருந்து சுமார் 70 சதவீத உப்புத்தன்மையை உறிஞ்சி எடுக்கிறது. ஒரு மண் உப்புத்தன்மையுடன் இருந்தால், அங்கு எந்தத் தாவரமும் வளராது. ஆனால் இந்தத் தாவரமோ அங்கு வளர்வதுடன், மண்ணை வளமாக்கி விவசாயம் மேற்கொள்ளவும் வழிவகுக்கிறது.
மேலும் அழகுச்செடியாகவும், கால்நடைகளுக்குத் தீவனமாகவும், புற்றுநோய் எதிர்ப்பு மருந்து மூலப்பொருளாகவும், உணவுப் பொருளாகவும் இந்தத் தாவரம் பயன்படுகிறது. குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் இறால் மீனுடன் சேர்த்துச் சமைப்பதற்கு இந்தச் செடியைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் இதை வங்கராசி கீரை என அழைக்கிறார்கள். இந்தச் செடி குறித்த அடுத்தகட்ட ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்த ஆய்வுக்குத் துணைவேந்தர் கு.ராமசாமி, துறைத்தலைவர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் ஊக்கமளித்துவருகின்றனர் என்றார்.
கோவை வேளாண் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை தொடர்புக்கு: 0422- 6611252

செம்மரம் வளர்ப்பு....

செம்மரம் வளர்ப்பு....




செம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவகங்கை மாவட்டம் ஆ.கருங்குளத்தை சேர்ந்த சாதனை விவசாயி எம்.முருகேசன். 

எம்.முருகேசன் செம்மரத்துடன்
செம்மரம் வெட்டியதற்காக தமிழர்களை கொன்று குவித்த ஆந்திரா, இப்போது செம்மரத்திற்கு காப்புரிமை கேட்கிறது என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்துகிறார். அதோடு செம்மரம் என்பதை மற்ற மரங்களைப் போல் சாதாரணமாக வளர்க்க முடியாது. அதற்கு ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கிறது. அந்த நடைமுறைகளையும், மரம் வளர்ந்தபின் அவற்றை வெட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் பற்றியும் தெளிவாக குறிப்பிடுகிறார். 

தனது பண்ணையில் 20,000 செம்மரங்களை வளர்த்து வருகிறார். முதல் தர செம்மரம் ஒரு டன் ரூ.1.5 கோடிக்கு மேல் விலை போகிறது. அது எப்படி என்ற அந்த விவரத்தை இந்தக் காணொலியில் காணுங்கள். நிறைய விவசாயிகள் செம்மரத்தை பயிரிடும்போதுதான் அதன் விலை குறையும். அப்படியே குறையவில்லை என்றாலும் நமது விவசாயிகளாவது 20 வருடங்கள் கழித்து கோடீஸ்வரர்கள் ஆகட்டும்..!

https://youtu.be/5_s3CfSh9pE

இஞ்சியுடன் பால் சேர்ந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்


1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை ஒழுச்சு கட்டிடும்.
3. வாயுத் தொல்லை என்பதே வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி உண்டு.
9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்.

புங்கன் மரம்

புங்கன் மரம்





மருத்துவப்பயன்கள்-: புங்கன் அழுகலகற்றி (ANTI-SEPTIC) செய்கையுடன் கிருமிகளை அகற்றி உடலைத் தேற்றும் குணம் உடையது.

புங்கன் இலைச்சாற்றை வயிறு பொருமலுக்கும், கழிச்சலுக்கும் குறிப்பிட்ட அளவு உள்ளுக்குக் கொடுக்க குணம் தெரியும்.

புங்கன் இலையைக் குடிநீரிட்டு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த கணத்திற்குக் கொடுக்கலாம்.

புங்கன் இலையை ஆரைத்து ரத்த மூலத்திற்குப் பற்றிடலாம்.

புங்கன் இலையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதை குளித்து வந்தாலும் அல்லது ஒற்றடமாக கொடுத்து வந்தாலும் கீல் வாத நோய்கள் கட்டுப்படும்.

புங்கன் பூவை தேவையான அளவுஎடுத்துக் கொண்டு சிறிது நெய் விட்டு வறுத்து இடித்துப் பொடிசெய்து 500 மி.கி. முதல் 1 கிராம் வீதம் உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மேக நோய்கள் குணமாகும் புளிப்பு, வாயு பதார்த்தங்களை இச்சமயம் நீக்க வேண்டும்.

நீரிழிவு நோயினருக்கு அதிக தாகம் ஏற்படும். இதற்கு புங்கம் பூவை கசாயமிட்டு அருந்தி வரலாம்.

புங்கம் விதையிலிருந்து குழித்தைல முறைப்படி எடுக்கப்பட்ட எண்ணெயை குறிப்பிட்ட அளவு உள்ளுக்கும், மேலும் பூசி வர மேகம், பாண்டு முதலிய நோய்கள் குணமாகும். நரை,திரை,மூப்பு நீங்கி இளமையோடு நீண்ட காலம் வாழலாம்.

சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்கு புங்கன் விதைப் பொடியை தேனுடன் கலந்து 1 முதல் 5 அரிசி எடை அளவு கொடுக்க குணம் தரும். இதையே தேள் கடி நஞ்சுக்கும் உண்டால் அவ்விஷம் முறியும்.

புங்கிலிருந்து கிடைக்கும் பாலை புண்களுக்குப் போட்டு வந்தால் விரைவில் அவை ஆறும்.

புங்கன் வேர்ப் பட்டையைப் பொடி செய்து 500 மி.கி. வீதம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால் இருமல், ஈளை முதலியவை குணமாகும்.

புங்கன் வேரை காடியில் அரைத்து விதை வீக்கத்திற்கு பற்றிட்டு வர வீக்கம் குறையும்.

புங்கன் புளி,மா,வேம்பு, கறிவேம்பு ஆகியவற்றின் இலை வகைக்கு 10 கிராம், சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு வகைக்கு 3 கிராம் 1 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 2 முடக்கு வீதம் குடித்து வர மாந்தம், உள் சூடு, பித்த சுரம் ஆகியவை போகும். குழந்தைகளுக்கு 30 மி.லி. வீதம் தினம் 1 வேளைகொடுக்கலாம்.

பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை 2 அல்லது 3 மண்டலம் தேனில் கொள்ள மது மேகம் மதுமேக ரணங்கள் தீரும். புகை, போகம், புளி, மீன் கருவாடு நீக்கவும்.

புங்கம் பூ, புளியம் பூ, பூண்டு, சீரகம், நன்னாரி வேர், வெப்பாலை அரிசி, வசம்பு, வகைக்கு 50 கிராம் இடித்து 1 லிட்டர் பசும்பாலில் அரைத்துக் கலக்கி 1 லிட்டர் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வடிகட்டி அரை முதல் 1 தேக்கரண்டி வரை காலை மட்டும் 1 மண்டலம் கொள்ள சகலக் கரப்பானும், தோல் நோயும் தீரும்.

புங்க வேர், சிற்றாமணுக்கு வேர், சங்கன் வேர் வகைக்கு 40 கிராம் பூண்டுச்சாறு அரை லிட்டர், விளக்கெண்ணெய் 2 லிட்டர் கடுகு ரோகினி 10 கிராம் வாதரசு(வாதமடக்கி) வேர்ப் பட்டை 20 கிராம் இடித்துப் போட்டு 15 நாள் வெயில் புடம் வைத்துக் காலை மட்டும் 1 தேக்கரண்டி கொடுத்து வர எவ்வித சரும ரோகமும், கரப்பான், சொறி, சிரங்கு, புண், புரைகளும் தீரும்

“4அடி உயரமே உள்ள புங்கனூர் மாடுகள்”


4அடி உயரமே புங்கனூர் மாடுகள்..






அழிந்து வரும் 4அடி உயரமே புங்கனூர் மாடுஒரு காலத்தில் வீடுகளில் மாடுகள் இருப்பது கௌரவம் என்ற நிலை, எந்திரங்களின் வரவுக்குப் பிறகு மாறிவிட்டது. பெரும்பாலான தொழுவங்களில் டிராக்டர்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும், மண் மீதும், மாடுகள் மீதும் உள்ள பாரம்பர்யப் பிணைப்பை அறுத்தெரிய விரும்பாத பலர், இன்றைக்கும் மாடுகளை... நாட்டு மாடுகளைப் பராமரித்து வருகிறார்கள். நாம் மறந்துபோன, பாரம்பர்ய விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் நாட்டு மாடுகளின் பங்களிப்பு அபாரமானது. இவற்றின் சிறப்பே, குறைந்த தீவனத்தை எடுத்துக் கொண்டு உழவுக்கு உதவி செய்வதோடு, கணிசமான அளவில் பாலும் கொடுப்பதுதான். கலப்பின மாடுகளின் பாலைவிட நாட்டு மாடுகளின் பாலுக்கு தனிச்சுவை உண்டு. அதிலிருந்து கிடைக்கும் தயிர், மோர், நெய்க்குக்கூட தனிச்சுவை இருப்பதை மறுக்க முடியாது!

காங்கேயம், உம்பளாச்சேரி, புலிகுளம், மணப்பாறை, பர்கூர்... என தமிழ்நாட்டுக்கென பாரம்பர்ய ரகங்கள் இருப்பதுபோல... ஆந்திராவுக்கான சிறப்பு, புங்கனூர், ஓங்கோல் இன மாடுகள். அதிலும் 'புங்கனூர் குட்டை’ என்ற ரகம் இந்திய நாட்டினங்களில் அருகி வரும் இனமாகக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழக-ஆந்திர மாநிலங்களின் எல்லையோரத்தில் இருக்கும் சித்தூர் மாவட்டம், புங்கனூர் மாடுகளுக்குப் புகழ்பெற்ற பகுதி. புங்கனூர் மாடுகளைத் தேடி இம்மாவட்டத்தில் உள்ள குப்பம், சாந்திபுரா, வி.கோட்டா, புங்கனூர் ஆகிய பகுதிகளில் வலம் வந்தபோது, ராமமோகன் என்பவர், நாட்டினங்களை பராமரித்து வருவது பற்றிய தகவல் கிடைத்தது.

மதனப்பள்ளி-பெங்களூரு சாலையில் பதினோராவது கிலோ மீட்டரில் 'செக் போஸ்ட்’ அருகே 'சுரபி பண்ணை’ என்ற பெயரில் மாட்டுப் பண்ணை நடத்திக் கொண்டிருக்கிறார் இந்த ராமமோகன். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், வரவேற்று பண்ணைக்குள்ளே அழைத்துச் சென்றார். அங்கே... தார்பார்க்கர், சிந்தி, காங்கிரேஜ், தியோனி இன மாடுகளும், முர்ரா எருமைகளும் அசைபோட்டுக் கொண்டிருந்தன.

Advertisement

''இந்திய இனங்கள்ல 32 வகைகள் இருக்கு. அதுல நாலு ரகங்கள், குட்டை ரகத்தைச் சேர்ந்தவை. கேரளாவுல இருக்கிற வெச்சூர், மலநாடு கிட்டா, காசர்கோட் குள்ளன் கிட்டா மாடுகள் மாதிரியே... இந்த புங்கனூர் இன மாடுகளும் குள்ளமானவை. மூணு, நாலடி அடி உயரம்தான் இருக்கும். இந்த ரகத்தை, சித்தூர் மாவட்டத்துல இருக்கிற புங்கனூர் ஜமீன்தார், அவரோட பண்ணையில வெச்சு பராமரிச்சு பிரபலபடுத்தினதா சொல்றாங்க. அதனால இதுக்கு 'புங்கனூர் குட்டை’னு பேர் வந்துச்சு'' என்று பெயர்  காரணம் சொன்ன ராமமோகன், தொடர்ந்தார்.

குறைந்த கொழுப்பு... அதிக புரோட்டீன்!

''வெள்ளை, பழுப்பு, கருப்பு, சாம்பல்னு நாலு நிறத்துல இருக்குது. இதோட பால்ல கொழுப்பு குறைவு. இப்பெல்லாம் தினமும் இரண்டு, மூணுவேளை தவறாம டீ, காபி, பால் குடிக்கிறாங்க. உடம்புல கொழுப்புச்சத்து ஏறாம இருக்கணும்னு நினைக்கறவங்களுக்கு, இந்த மாட்டோட பால் ரொம்ப நல்லது. இதுல, புரோட்டீன் சத்து கூடுதலா இருக்கு. பால் ரொம்ப சுவையா இருக்கும். முப்பது வருஷங்களுக்கு முன்ன மாவட்டம் முழுவதும் பரவலா இருந்துச்சு. நாட்டு மாட்டோட அவசியம் நிறைய பேருக்குத் தெரியாததால, இந்த இனங்களோட எண்ணிக்கை படிப்படியா குறைஞ்சுடுச்சு. முன்ன இதோட காளைகளை உழவுக்குக்கூட பயன்படுத்தியிருக்காங்க. இப்போ, காளைகள் குறைஞ்சு போயிடுச்சு. பசுக்களைக் கூட, பாலுக்காகத்தான் வளர்க்கறாங்க. இன்னிக்கு ஆந்திரா முழுசும் தேடினாலே, நூறு மாடுகளுக்குள்ளதான் இருக்கும்.

ஒரு நாளைக்கு ஆறு லிட்டர் பால்!

சாதாரணமா நாட்டு மாடுகளுக்குக் கொடுக்கிற பச்சைப்புல், சோளத்தட்டு, வைக்கோல், தவிடு கலந்த தண்ணி மட்டுமே தீவனமாகக் கொடுத்தா போதும். இந்தவகை மாடுகளுக்கு பாயுற பழக்கம் இல்லாததால, யாரும் பயமில்லாம பராமரிக்கலாம். ஒருவேளைக்கு ரெண்டு லிட்டர்ல இருந்து மூணு லிட்டர் வரைக்கும் பால் கிடைக்கும். ஒரு நாளைக்கு ஆறு லிட்டர். என்கிட்ட இருக்கிற மாடு, இப்போ சினையா இருக்குது. வறட்சி காலங்கள்லயும், இருக்கிற தீனியை வெச்சே சமாளிச்சுடும்'' என்று பெருமையோடு சொன்ன ராமமோகன்,

''சித்தூர் மாவட்டம், பலமனேர் கால்நடை பண்ணையிலும், புங்கனூர் காளைகள், பசு மாடுகள் இருக்கு. அதற்கான செயற்கை கருவூட்டல் ஊசியும் அங்க கிடைக்குது. ஆனா, யாரும் நாட்டு மாடுகள வளக்கறதுக்கு ஆர்வம் காட்ட மாட்டேங்கறாங்க. எங்களை மாதிரி ஆர்வம் உள்ளவங்கள்லாம் குழுவா சேர்ந்து புங்கனூர் மாடுகள பரவலாக்கறதுக்கான முயற்சிகளைச் செஞ்சுட்டு இருக்கோம்'' என்று சொன்னார்.

நல்ல மனம் வாழ்க!

இயற்கை முறையில் அசோலா வளர்ப்பு:

இயற்கை முறையில் அசோலா வளர்ப்பு:


இயற்கை முறையில் அசோலா வளர்க்க எளிய வழிமுறைகள்: 1. இடம் தேர்வு மற்றும் அமைப்பு    2.தரமான தாய் விதைகள்.       3.இடு பொருள்கள்.4. செய்முறை மற்றும் பராமரிப்பு.
               
1.இடம் தேர்வு  அமைப்பு:   அசோலா வளர்க்க மரத்தின் நிழலில் சிமெண்ட் தொட்டி அமைக்க வேண்டும். (குறிப்பு   மாமரம் ,புளியமரம் நிழலில் தொட்டி அமைக்க கூடாது) தொட்டியில் தண்ணீர் வெளியே செல்ல  தொட்டியின் மையமாக  பை அமைத்து கொள்ளவும்.  1 1/2 அடிஉயரம் , 3அடி அகலம் ,10அடி  நீளம் இந்த அளவிற்க்கு தொட்டி அமைத்து கொள்ளவும் . 
2 .தரமான தாய் விதைகள் :        பூச்சி தாக்குதல் இல்லாத விதைகளை தேர்வு செய்து கொள்ளவும். விதைகளை இரண்டுமுறை தண்ணீரில் அலசி விடவும் ஏன் என்றால் விதைகளில் பிற ஒட்டுண்ணிகளின் முட்டைகள் இருக்கும் இதனால் அசோலாவில் நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.  3.இடுபொருள்கள் :
# உங்களுடைய  நிலத்து மண்20 கிலோ        # மக்கிய தொழுஉரம் 2கிலோ(அ) மண் புழு உரம்  . # புதிய சாணம் 1/2கிலோ # தண்ணீர்  தொட்டி யில் 10 செ.மீ அளவில் இருக்கவேண்டும். # முருங்கை கீரை 1/2 கிலோ # வேப்பிலை 1/2 கிலோ# பாறைத் தூள்  2கிலோ (அ) வாழைப்பழம் 4 எண்ணிக்கை .

செய்முறை மற்றும் பராமரிப்பு:  தொட்டி யில் மண், தொழுஉரமம், சாணம் (சாணத்தை கரைத்து சக்கை எடுத்துவிட்டு  தொட்டியில் ஊற்றவும் ) பாறைத்தூள் தண்ணீர், வேப்பிலை முருங்கைக் கீரை பாறைத் தூள் (அ) வாழை பழம்   அனைத்து பொருட்களையும் தொட்டியில் போட்டு நன்றாக கலக்கி விடவும்  பிறகு அசோலா விதைகளை தொட்டியில் போட்டு  மேலே சிறிதளவு தண்ணீர் தெளித்து விடவும் . 15 நாட்களுக்கு ஒரு முறை   முருங்கை கீரை ,வேப்பிலை, சாணம் , வாழை பழம்   கொடுக்க வேண்டும் .  மாதம் ஒரு முறை  தொழுஉரம் (அ) மண் புழு உரம்  கொடுக்க வேண்டும் . மாதம்ஒரு முறை தண்ணீரை மாற்ற வேண்டும்.  #குறிப்பு இந்த முறையில்  அசோலா வளர்ப்பதால்  6 மாதம் வரை நன்றாக  இருக்கும். 6 மாதத்திர்க்கு ஒரு முறை தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்.  10 நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் அசோலா வளர்க்க தயார் செய்து கொள்ளலாம் .

முருங்கை இட்லி பொடி;


முருங்கை இட்லி பொடி;




முருங்கை விதை
கொள்ளு
வர மிளகாய்
பூண்டு
கறிவேப்பிலை
எல்லாவற்றையும் லேசாக வறுத்து உப்பு சேர்த்து அரைத்து எடுக்கலாம்

இந்த பதிவுக்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது
முருங்கையில் கீரை மற்றும் காய்களை உண்கிறோம். விதைகளை நாம் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.

நம்முடைய இந்த அறியாமையை மிகச் சரியாகப் பயன்படுத்தி கார்ப்பரேட் உலகம் கோடிகளில் பணம் குவிக்கிறது.
ஆனால் விளைவிக்கும் முருங்கை  விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை.

எங்கள் அரவக்குறிச்சி பகுதியில் இந்தியாவிலேயே அதிக அளவில் முருங்கை விவசாயம் நடைபெறுகிறது. 
ஆனால் முருங்கை விதைகளை வியாபாரிகள் மிக மிகக் குறைந்த விலைக்கு வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

அங்கு அவை பொடி செய்து கேப்சூல்களில் அடைக்கப்பட்டு மூட்டு வலி மாத்திரைகளாக நம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.

முன்பு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விலை போன முருங்கை விதை இந்த ஆண்டு வெறும் 200 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது.

மூட்டு வலி கேப்சூல் ஒன்றே ஒன்று 360 ரூபாய். 

நாள்பட்ட மாத்திரை உள்ளே புழுத்திருந்தாலும் வெளியே தெரியாது.
 நாம் அப்படியே விழுங்கி விடுவோமே! 

என்ன செய்யலாம் நண்பர்களே

முருங்கை விதைகளைத் தேடி வாங்கி பொடி செய்து உண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்குவோமா
அல்லது... உங்கள் முடிவு

முருங்கை மூட்டு வலி மட்டுமின்றி ஆண்மைக் குறைபாடு, இரத்த சோகை போன்ற எண்ணற்ற நோய்களைக் குணமாக்கும் ஆற்றல் கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும்

இந்தப் பதிவுக்கு எல்லோரும் லைக் கமெண்ட் போட்டுட்டுப் போகாதீர்கள்..
முருங்கை விதைகளைத் தேடி வாங்கி உணவில் சேருங்கள்.

இனிப்புத் துளசி...

இனிப்புத் துளசி:



சர்ககரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்பு சர்க்கரையைப் பயன்படுத்த முடியாமல் உள்ளனர். தற்போது இவர்கள் கரும்பு சர்க்கரைக்குப் பதிலாக இனிப்புத் துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரையைப் பயன்படுத்தலாம். ஏனெனில், இனிப்புத் துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரை, கலோரிகளை உருவாக்குவதில்லை. ஆகவே இதனைக் கரும்பு சர்க்கரைக்குப் பதிலாகவும், செயற்கை இனிப்பூட்டிகளான சாக்கரின், அஸ்பார்டேன் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.

இனிப்புத் துளசியில் உள்ள வேதிப்பொருள்கள்:

இனிப்புத் துளசியின் இலைகளில் உள்ள ஸ்டீவியோசைடு (Stevioside)  மற்றும் ரெபடையோசைடு (Rebaudioside) என்னும் வேதிப்பொருள்களே இனிப்புத்தன்மைக்கு முக்கிய காரணமாகும். இனிப்புத் துளசியின் இலைகள் கொண்டுள்ள இனிப்பின் அளவை கரும்பு சர்கரையோடு ஒப்பிட்டு பார்த்தால், கரும்பைவிட 30 மடங்கு அதிக இனிப்பு கொண்டுள்ளது. மேலும், ஸ்டீவியோசைடில் உள்ள இனிப்பின் அளவு சர்க்கரையைவிட 200-300 மடங்கு அதிகமாக உள்ளது. இனிப்புத் துளசியின் உலராத இலைகளில் (Fresh leaves) 15-20 சதவிகிதம் என்ற அளவில் ஸ்டீவியோசைடு என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது. உலர் இலைகளில் (Dried leaves) ரெபடையோசைடு – ஏ (Rebaudioside-A)  2-4 சதவிகிதமும் உள்ளது. மேலும் கார்போஹைட்ரேட், சோடியம், மெக்னிசியம், கால்சியம்,  பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளது.

இனிப்புத் துளசியை இனிப்பூட்டியாக (Sweetener) பயன்படுத்துவதால் 
வரும் நன்மைகள்: 

இரத்த அழுத்தம் (Blood pressure) மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் (Blood sugar) அளவை அதிகரிக்கச் செய்வதில்லை.

இனிப்பு துளசியானது கலோரிகளை உருவாக்குவதில்லை (zero Calories) மற்றும் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதில்லை.

ஸ்டிவியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளது.

சர்க்கரை நோயாளிகள் இனிப்பு துளசியின் பொடியை  டீ, காபி போன்ற குளிர்பானங்கள், ஐஸ்கிரிம், சாக்கலேட், இனிப்புகள், பிஸ்கட், பாயாசம் மற்றும் பழச்சாறு போன்றவற்றில் சர்க்கரைக்குப் பதில் பயன்படுத்தி உண்டு மகிழலாம்.

இதைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் இல்லை.

மரங்களும் மற்றும் அதன் பயன்கள் :

மரங்களும் மற்றும் அதன் பயன்கள் :




மரங்கள் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப, பலப்பல சூழ்நிலைகளுக்கேற்ப, அவரவருக்குத் தேவையான மரங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த மரங்கள் நமது சூழ்நிலைக்கேற்ப மற்றும் நாம் தேவைக்கு ஏற்ப வளர்க்கலாம் என்பதை பார்ப்போம் வாருங்கள்.

கோடை நிழலுக்கு :

வேம்பு, 
தூங்குமூஞ்சி, 
புங்கன், 
பூவரசு, 
மலைப்பூவரசு, 
காட்டு அத்தி, 
வாத மரம்.

பசுந்தழை உரத்திற்கு :

புங்கம், வாகை இனங்கள், கிளைரிசிடியா, வாதநாராயணன், ஒதியன், கல்யாண முருங்கை, காயா, சூபாபுல், பூவரசு.
கால்நடைத் தீவனத்திற்கு :
ஆச்சா, சூபாபுல், வாகை, ஒதியன், தூங்குமூஞ்சி, கருவேல், வெள்வேல்.

#விறகிற்கு :

சீமைக்கருவேல், 
வேலமரம், 
யூகலிப்டஸ், 
சவுக்கு, 
குருத்தி, 
நங்கு, 
பூவரசு, 
சூபாபுல்.

#கட்டுமான_பொருட்கள் :

கருவேல், 
பனை, தேக்கு, 
தோதகத்தி, 
கருமருது, 
உசில், 
மூங்கில், 
விருட்சம், 
வேம்பு, 
சந்தனவேங்கை, 
கரும்பூவரசு, 
வாகை, 
பிள்ளமருது, 
வேங்கை, 
விடத்தி.

#மருந்து_பொருட்களுக்கு :

கடுக்காய், 
தானிக்காய், 
எட்டிக்காய்.

#எண்ணெய்க்காக :

வேம்பு, 
பின்னை, 
புங்கம், 
இலுப்பை, 
இலுவம்.

#காகிதம்_தயாரிக்க :

ஆனைப்புளி, 
மூங்கில், 
யூகலிப்டஸ், 
சூபாபுல்.

#பஞ்சிற்கு :

காட்டிலவு, 
முள்ளிலவு, சி
ங்கப்பூர் இலவு.

#தீப்பெட்டித்_தொழிலுக்கு :

பீமரம், 
பெருமரம், 
எழிலைப்பாலை, 
முள்ளிலவு.
தோல்பதனிடவும், 

#மை_தயாரிக்கவும் :

வாட்டில், 
கடுக்காய், 
திவி – திவி, 
தானிக்காய்.

#நார்_எடுக்க :

பனை, 
ஆனைப்புளி.

#பூச்சி_மருந்துகளாகப்பயன்படுத்த :

வேம்பு, 
புங்கம், 
ராம்சீதா, 
தங்க அரளி.

#கோயில்களில்_நட :

வேம்பு, 
வில்வம், 
நாகலிங்கம், 
தங்க அரளி, 
மஞ்சளரளி, 
நொச்சி, 
அரசு.

#குளக்கரையில்_நட :

மருது, 
புளி, 
ஆல், 
அரசு, 
நாவல், 
அத்தி, 
ஆவி, 
இலுப்பை.

#பள்ளிகளில்_வளர்க்க :

நெல்லி, 
அருநெல்லி, 
களா, 
விருசம், 
விளா, 
வாதம், 
கொடுக்காப்புளி, 
நாவல்.

#மேய்ச்சல்_நிலங்களில்_நட :

கருவேல், 
வெள்வேல், 
ஓடைவேல், 
தூங்குமூஞ்சி.

#சாலை_ஓரங்களில்_நட :

புளி, 
வாகை, 
செம்மரம், 
ஆல், 
அத்தி, 
அரசு, 
மாவிலங்கு.

#அரக்கு_தயாரிக்க :

குசும், 
புரசு மற்றும் ஆல்.

#நீர்ப்பரப்பில் (கண்மாய்) பயிரிட :

கருவேல், 
நீர்மருது, 
நீர்க்கடம்பு, 
மூங்கில், 
வேலிக்கருவேல், 
நாவல், 
தைல மரம், 
ராஜஸ்தான் தேக்கு, 
புங்கன், 
இலுப்பை மற்றும் இலவமரம்.

கால்நடைகளின் குடற்புழு நீக்கம் செய்ய மூலிகை மருத்துவம்

கால்நடைகளின் குடற்புழு நீக்கம் செய்ய மூலிகை மருத்துவம்:




தேவையான பொருட்கள் :-
சீரகம் - 15 கிராம்
கடுகு - 10 கிராம்
மிளகு - 5
மஞ்சள் தூள் - 65 கிராம்
பூண்டு - 5 பல்
தும்பை இலை - ஒரு கைப்பிடி
வேப்பிலை - ஒரு கைப்பிடி
வாழைத்தண்டு - 100 கிராம்
பாகற்காய் - 50 கிராம்
பனைவெல்லம் - 150 கிராம்

செய்முறை :-

சீரகம் , மிளகு, கடுகு ஆகியவற்றை இடித்து, அத்துடன் மற்றவற்றை சேர்த்து அரைத்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, நூறு கிராம் கல் உப்பில் புரட்டி எடுத்து, நாக்கின் மேல் பகுதியில் வைத்தால் மாடு அதை விழுங்கி விடும். மொத்த உருண்டைகளும் ஒரு மாட்டுக்கானது. ஒரே நேரத்தில் கொடுக்கப்படவேண்டும்.

மாதம் ஒருமுறை அல்லது இருமாதத்திற்கு ஒருமுறை தரவேண்டும்.

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள்

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள். =================================  February 7, 2019 (ப.ப) இன்றைக...

உழவர் சந்தை